<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6886596</id><updated>2011-04-22T02:36:16.775+05:30</updated><category term='குறிப்புகள்'/><title type='text'>கசாகூளம்</title><subtitle type='html'>என் எண்ணங்கள் , இவ்வுலகைப் பற்றி ....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>59</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-3154175543264402450</id><published>2007-04-06T21:44:00.000+05:30</published><updated>2007-04-06T21:51:25.104+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்புகள்'/><title type='text'>விசித்திரமான நான்</title><content type='html'>என்னோட விசித்திரமான குணங்களில் சிலவற்றை பட்டியலிடும் இந்த ஆட்டத்துக்கு அழைத்தார் &lt;a href="http://mathy.kandasamy.net/musings/2007/04/03/665"&gt;மதி&lt;/a&gt;. எல்லாமே விசித்திரமான குணமாக இருக்கும் நிலையில் சிலவற்றை பட்டியலிட்டுருக்கிறேன் (ரொம்பவும் க்ளிஷேடான இன்ட்ரோ தான், வேற வழியில்லை :(  )&lt;br /&gt;&lt;br /&gt;4. Obsessive Compulsion - இது இன்னும் disorder அளவுக்கு போகலை அவ்ளோதான். மத்தபடி எதாவது ஒரு பிடித்த விஷயம் என்றால் அது திகட்டும் வரை செய்து கொண்டே இருப்பது. தந்தூர் பிட்ஸா, பொடி தோசை, தமிழ்மணம்,  கோல்ட் சாக்லேட் வித் க்ரீம், வெங்கட் சாமிநாதன், ஆதவன், நியு புக்லேன்ட்ஸ், சத்யம் தியேட்டர், இப்போதெல்லாம் பி.வி.ஆர், பி.டி.ம் லேஅவுட்டில் உள்ள பானிபூரி கடை, ப்ளாக்லைன்ஸ் என்ற இந்த பட்டியல் அடிக்கடி மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. Left and Right - இது ஒரு சரியான குழப்பம் எனக்கு. இடப்பக்கத்திற்கு வலம் என்றும் வலப்பக்கத்திற்கு இடம் என்றும் மாற்றி  குழம்புவது. இதனால் அவதிப்படுபவர்கள் ஆட்டோ டிரைவர்களும், நான் ரூட் சொல்ல வண்டி ஓட்டும் நண்பர்களும் தான். ஒருமுறை வலப்பக்கம் கையைக்காட்டிக் கொண்டே, "பாஸ் ! இந்த லெஃப்ட்டு பாஸ், இந்த லெஃப்ட்டு" என்று சொல்லி ஒரு ஆட்டோக்காரரிடம், எங்கிருந்து புடிச்சாங்க இந்த சனியனை என்ற பார்வையினை பரிசாக பெற்றதினை என் ரெஸ்யூமேவில் மட்டும் தான் இன்னும் போடவில்லை. மேட்ரிக்ஸ் படத்தில் வில்லன் ஸ்மித்தால் துரத்தப்படும் நியோவிடம் போனில் வழி சொல்லும் டேங்க் "Door on your left" என்று சொல்வான், நியோ ரைட் சைட் திரும்பியதும் "Your other left" என்று டேங்க் சொல்லும் போது ஏற்பட்ட அந்த அல்ப சந்தோஷம், அனுபவிச்சாத்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. காஃபி ஃபோபியா - ஆமா, எனக்கு காஃபி பிடிக்காது. ஒத்துக்கிறேன் நான் ஒரு ஜந்து தான். என்ன இன்னும் வளர்லயா நான்? - ரைட்டு. என்னது சவுத் இண்டியனா இருக்க லாயக்கியில்லையா? - சரிய்யா விட்டுத்தள்ளுங்க. உங்க வூட்ல உங்க நைனா, இயற்கை வைத்தியம் முகாம் எல்லாம் போவாரா. போனா தெரியும். எங்கப்பா அதுமாதிரி ஒரு முகாம் போய்ட்டு வந்துட்டு, பாலே குடிக்கக்கூடாது என்ற கொள்கையில் கொஞ்சம் விலகி, கடுக்காய் இல்லனா பனவெல்லம் ஒ.கே என்ற நிலைக்கு வந்து, காம்ப்ளேன் வாங்கின ஃப்ரிஸ்பீ இலவசமாம், விவா வாங்கினா பெட் ஜார் ஃப்ரீ என்ற கன்ஸ்யூமரிஸ கொள்கையினால் விடுதலை பெற்ற என பால்ய பருவம், காஃபி வறட்சி நிறைந்தது. இப்படி வளர்ந்ததால், எங்க ஹாஸ்டலில் காப்பி என்ற பேரில் வரும் ப்ரவுன் நிற திரவத்திற்கும், காஃபி டே காஃபிக்கும், கல்மனே காஃபிக்கும், எனக்கு ரொம்ப வித்தியாசம் எல்லாம் தெரியாது. அதெப்படிங்க, சூடா, கசப்பா, நுரையோட...ஒயக்.....காஃபிய குடிக்கிறிங்க.  ஒரு தடவ காஃபி டேல கோல்ட் சாக்லேட் வித் க்ரீம் குடிச்சு பாருங்க, சூப்பரா இருக்கும் (ஆனா, லேசா, கொஞ்சமா பூஸ்ட் இல்ல போன்விட்டா டேஸ்ட் இருக்கும். அதெல்லாம் கண்டுக்கப்படாது.. சரியா)&lt;br /&gt;&lt;br /&gt;1. ஹி..ஹி..இந்த விஷயம் என் சுத்தியிருக்கிற எல்லாரும் கேக்குறது. " பாவம் விட்டுடு. ஏன் கொடும படுத்துற. உனக்கு மனசாட்சியே இல்லையா." என்று கெஞ்சிவிட்டார்கள். நக்கல் அடித்தும் பார்த்துவிட்டார்கள். நான் விடுவதாக இல்லை. வேற எதுவும் இல்லைங்க, என் சுந்தர தெலுங்கினைதான். நமக்கு மேற்கு பக்கம் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் மனவாடுகள், "வெள்ளுத்தாமா" என்று கேட்க,  நான் "போத்தாமா" என்றும், அவங்க "ச்ச்சால பாக உந்தி"ன்னு சொல்ல, நான் மட்டும் "கொள்ள நஸ்ஸா உந்தி" என்று மாட்லாடுவேன். என்னை சுற்றி இருப்பவர்களுக்கு எல்லாம் பொறாமை வேற எதுவும் இல்லை. என்னால் மட்டும், சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தினைப் பார்த்து முருகதாஸின் டைரக்ஷன் திறமையினை வியக்க முடிகிறது, ஜெமினி ம்யூசிக் சேனலும் சரி சன் ம்யூசிக் சேனலையும் ரசிக்க முடிகிறது, நாகார்ஜுனா ஒட்டலில் உள்ள சர்வர் எங்களை என்ன திட்டுகிறார் என்று புரிந்து கொள்ளவும் முடிகிறது என்று தான். ஆனால் என்ன, தெலுங்கு தெரிந்த என் நண்பன் இருக்கும் போது எங்க அப்பா இல்ல அம்மா போன் செய்தா, பேசுவதற்கு ரொம்பவே கூச்சமாதான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அம்புட்டுதாங்க. யாரைக்கூப்பிடறதுன்னு தெரில. உங்களுக்கு பகிர்ந்துக்கனும்னு தோணிச்சுன்னா, கண்டிப்பா பதிவு பண்ணுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-3154175543264402450?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/3154175543264402450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=3154175543264402450' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/3154175543264402450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/3154175543264402450'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2007/04/blog-post.html' title='விசித்திரமான நான்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-113626134196073104</id><published>2006-01-03T09:35:00.000+05:30</published><updated>2006-12-17T17:56:04.050+05:30</updated><title type='text'>Rereadings</title><content type='html'>&lt;a href="http://www.amazon.com/gp/product/0374249423/qid=1136260497/sr=8-2/ref=pd_bbs_2/104-2022888-4222311?n=507846&amp;s=books&amp;amp;v=glance"&gt;ஆன் ஃபேடிமேன்&lt;/a&gt; என்ற எழுத்தாளர் &lt;a href="http://www.hindu.com/lr/2005/12/04/stories/2005120400270600.htm"&gt;சொன்ன&lt;/a&gt;, எனக்கு மிகவும் பிடித்த, வரி :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-size:130%;"&gt;"If a book read when young is a lover, then the same book, reread later on is a friend. This may sound like a demotion, but after all, it is old friends, not old lovers, to whom you are most likely to turn when you need comfort...... "&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இவ்வரியை படித்துவிட்டு இப்படத்தை பார்க்கையில், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Sanjeeth.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/320/Sanjeeth.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-113626134196073104?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/113626134196073104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=113626134196073104' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/113626134196073104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/113626134196073104'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2006/01/rereadings.html' title='Rereadings'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-113103628653190838</id><published>2005-11-03T21:36:00.000+05:30</published><updated>2006-08-09T22:16:32.653+05:30</updated><title type='text'>ஆர்.சூடாமணி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/RChudamani.0.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7586/211/400/RChudamani.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு தமிழ் துணைப் பாட நூலை படிக்க நேர்ந்தது. &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D"&gt;புதுமைப்பித்தன்&lt;/a&gt;, &lt;a href="http://http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D"&gt;ஜெயகாந்தன்&lt;/a&gt;, ரகுநாதன், ராஜாஜி என பலர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு அந்த துணைப்பாட நூல். அதிலிருந்த ஒரு சிறுகதை மிக அருமையாக இருந்தது. ஆர்.சூடாமணி என்பவர் எழுதியது. அது வரை அப்பெயரினைக் கேள்விப்பட்டதில்லை. இணையத்தில் தேடிப் பார்த்தபோது அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பது தெரிந்தது. இவரைப் பற்றி இவ்வாறு நான் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, சென்ற மாதம் &lt;a href="http://www.thehindu.com/lr/2005/10/02/stories/2005100200100600.htm"&gt;ஹிந்து லிட்ரரி ரிவ்யூவில்&lt;/a&gt; இவரைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை வந்தது எனக்கு ஒரு நல்ல ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில சுட்டிகள் : &lt;ol&gt;&lt;li&gt;கூகிள் ப்ரிண்டில் இவரைப் பற்றி &lt;a href="http://print.google.com/print?hl=en&amp;id=Y-TMhtk5AUYC&amp;amp;pg=PA64&amp;lpg=PA64&amp;amp;dq=chudamani+raghavan&amp;prev=http://print.google.com/print%3Fq%3Dchudamani%2Braghavan%26btnG%3DSearch%2BPrint%26hl%3Den&amp;amp;sig=uAwbDC7SnUDlDP_IO5BG1ovFDsY&amp;pli=1&amp;amp;auth=DQAAAHAAAADfFoq17FtKm5UkanWUqqBd9-jhCnUDQdm_Lmozf9gHDI7OWv2q3T597SXtM5MVrHXn-gmOm-v1Fpse3gc_aJuhERdv3uCXO_DGehJ9a1Tk_TBIs6v-PpGsfiZCdmEpHDxrHMe-vzDHxzFg5Eyx0zL5"&gt;தேடிய போது&lt;/a&gt; வந்த &lt;a href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/RChudamani.jpg"&gt;குறிப்பு&lt;/a&gt;. &lt;a href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/RChudamani.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/RChudamani.jpg"&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஆங்கிலத்தில் சூடாமணி எழுதிய &lt;a href="http://print.google.com/print?hl=en&amp;id=Iol0n7497OcC&amp;amp;pg=PA79&amp;lpg=PA79&amp;amp;dq=counting+flowers&amp;prev=http://print.google.com/print%3Fq%3Dchudamani%2Braghavan%26btnG%3DSearch%2BPrint%26hl%3Den&amp;amp;sig=ru6vxPdWiWGGSxOR5-QFWz47feg"&gt;"Counting the Flowers" &lt;/a&gt;என்ற சிறுகதை (இதைப் படிக்க கூகிள் மெயில் பயனராக இருக்கவேண்டும்) .&lt;/li&gt;&lt;li&gt;நேசமுடன் வெங்கடேஷ், சூடாமணியை சந்தித்த அனுபவம் பற்றி &lt;a href="http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=9&amp;fldrID=1"&gt;எழுதிய கட்டுரை&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;நான் ரசித்த சிறுகதை இங்கே :&lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இணைப் பறவை - ஆர்.சூடாமணி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கே வரேளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ஹூம்."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களைப் பார்க்கத்தானே அவா...."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு யாரையும் பார்க்கவேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களைப் பார்க்காம போவாளா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்பவே மாட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ நான் செத்துப் போயிட்டேன்னு சொல்லு போ"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதி மறு பேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனை பேர் வந்து விட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன்! பாடம் ஒப்பிகிற மாதிரிதான். "பாவம் இந்த வயசில் உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வேணாம்". "போனவ புண்ணியவதி, பழுத்த சுமங்கலியாய் மஞ்சக் குங்குமத்தோட ஜம்னு கல்யாணப் பொண்ணாட்டம் போய்ட்டா. அதை நினைச்சுத்தான் நீங்க மனசைத் தேத்திக்கணும்". "பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் உங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறா. பேரன் பேத்திகளுக்கு உங்க மேல உசிரு. அதை நினைச்சு ஆறுதாலாயிருங்கோ."&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம் தள்ளாத வயசில் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட இடி !...." ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத, வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால். தாத்தாவுக்கு எப்படி இருக்கும்...?&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவர்களை அப்படி பேசி வெளியே அனுப்பிவிட வேண்டுமென்ற உறுதியோடு அவள் சென்றாள். ஆனால் பயனில்லை; அவள் நாசூக்காக எவ்வளவு உணர்த்தியும் கேட்காமல் அவர்களில் ஒருவர் தாத்தாவைப் பார்த்தே தீருவதென்று பின் கட்டுக்கு வந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, மிஸ்டர் சாரி...."&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுக்கொட்டிலின் பக்கத்தில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் உடல் விறைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு! வரதனா ? வாங்கோ, ஆகாசத்தைப் பார்த்தேளா ? மழை வரும்போல இல்லே?" என்றார் தாத்தா திரும்பாமலே.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவர் திகைத்துப் போனார். சட்டென்று பேச முடியவில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பேசவே காணோம் ? மழை வந்தா இப்போ ஊரிலிருக்கிற தண்ணிக் கஷ்டத்துக்கு விமோசனம் பிறக்கும், இல்லையா ?" என்றார் தாத்தா தொடர்ந்து. பிறகு திரும்பி நின்று வந்தவரைப் பார்த்துப் புன்னகை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க அப்படி நினைக்கல போலிருக்கு. அதுவும் சரிதான். நம்ம வறட்சிக்கு கொஞ்ச மழை போறாதுதான். நன்னா அடிச்சுப் பெய்யணும், உங்களுக்கு என்ன தோண்றது?"&lt;br /&gt;&lt;br /&gt;துக்கம் விசாரிக்க வந்தவர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார். "விஷயத்தைக் கேள்விப்பட்டேன் மிஸ்டர் சாரி. அப்போ நான் ஊரில்லே. திருச்சிக்கு ஒரு காரிய்மாப் போயிருந்தேன். வந்ததுமே இப்படின்னு சொன்னா. மனசு ரொம்ப சங்கடப்பட்டுது. ஆறுதலா உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே...."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ரெண்டாவது பையன் ஏதோ இன்ட்டர்வ்யூக்குப் போயிருந்தானே என்ன ஆச்சு ?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க அதை நெனைக்கூடாதுன்னு இருக்காப்ல இருக்கு. ரொம்ப விவேகந்தான். துக்கத்துக்கு இடம் கொடுத்தா அப்புறம் மனுஷன் மீளமுடியாது. நீங்களாவே தான் எப்படியோ மனசைத் தேத்திக்கணும். இந்த வயசில் உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்கப்படாது. என்னதான் மாமி தன் வரைக்கும் ஒரு குறையும் இல்லாம மகாலக்ஷ்மியாட்டம் போய்ட்டாள்னாகூட......"&lt;br /&gt;&lt;br /&gt;"பாங்க் வேலையாத்தானே அந்த இன்ட்டர்வ்யூ ? அல்லது வேறேதும் கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டுருந்தானா ? "&lt;br /&gt;&lt;br /&gt;வரதன் அவரை வெறிக்கப் பார்த்தார். ஒரு விநாடி மனத்தில் மின்னிய சந்தேகத்தை அடக்கிக் கொண்டார். சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"சில சிநேகிதாளோடு வந்திருக்கேன். அவாளுக்கு எங்கேயோ கடைத் தெருவுக்குப் போகணுமாம்...இத்தனைப் பெரிய உலகித்தில் மாமிக்குத்தான் இடமில்லாமல் போய்டுத்து ? ஆனா நம்ம கையில் என்ன இருக்கு ? எல்லாம் அவன் செயல். உயிர் என்னிக்கிருந்தாலும் அநித்தியந்தான். மனசைச் சமாதானப் படுத்திகணும். பெருமாள் உங்களுக்கு அதுக்கான தெம்பை கொடுக்கட்டும். தைரியமாய் இருங்கோ ஸார்... இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்வா...."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ கிளம்பிட்டேளா ? சரி போயிட்டு வாங்கோ. இன்னொரு நாள் சாவகாசமா வாங்களேன். வெய்யத்தாழ வந்தால் 'ப்ளெஸண்ட் வாக்'காகவும் இருக்கும்" என்றார் தாத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதி எச்சிலை விழுங்கிக்கொண்டாள். அறுபதாண்டுகால உறுதுணையின் இழப்பு. அதை இழப்பு என்று சொல்லிவிட்டால் போதுமா ? அதை ஏந்துவதற்கு வார்த்தையில் இடமுண்டா ? அறுபது ஆண்டுகள் ! பிரபவ, விபவ என்று தொடங்கி அக்ஷய வரையில் ஒரு வட்டமே முழுசாக அடங்கிவிட்ட தாம்பத்தியம். அறுபது வருடத் தோழமை மட்டுந்தானா? பாட்டியைத் தவிர இன்னொரு பெண்ணை இவர் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. "நான் ரொம்ப குடுத்து வச்சவடீ" என்று பாட்டி எத்தனைதரம் கண்களில் நீர் மல்கச் சொல்லிக் கசிந்திருக்கிறாள் !. செத்த முகத்தில் கூட அந்த பரவசம் மாறாமல் இருந்தது. அதன் அர்த்ததின் விரிவுகளையெல்லாம் கேவலம் துக்க விசாரிப்பு என்ற சம்பிரதாயத்தின் எல்லைகளுக்கு அடக்கி வைக்க முடியுமா? வார்த்தைகளுக்கு எப்போது மௌனமாய் இருக்கவேண்டும் என்று தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை" என்றார் தாத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல பொண்ணு. இப்படி வா"&lt;br /&gt;&lt;br /&gt;பின்கட்டுத் தாழ்வாரப் படிகளிலே மேல் படியில் பாட்டி வழக்கமாக உட்கார்ந்து காற்று வாங்கும் படியில் தாத்தா உட்கார்ந்துக் கொண்டார். அவளை அருகில் இருத்திக் கொண்டு அவள் கையைத் தம் கையில் பற்றிக் கொண்டார். பார்வை மறுபடியும் மல்லிகைக் கொடியில் நிலைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. நிறைந்து ததும்பும் பாத்திரத்திலிருந்து துளிகள் சிந்திவிடாதபடி ஜாக்கிரதையாகப் பற்றுவதுபோல், ஸ்ரீமதி அந்த மௌனத்தை வெகு கவனமாகப் பாதுகாத்தாள். தாத்தாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சிறு சலனங்கூட ஒரு குறுக்கீடென்று கருதி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது அவர் உடம்பில் ஒரு நடுக்கம் பாய்வதை மட்டும் அவளால் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, சாப்பிட போகலாமா ?"&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ஆகிவிட்டதா என்ன ? ஸ்ரீமதியின் தந்தை பின்னால் நின்று குரல் கொடுத்தப் போது, அந்த ஒலி ஒரு பாறாங்கல்லாக மௌனத்தின் மீது விழுந்தது. ஸ்ரீமதி பதறிக் கொண்டு தாத்தாவைப் பார்த்தாள். ஆனால் அவர், "ம்.. வரேன் போ" என்றார். சாதாரணமாக, ஸ்ரீமதியின் கையை விட்டுவிட்டு, "நீயும் போய் எலையிலே உக்காரு, வந்துடறேன்" என்றார். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவர் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்" என்றார் ஸ்ரீமதியின் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு" என்றான் ஸ்ரீமதியின் தம்பி. "பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதியின் அண்ணன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் புதிதாகத் திருமணம் ஆனவன். மனைவி இன்னம் வீட்டுக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து" என்றாள் ஸ்ரீமதியின் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம் அப்பா ! அவர் வாய்விட்டுக் கதறி அழுத்துட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது" என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.&lt;br /&gt;"அது என்ன துக்கமோ ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதி எழுந்துவிட்டாள். "நான் போய்த் தாத்தாவைக் கூப்பிட்டு வர்ரேன்" என்று சொல்லி வேகமாய் அறையை விட்டுச் சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா வந்து உட்கார்ந்துச் சாப்பிட்டார். எதுவுமே பேசவில்லை. ஸ்ரீமதியின் தாய் எப்போதும் போல அவருக்கு மரியாதையுடன் பரிமாறினாள். தாத்தா அவ்வப்போது தலை நிமிர்ந்த போதெல்லாம் அவர் பார்வை நாற்புறமும் ஏதோ தேடுவதுபோல் அலைந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துப் போய்க் கைக்கழுவிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிப்பல் தட்டில் சாதம் எடுத்து வந்த ஸ்ரீமதியின் தாய் வியப்புடன், "என்ன மாமா, அதுக்குள்ளே எழுந்துட்டேளே?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ? சாப்டுட்டேன், எழுந்துண்டேன்" என்று தாத்தா பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மோர் சாதம் சாப்பிடலையே இன்னும் ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ" என்றார் தாத்தா. பிறகு, "பரவாயில்லை, வயிறு ரொம்பிடுத்து" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதியின் தந்தை அவரை அனுதாபத்துடன் நோக்கினார். "புரியறது அப்பா! எனக்கும் அதே மாதிரிதான் இருக்கு. துக்கம் நெஞ்சை அடைக்கற போது என்ன செய்யறோம்னே சில சமயம் நினைவிருக்கிறதில்ல. ஒவ்வொரு நிமிஷமும் அம்மா ஞாபகம் வந்துண்டே இருக்கு. எங்கே பாத்தாலும் அவ நிக்கற மாதிரியே தோண்றது. அம்மா உயிரோடு இல்லேன்னே இன்னமும் நம்ப முடியலே...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ரீமதி நன்னா வளர்ந்துட்டா. சீக்கிரம் அவளுக்கும் வரன் பார்க்க ஆரம்பிக்கணும்" என்றார் தாத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அந்த அறையை விட்டுச் சென்றதும் ஸ்ரீமதியின் தம்பி தன் தந்தையிடம், "தாத்தாவுக்கு கல்யாணம் ஆகறச்சே அவருக்கு என்ன வயசுப்பா ?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ அவசியம் தெரிஞ்சுண்டாகணுமோ. போடா, சாப்ட்டாச்சுன்னா எழுந்து கையலம்பிண்டு போய்ப் படி"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதியும் அவள் சகோதரர்களும் அங்கிருந்து சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா ஆனாலும் அழுத்ந்தான்" என்றான் ரங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு அவரைப் பாக்கறபோது பயமா இருக்கு" என்றாள் கனகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி உணர்ச்சியில்லாம மனுஷன் நடந்துக்க முடியுமான்னுதான். பாவம் உங்கம்மா அவருக்காக கொஞ்சமாவ உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட இல்லையே"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு என் அம்மாக்கிட்டே இது என்ன புதுக் கரிசனம்! அவள் உயிரோடு இருந்தப்போ அப்படி ஒன்னும் நீ ரொம்ப அனுசரிச்சுப் போகலையே ! அவள் தேமேன்னு மாட்டைக் குளிப்பாட்டினாலும், தன் புடவையைத் தோய்ச்சுண்டாலும் கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணக் கூடக் கிட்டப் போகமாட்டியே !" என்று ரங்கன் சிரித்தப் போது கனகம் கோபமாய் அவரை விழித்துப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் சமயம் பாத்துதான் சொல்லிக்காட்றாப்ல இருக்கு! ஏன், அப்போ சொல்றதுக்கென்ன, என் அம்மாவுக்கும் போய் ஒத்தாசைப் பண்ணுடீன்னு ?"&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம், சொல்லித்தான் தெரியணுமா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"மனசுக்குள்ளே வைச்சுண்டால் மத்தவாளுக்கு மூக்கிலே வேர்க்குமா என்ன ? நான் கொஞ்சம் கிட்டே போனாலும் என்னமோ ஆசாரம் கெட்டுபோயிடுத்துன்னு உங்கம்மா ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிப்பாளே, அது எங்கே தெரிஞ்சிருக்கப்போறது உங்களுக்கு! நான் செய்யறதுதானே கண்ணிலேபடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவள் போனப்புறம் கூடவா அவள் மேலே குத்தம் சொல்லணும்? அதான் இருக்கிறவரைக்கும் தினம் வீட்டிலே குரு§க்ஷத்திரம் நடத்தியாச்சே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அடேயப்பா, இத்தனை ஆங்காரம் இருக்கா உங்களுக்கு மனசுக்குள்ளே ? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருந்தேளே அப்போ ! ம்ஹ்ம், ஆயிரம்தான் இருந்தாலும், ஆம்பிள்ளை ஒவ்வொருத்தருமே கடைசியில் அம்மாக் கோதண்டராமன்தான். பொண்டாட்டி எத்தனை செஞ்சாலும் எடுபடாது. மனசிலே ஆழமான இடம் என்னிக்கும் அம்மாவுக்குன்னு தத்தம் பண்ணினதுதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படித்தான் வச்சுக்கோயேன், நம்ம நாணுவும் அதே மாதிரி பொண்டாட்டிகிட்ட எத்தனை ஆசையாயிருந்தாலும், மனசில் முக்கிய இடத்தை உனக்கு தத்தம் பண்ணியிருப்பான்னு நீயும் சந்தோஷப்படேன்! அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டதனால் இனிமே இந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப அவசியமில்லையா? இந்த உணர்ச்சி இல்லேன்னா எந்த அம்மாவானாலும் தன் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவாளான்னு சந்தேகம்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஒன்னும் அப்படி இல்லே. பாவம்னு உங்கம்மாவுக்குப் பரிஞ்சுண்டு வந்ததுக்கு எனக்கு இது நன்னா வேணும்" என்று கனகம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளதைச் சொன்னால் கோபம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு ரங்கன் கூறினார், "கோவிச்சுக்காதே கனகம், சும்மா சொன்னேன். அப்பா போக்கு எனக்கு மட்டும் பிடிக்கிறதா என்ன? சாவு என்கிறதே ஒரு அன்னியமான எண்ணம். அழுது அதுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அந்த திகைப்பு குறையறாப்பலே இருக்கும். அதைக் கொடுக்காம ஒருத்தர் கல்லாட்டாம் இருந்தால் நீ சொன்னாப்பலே ஒருவிதத்தில் பயமாத்தானிருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கில்லேன்னா! உங்கம்மாவுக்காக உங்கப்பா அழாமலிருக்கிறத பாக்கிறபோது, ஒரு பொண்டாட்டியாய்ப் பாடுபடறது எல்லாமே கடைசியில் இத்தனை வியர்த்தம் தானான்னு தோணிப்போறது. நம்மை நிராகரிச்சுட்டா பாத்தியான்னு மனசைத் தாக்கறது..." கனகத்தின் குரல் கம்மியது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள் இவள்! உலகத்தில் எல்லோருமே... மரணம் என்ற மகாகர்மம் கூட - ஒரு சிறு தன்னுணர்ச்சியில்தான் அஸ்திவாரம் கொண்டிருக்கிறதா? ம்ஹ்ம் ! மனிதனைப் பொறுத்தவரையில் உலகம் என்றுமே சிறியதுதான். அதற்குச் சந்திரமண்டலம் போகவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னத்தையானும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதே கனகம் " என்று ரங்கன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம மாட்டுப் பொண்ணு ஆத்துக்கு வரட்டும். அவளும் நானும் எத்தனை ஒத்துமையாயிருக்கப்போறோம் பாருங்கோ" என்றாள் கனகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதியின் அண்ணன் சாப்பாடு முடிந்ததுமே ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு தன் வேட்டகத்துக்குச் சென்றான். வத்ஸலாவின் முகம் அவனைப் பார்த்ததுமே மலர்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன திடீர்னு? இன்னிக்கு வரப்போறதாச் சொல்லவே இல்லையே? சாப்பாடு ஆச்சா? " என்று விசாரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆச்சு" என்றான் நாராயணன். இருவரும் வத்ஸலாவின் அறைக்குச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு மாதமாகியிருந்தது. அவளை அவனுடைய வீட்டுக்கு அழைத்துவர நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் பாட்டி இறந்துவிடவே அது தள்ளிப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டிலே பாட்டி பேச்சாவே இருந்தது. பாட்டிக்காத் துக்கம் கொண்டாடறவா பாட்டியை புரிஞ்சுக்காதவா. அப்படிப் பார்த்தால் தாத்தா நடந்துகிட்ட விதம் சரின்னுதான் சொல்லனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க தாத்தா துளிகூட அழவேயில்லையாமே? இது வரை ஒருவார்த்தைக்கூட உங்க பாட்டியப்பத்தி பேசவும் இல்லையாம்? ஆமா, உங்க குடும்பத்தில எல்லா ஆம்பிள்ளைகளுக்குமே இந்த மாதிரிக் கல்லு மனசுதானா? "&lt;br /&gt;&lt;br /&gt;"போக்கிரி!... புருஷன் பெண்டாட்டிக்குள் எத்தனையோ இருக்கும். தாத்தா போக்குக்குத் தக்க காரணம் ஏதாவது இருக்கலாம். மத்தவாளுக்குப் புரிய முடியுமா? நான் அதைச் சொல்லலே."&lt;br /&gt;&lt;br /&gt;"பின்னே?"&lt;br /&gt;&lt;br /&gt;நாராயணன் கண்கள் மிருதுவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க பாட்டி ரொம்ப அருமையான மனுஷி."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க எல்லாருக்குமே அவள் கிட்ட உயிராம், ஸ்ரீமதி சொல்லியிருக்கா."&lt;br /&gt;&lt;br /&gt;"பாட்டியைத் தெரிஞ்ச யாரும் அதைப்பற்றி ஆச்சரியப்பட முடியாது. அவளோட எலியும் பூனையுமா சண்டை போட்ட எங்கம்மா கூட..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயையோ, மாமியார் மாட்டுப் பெண் சண்டை உண்டா உங்க வீட்டிலே? எனக்கு இப்பவே பயமா இருக்கே!... வந்து எங்கப்பா கூடச் சொன்னார், முதல்லேருந்தே தனிக் குடித்தனமாய்ப் போயிடுங்களேன்னு...."&lt;br /&gt;&lt;br /&gt;நாராயணன் சிரித்துக் கொண்டே அவள் காதை விளையாட்டாகக் கிள்ளினான். "ஸில்லி! பயம் எதுக்கு? மாமியார் மாட்டுப் பெண் சண்டைங்கிறது எல்லாம் அவாளுக்குள் சும்மா ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். வெளியிலே வெட்டி மடிஞ்சும்பா. ஆனா தினம், பாட்டிக்கு ராத்திரியில் பாலை எங்கம்மா தன் கையாலேதான் குங்குமப்பூச் சேர்த்துச் சுண்டக் காய்ச்சித் தயார் பண்ணுவா, அந்த வேலையை ஸ்ரீமதி கிட்டகூட நம்பி விடமாட்டா. அதே மாதிரி பாட்டியும் எதை மறந்தாலும் எங்கம்மாவின் பிறந்த நாளை மறக்காம அன்னிக்குக் கோவிலுக்குப் போய் அவள் பேரிலே அர்ச்சனை பண்ணிட்டு வருவா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ. அப்படியா அது !"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்குச் சொல்றேன்னா, பாட்டியோடு பழகினவாளிலே அவள் அருமை தெரியாதவாளே கிடையாது. அதுக்கு காரணம் என்ன தெரியுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவளைப் பார்த்தாலே யாருக்கும் தான் உயிரோடு இருக்கிறதைப் பத்தியே இரு சந்தோஷம் ஏற்படும். அவள் உயிரே வடிவமாயிருந்தவள். வாழ்க்கையோடு பிணைஞ்சிருந்தவள். நாங்க குழந்தைகளாயிருந்த போது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள், புராணக் காவியக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாத்திலேயும் நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு."&lt;br /&gt;&lt;br /&gt;வத்ஸலா அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். கணவனின் முகத்து பூரிப்பு. கண்களின் நினைவுப் பரவசம். அவளை ஒருமாய வட்டத்தினுள் இழுத்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பாட்டியை எனக்கு தெரியாதேன்னு இப்போ வருத்தமாயிருக்கு" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வருத்தமே வேணாம். வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என் பாட்டி."&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். நாராயணன் மனைவியைக் கனிவோடு பார்த்தான். "நாம் துக்கம் கொண்டாட வேணாம் வத்ஸலா! வாழ்க்கையைக் கொண்டாடுவோம். உயிரை அழுத்தமாய் ஆமோதிப்போம். பாட்டிக்கிட்ட என் பிரியத்தை இதைவிட அழகாயும் பொருத்தமாயும் வேறெப்படியும் காட்ட முடியாதுன்னு தோணித்தான் நான் அவள் பேச்சுலே உன்னை நினைச்சிண்டு வந்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****************&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டி அழுதுண்டிருக்கே?" என்று கேட்டுக் கொண்டு ஸ்ரீமதியின் தம்பி அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். "எனக்கே தெரியலேடா ?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் ! எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது"&lt;br /&gt;&lt;br /&gt;"அவருக்கென்ன கேடு ! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது, ஸ்ரீமதி, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேக்கறியா?. பாட்டி செத்துப் போனதைப் பத்தி"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கே, படியேன் கேக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;வாசு தன் கவிதையை எடுத்து வந்து உற்சாகமாய்ப் படித்துக் காட்ட ஆரம்பித்தான். பாட்டியின் மறைவை உருக்கமாக வர்ணித்திருந்தான். சிறிது சிறிதாகப் பொருளின் உருக்கம் மறைந்து படைப்பின் கிளர்ச்சி அவன் முகத்தில் ஒளி கூட்டியது. "இந்த இடத்திலே அப்படியே அழுகை வராப்பலே 'மூவிங்'கா இல்லே?" என்று கேட்டபோது அவன் முகம் சந்தோஷமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் படித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீமதியின் கண்கள் முன்வாசல் தரையில் நிலைத்திருந்தன, அந்த இடம் கோலத்தின் சுவடு படாமல் மூளியாயிருந்தது. இன்னும் ஒரு வருஷத்துக்கு அங்கே கோலம் காணப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி வராந்தாவில் தான் ஒரு பக்கமாகத் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பலபேரோடு இருக்கும்போது அவர் தனியாயிருப்பது போல் தெரிகிறார். ஆனால் இப்படித் தான் மட்டுமாக முகத்தில் அந்த லயிப்புடன் இருக்கும் போது அவர் தனியாயில்லாத மாதிரி தோன்றுகிறதே, என்ன ஆச்சரியம் என்றி ஸ்ரீமதி வியந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தம்பி எழுந்து போன பிறகுகூட தாத்தா அதே நிலையில் இருந்தார், ஸ்ரீமதி மெள்ள அவரிடம் வந்தாள். "தூக்கம் வரவில்லையா தாத்தா? முந்திமாதிரி ராமாயணம் ஏதானும் படிச்சுச் சொல்லட்டுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம்மா. தூக்கம் வராப்பலே இருக்கு; போய்ப் படுத்துக்கறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் தாத்தாவும் ஸ்ரீமதியும் அவள் தம்பியும் படுத்துக் கொண்டு வெகு நேரமாகிவிட்டது. தம்பி எப்போதோ தூங்கி விட்டான். ஆனால் தாத்தா இன்னும் தூங்கவில்லை என்று ஸ்ரீமதிக்குத் தெரியும். அது அவளுக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு இரவும் தெரிகிற விஷயம் என்பது தாத்தாவுக்குத் தெரியாது. அவர் புரண்டு புரண்டு படுப்பதும், உலகம் உறங்கும் நள்ளிரவு வேளையில் கிழக் கண்களைத் திறந்து கொண்டு விட்டத்து இருளை வெறித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் படுக்கையில் எழுந்து உட்காரும் மெல்லிய சத்தம் வந்தது. அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள். "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்கலாமா? ஆனால் அவருடைய அந்தரங்கத்தை தீண்டத் தைரியம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா எழுந்து நின்றார். நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீமதி ஒர் அச்சத்துடன் எழுந்து அவர் அறியாமல் இருளில் மறைந்து மறைந்து அவரைப் பின் தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச் சென்றார். நின்று நின்றி இடங்களை வெறித்தார். பாட்டி பூஜை செய்த அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நின்றார். பிறகு கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு பின்கட்டுக்குப் போனார். தூக்கத்தில் நடப்பது போல் நடை யந்திரப்போக்காய் இயங்கியது. தொழுவம், துவைக்கும் கல், மல்லிகைக் கொடி ஒவ்வொன்றின் அருகிலாக இருட்டினூடே சென்று நின்றார். அங்கங்கே தயங்கித் தயங்கி நின்று மண்ணிலும் வானத்திலும் பார்வையை நெடுக அலையவிட்டார். பிறகு வீட்டுக்குள் திரும்பி வந்தார். தட்டு தடுமாறி நடந்து வந்து தன் படுக்கையை மீண்டும் அடைந்தார். நடையின் தள்ளாட்டம் இருட்டினால்தானா என்று புரியவில்லை. பயத்துடன் தொடர்ந்து சென்ற ஸ்ரீமதி நிம்மதியுடன் பூனைப் போல் உள்ளே வந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்; பார்வை மட்டும் அரை இமைத் திறப்போடு தாத்தாவின் மேலே படிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா சிறிது நேரம் அசையாமல் படுக்கையின் மீது உட்கார்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்டார். ஆனால் தூங்கவில்லையென்று தெரிந்தது. அவர் கண்கள் திறந்துதான் இருந்தன வென்பதை கருமணிகள் இருளில் பளபளப்பதிலிருந்து ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள். அவர் ஆழமாகப் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-113103628653190838?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/113103628653190838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=113103628653190838' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/113103628653190838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/113103628653190838'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/11/blog-post.html' title='ஆர்.சூடாமணி'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112927654016283485</id><published>2005-10-14T13:21:00.000+05:30</published><updated>2005-10-15T16:15:13.323+05:30</updated><title type='text'>டுபாக்கூர் IIPM</title><content type='html'>துக்ளக் இதழின் பின்னட்டையும் ஆண்மைக் குறைவு வைத்திய விளம்பரமும் பிணைந்து இருப்பது போல, அனைத்து நாளிதழ்களிலும் தினந்தோறும் "Dare to think beyond IIMs" என்று எரிச்சலூட்டும் விளம்பரம் தரும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Indian_Institute_of_Planning_and_Management"&gt;IIPM&lt;/a&gt;-ன் தற்போதைய சர்ச்சைப் பற்றி &lt;a href="http://www.desipundit.com/2005/10/08/lies-damned-lies-and-fake-blogs/#more-1218"&gt;பலர்&lt;/a&gt; &lt;a href="http://indiauncut.blogspot.com/2005/10/question-of-principles.html"&gt;விவரமாக &lt;/a&gt;எழுதியுள்ளனர். இந்த பதிவு &lt;a href="http://gauravsabnis.blogspot.com/2005/10/im-disconnecting-my-cable-connection.html"&gt;கவ்ரவ் &lt;/a&gt;மற்றும் &lt;a href="http://youthcurry.blogspot.com/2005/10/lies-damned-lies-and-fake-blogs.html"&gt;ரஷ்மி &lt;/a&gt;ஆகிய இருவருக்கும் ஆதரவு தெரிவிப்பதினை உறுதி செய்வதற்கு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.desipundit.com/2005/10/08/lies-damned-lies-and-fake-blogs/#more-1218"&gt;&lt;img src="http://static.flickr.com/30/52184295_a8e9aa2265_m.jpg" border="0" /&gt;&lt;/a&gt;      &lt;a href="http://www.desipundit.com/2005/10/08/lies-damned-lies-and-fake-blogs/#more-1218"&gt;&lt;img src="http://static.flickr.com/24/52184292_a1702b6dfd_m.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.desipundit.com/2005/10/08/lies-damned-lies-and-fake-blogs/#more-1218"&gt;&lt;img src="http://static.flickr.com/31/52184291_83fba3ffd3_m.jpg" border="0" /&gt;&lt;/a&gt;      &lt;a href="http://www.desipundit.com/2005/10/08/lies-damned-lies-and-fake-blogs/#more-1218"&gt;&lt;img src="http://static.flickr.com/30/52184293_479405c1fd_m.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இதைப் பற்றி ஐகாரஸ் பிரகாஷ் எழுதியது &lt;a href="http://icarus1972us.blogspot.com/2005/10/iipm-vs-gaurav-chabnis-fellow-bloggers.html"&gt;இங்கே&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112927654016283485?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112927654016283485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112927654016283485' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112927654016283485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112927654016283485'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/10/iipm.html' title='டுபாக்கூர் IIPM'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112714420206142566</id><published>2005-09-19T22:00:00.000+05:30</published><updated>2005-09-19T21:29:42.040+05:30</updated><title type='text'>ஆதவன் - பாகம் மூன்று</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/FirstComestheNight.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/200/FirstComestheNight.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளின் இறுதியில், தொண்ணூறின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்து, தமிழ்ச் சிறுகதைத் துறையில் இன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு சிறப்பானப் பங்களிப்பை வழங்கிவரும் எந்த ஓர் இளம் படைப்பாளியும் இரண்டு பேரின் தாக்கம் ஏற்படாமல் தாம் எழுத வரவில்லை என்று மனப்பூர்வமாகச் சொல்ல முடியாது. அந்த இருவர்: ஆதவன், சுப்ரமணிய ராஜூ.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருமே மிக இளம் வயதில் நிறைய சாதித்தவர்கள். வேறுபாடில்லாமல் எல்லாத் தரப்பு மூத்த எழுத்தாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு, இருவருமே நம்ப முடியாத இளம் வயதில் இறந்துபோனவர்கள். இருவரது மரணமும் துர்மரணம்தான் என்பதும் சோகமான சரித்திரம். ஆதவன் ஆற்றில் அடித்துப் போகப்பட்டார், சுப்ரமணிய ராஜூ சாலை விபத்தில் மாண்டுபோனார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகர்ப்புற, மத்தியதர இளைஞர்களின் மன உணர்வுகள்தாம் இந்த இரு படைப்பாளிகளின் சிந்தனையையும் இடைவிடாமல் பாதித்துக்கொண்டிருந்தன என்பதும் ஓர் எதிர்பாராத ஓற்றுமை. ஆதவனின் கதைகளில் தற்கால இளைஞர்களின் "கேரிகேசர்கள்' எப்படி தவிர்க்க முடியாமல் வந்து விழுந்துகொண்டிருந்தனவோ, அதேமாதிரி ஆதவன் பற்றிய இக்கட்டுரையில் சுப்ரமணிய ராஜூவை நினைவுகூர்வதும் தவிர்க்க முடியாமலே போவதும் ஒரு நிர்ப்பந்தமாகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் தம் இளவயது முதலே தில்லியில் வாழ்ந்தவர். நேஷனல் புக் டிரஸ்டில் அதிகாரியாகப் பணியாற்றியவர். காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், முதலில் இரவு வரும் போன்ற குறிப்பிடத்தகுந்த புத்தங்களைத் தந்தவர். தேர்ந்த எழுந்து கைவரப்பெற்ற அவர், தமிழ் தவிர இந்தி, ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுவது என்று அவர் முடிவு செய்திருந்தால் தேசிய அளவில் இ உலக அளவில் கூடக் கொண்டாடப்படத்தக்க எல்லையைத் தொட்டிருக்கக்கூடும். இந்திரா பார்த்தசாரதி கூறுவது போல, தமிழில் எழுதுவது என்று அவர் முடிவெடுத்ததே, தம் வேர்களை அவர் வெட்டிக்கொள்ள விரும்பாததனால்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஜானகிராமனின் நளினம், புதுமைப்பித்தனின் பாய்ச்சல், இந்திரா பார்த்தசாரதியின் புத்திசாலித்தனம், அசோகமித்திரனின் வடிவ அமைதி என ஆதவனின் எழுத்துக்கொரு இலக்கணம் புனைய முற்பட்டாலும் எந்தச் சட்டத்திலும் இரு விநாடிகள் கூடக் பொருந்தியிராமல் பிதுங்கி வெளிவந்துவிடும் அவரது கலை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், பாத்திரங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ்ச் சிறுகதை உலகில் முதல் முதலில் பாத்திரங்களின் மனங்களை மட்டுமே பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் ஆதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கதையொன்றில் ஓர் இளைஞன் நினைப்பான், ""குருதத்தே தற்கொலை செய்துகொண்டாயிற்று. நான் ஏன் இளியும் உயிரோடு இருக்க வேண்டும்?''&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாக் கதாநாயகர்களைக் கடவுள்களாகவே கொண்டாடும் ஒரு தேசத்தின் நாடித்துடிப்பே இந்த ஒரு வரியினுள் அடங்கியிருப்பதைச் சற்று உன்னிப்பாக அணுகுபவர்கள் கண்டுகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனின் மொத்தக் கதையுலகமே சோகமெனும் சல்லாத் துணியால் போர்த்தப்பட்டிருப்பது போல் தெரிவது, அறிமுக வாசகனுக்கு முதலில் இலேசான சங்கடமேற்படுத்தக் கூடியது. வீடு வீடாகப் படியேறி கொலுவுக்கு அழைக்கிற பெண்ணைப் போல, ஒரே ஒரு பாத்திரமே அவரது எல்லாக் கதைகளினுள்ளும் புகுந்து மீள்வது போன்ற தோற்றம் அல்லது பிரமை கூட உண்டாவது சாத்தியந்தான். நகர்புற இளைஞர்களின் வாழ்வெனும் திரைக் கதைகளுக்குள் அதிக வேறுபாடில்லை என்பதே இதன் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழிப்பது என்கிற சாதாரண விஷயம் அந்த நாகராஜூக்கு (ஞாயிற்றுக் கிழமையும் அறையிலோர் இளைஞனும்) எப்படியொரு பூதாகாரமான பிரச்சினையாகிறதோ, அதே விதத்தில்தான் ஆதவனின் இன்னொரு கதையில் (இறந்தவன்) வரும் "அவனு'க்குத் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துவதா, வேண்டாமா என்பதும் கறையான், புத்தகத்தை அரிப்பதுபோல் மனத்தை அரித்து துவம்சம் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் சலிப்புற்று அந்த "அவள்' நினைப்பாள்: "Why dont you say you want this, you want that...say you want me."&lt;br /&gt;&lt;br /&gt;செயல்களுக்கு உள்ளது போல சிந்தனைக்கு வரம்பில்லாததுதான் எத்தனை பூரிப்பேற்படுத்தும் விஷயமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனின் கதைகளை வாசிக்கிற போது இடைவிடாமல் யாரோ பேசிக் கொண்டே இருத்தல் போலவும் பேச்சென்கிற தொடர்புகொள்ளும் வழிமுறையே வழக்கொழிந்து, பேரண்டம் முழுதும் சூனியம் வியாபித்து விட்டது போன்றும் இருவித உணர்வுப் புயல் வாசகனை ஒருசேரத் தாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அசாத்தியமான மனமொழிக்கு கையாளல் உத்தியை அவர் விடாப் பிடியாகத் தம் அத்னை கதைகளிலும் கையாண்டு வந்திருக்கிறார். கிழவனின் மனம், திருமணமாகாதவர்களின்/ ஆனவர்களின் மனங்கள், பெண்களின் மனம் / உள் மனம், தாயின் மனம், அதிகாரிகளின் மனம், சேவகர்களின் மனம், வேலையில்லாதவர்களின் மனம், வேலையை விரும்பாதவர்களின் மனம், இவைதான் ஆதவன் சுரங்கம் தோண்டிப் பார்க்கத் தேர்ந்தெடுத்த தளங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயிற்சியில் ஏற்படும் இறைச்சலை ஒரு லேத் மிஷின் இயங்குவதுடன் ஒப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடத் தொடங்கும் போதான சகிக்க இயலாத இறைச்சல்; பிறகு இரைச்சலே இசையானப் பின் மௌனமாகவும் ஆகிவிடுகிற பேரமைதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தச் சூட்சுமங்களின் இலக்கணத்தை ஆதவன் முன்வரையறுத்துக் கொள்வதில்லை. ஒரு விளையாட்டுப் போல இ நெட் பிராக்டிஸாக மட்டும் இ ஒவ்வொரு கதையிலும் இந்த மனமொழியை வேறு வேறு வடிவங்களில் கையாண்டு பார்கிறார். தாம் எழுதுவதை அவரே ஒரு விளையாட்டு என்றுதான் குறிப்பிடவும் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலக்கியம் என்பதோ படைப்பென்பதோ விளையாட்டல்ல என்பதையும் அவர் அறிந்திருந்தார். அல்லாத பட்சத்தில் ஒரு மயிர்கூட நரைக்கத் தொடங்காத ஒரு முன்னிளமைப் பருவத்தில் ஒரு கிழவனாரின் மனத்தில் புகுந்துகொண்டு அவரால் கதை சொல்லியிருக்க முடியாது (ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்).&lt;br /&gt;&lt;br /&gt;தன் "நானை' அடையாளம் காணுவதற்காக எழுதுவதாகக் கூறிய ஆதவனின் எல்லாக் கதைகளிலும் ஏராளமான நான்கள் உலவுவதைக் காண்பதும், அவற்றில் எது ஆதவனின் நிஜமான நான் எனத் தேடுவதும் கூர்மையான இலக்கியப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு நல்ல விளையாட்டாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்நாள் முழுவதும் பிறர்பால் அன்பு செலுத்தி, எல்லோருக்கும் எந்த வதித்திலாவது உதவி, எல்லார் மனங்களிலும் இனிய உருவமாக இடம் பெற்றவர் என்கிற பொருளில் ஆதவன் பற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டே ஆதவன் தேடிய அந்த "நானை' அவர் கதைகளில் கண்டுபிடித்து விட முடியும்; சுலபமுங்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், அவரது எழுத்து முகங்களைப் பற்றியதல்ல; அகங்களைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;font&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆதவன் வீட்டுக்குச் சென்று வந்தேன் - ஆர்.வெங்கடேஷ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;font&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/iravu.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/320/iravu.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;font&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br /&gt;அவரது குரலில் தொனித்த வாத்ஸல்யமும் கரிசனமும் என்னை கட்டிப்போட்டுவிட்டன. அதுநாள் வரை அவர் எப்படிப்பட்டவரோ, பேசுவாரோ மாட்டாரோ என்றெல்லாம் விரிந்த கற்பனைகள் அத்தனையும் நொறுங்கிப்போக, "வீட்டுக்கு வாங்கோளேன்" என்று தொலைபேசியில் அழைத்தபோது, அடுத்த நிமிடம் நான் பெங்களூரில் இருக்க மாட்டோமா என்ற பரபரப்பு என் உடம்பெங்கும் தொற்றிக்கொண்டது. நினைவில் நிற்கும் பல பெண் பாத்திரங்களைப் படைத்த அற்புத எழுத்தாளனின் வாழ்வில் கலந்த பெண் அவர். சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்ட பெண் அவர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br /&gt;திருமதி ஹேமா சுந்தரம் - ஆதவன் சுந்தரத்தின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த வெள்ளிக்கிழமை இரவு பெங்களூர் ரயில் பிடித்து சனிக்கிழமை காலை போய் இறங்கினேன். பெங்களூரில் இருக்கும் நண்பர் என்.சொக்கனிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்தேன். ஒன்பது ஒன்பரை மணிவாக்கில் இருவரும் ஆதவன் வீட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, நாங்கள் வருவதைத் தெரிவித்துக்கொண்டோம். ஒரு ஆட்டோ பிடித்து உட்கார்ந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொக்கனுக்கு என் ஆதவன் ப்ரியம் ஏற்கனவே தெரியும். அவர்தான் "காகித மலர்கள்" புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்தவர். ஆட்டோவில் ஆதவனைப் பற்றியும், அவர் புத்தகங்களைத் தேடி தேடி நான் சேகரிக்கும் விதம் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தேன். முக்கியமாக அசோகமித்திரன் தன் சேகரிப்பில் இருந்து ஒவ்வொரு புத்தகமாகத் தேடி எடுத்துக் கொடுத்தது என் மனத்தில் என்றும் மறையாத ஒன்று. ஆதவனின் அனைத்துப் புத்தகங்களையும் மீண்டும் மறுபதிப்பு கொண்டு வரவேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு உரமிட்டவர் அசோகமித்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு ஆதவன் ப்ரியர் பால்நிலவன். அவரது சேகரிப்பில் இருந்தே நான் "பெண், தோழி, தலைவி" என்ற தினமணிக் கதிர் குறுநாவலைப் பெற்றுக்கொண்டேன். 1982ல் வெளியான மாதநாவல் அது. மிகப் பத்திரமாகப் பொத்தி பொத்திக் காத்து வைத்திருந்தார் பால்நிலவன். கேட்டவுடன் மனம் நிறைந்து கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனைப் பற்றிய பல ஆச்சரியங்கள் எனக்கு உண்டு. அதில் ஒன்று, குழந்தைகளுக்கு அவர் எழுதியுள்ள கதைகள். மிக மிக முதிர்ச்சியுடன், நவீன வாழ்வில் மத்திய தர மனிதர்களைப் பற்றி எழுதிய ஒருவரால், சிறுவர்களுக்குக் கதை எழுத முடியுமா என்ற சந்தேகத்தை பொய்யாக்கியவர் ஆதவன். "சிங்க ராஜகுமாரி" என்ற குழந்தைகள் கதைத் தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். வானதி வெளியீடு. அசோகமித்திரன் சேகரிப்பில் இருந்து இந்தத் தொகுதியைப் பெற்றுக்கொண்டேன். அத்துடன், மதுரம் பூதலிங்கம் (வாசவேஸ்வரம் 'கிருத்திகா') எழுதிய பாலர் ராமாயணம் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆதவன் சுந்தரம். மிக மிக எளிமையாக, குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் அவர் செய்துள்ள மொழிபெயர்ப்பு என்னைக் கவர்ந்ததென்றால், மற்றொரு புறம் சிங்க ராஜகுமாரி தொகுதி பெரிய ஆச்சரியத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. எளிமையான கதைக் கருக்கள். அழகான நடை. தமிழ் தெரிந்த பத்து வயதுக் குழந்தையால் தாராளமாகப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு சீரான ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தான் தெரிந்துகொண்டேன், அவர் தமது எழுத்துப் பணியை "கண்ணன்" சிறுவர் இதழிலேயே தொடங்கியவர் என்று. லெமன் (மஞ்சரி ஆசிரியராக இருந்தவர் - லட்சுமணன்), ரமணீயன், அம்பை எல்லாரும் அவரோடு கண்ணனில் எழுதி வெளியே வந்தவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ லிங்கராஜபுரத்தை அடைந்திருந்தது. இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி நிறுத்தி, முகவரியை விசாரித்துக்கொண்டோம். ஒரு சின்ன பாலத்தினடியில் போய், வலது புறம் திரும்பி, நேரே ரயில்வே லைனை ஒட்டி ஆட்டோ ஓடியது. "பத்மாலயா" என்ற வீடு கண்ணில் பட்டபோது, ஒருசில நொடிகள் நான் நெகிழ்ந்துபோனேன். பழைய கால வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன கேட். எதிர்புறம் சென்னை போகும் ரயிலின் பாதை தெரிந்தது. கேட்டைத் திறந்தால் இரண்டு புறமும் பூஞ்செடிகள். மணியடித்துக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனமெங்கும் ஆனந்தம். இது ஆதவன் வீடு. இங்கே நடத்திருப்பார். இங்கே உட்கார்ந்துகொண்டிருப்பார். குரலும் வாசனையும் வளைய வந்த இடங்கள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அறியாமல் அவர் நான் காண, ஏதோ ஒன்றை மிச்சம் வைத்து விட்டுப் போயிருப்பார் என்று தோன்றியது. அபத்தமாகக் கூட இருக்கலாம். ஆனால், நம்பிக்கை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;"1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். "உனக்குத் தமிழ் தெரியுமா?"ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் பேசினோம். அப்புறம் கல்யாணம் ஆச்சு. கல்யாணத்தும்போதுதான், என் ரிலேடிவ் பையன் ஒருத்தன் கணேசன்னு சொல்லிட்டு, அவர அடையாளம் கண்டுகிட்டு, அவர்கிட்டபோய், நீங்கதானே ஆதவன், தீபத்துல கதையெல்லாம் எழுதறீங்களேன்னு கேட்டான். அப்பத்தான் எங்களுக்கு அவர் ஒரு ரைட்டர்னே தெரிஞ்சுது. அதுவரைக்கும் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாளே, கணேசன், தீபத்துல வந்த காகித மலர்கள் தொடரைக் கட் பண்ணி பைண்ட் பண்ணிக் கொண்டு வந்துகொடுத்தான். அவரும் உடனே அவன் வீட்டுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார். அப்படி ஒரு எளிமை. தான் யாரு என்னன்னு கூட சொல்லிக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட அம்மா சொல்லுவா, எனக்கு இப்படி ஒரு பையன் இருக்கான்னு அக்கம்பக்கத்துல இருக்கறவாளுக்குக் கூட தெரியாது. அப்படி ஒரு சைலண்ட். எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருப்பார். அவர் மட்டுமல்ல, அவரோட அப்பா, அக்கா, தம்பி, தங்கை எல்லாரும் ஏதாவது படிச்சுண்டே இருப்பா. சாப்பிடும்போது கூட கையில ஒரு புக்கு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட அப்பா, பெரிய சம்ஸ்கிருத ஸ்காலர். டில்லியில படிச்சதால, இந்திதான் ஸ்கூல்ல படிச்சது. பின்னால, தமிழ் ஆர்வத்துல தமிழ் புக்கெல்லாம் படிக்க ஆரம்பிச்சார். அப்போதெல்லாம், மெட்ராஸ் போயிட்டு, தில்லி வந்தாரானால், இரண்டு கையிலும் புத்தகக் கட்டுதான் இருக்கும். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவார். "யாராவது ஸ்டேஷனுக்கு வந்து ஹெல்ப் பண்ணக்கூடாதோ"ன்னு கேப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கறதுல அப்படி ஒரு ஆசை. வீட்டுல ஐஞ்சாறு டிக்ஷ்னரிகள் இருக்கும். காலையில குளிச்சுட்டு, தலைய துவைட்டிக்கிட்டே, ஓடிவந்து டிக்ஷ்னரிய திறந்து என்னவோ வார்த்தைகளைப் பார்த்துண்டிருப்பேர். இரண்டு மூன்று டிக்ஷ்னரிகளை மாத்தி மாத்தி பார்ப்பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்து பேசவே தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க ஊட்டிக்குப் போனோம். அங்க படிப்படியா இருக்கற மலையையும் இயற்கையையும் பார்த்துட்டு, "இதெல்லாம் பார்த்துக்கோ, சீக்கிரம் இதெல்லாம் என் எழுத்துல வரும்"னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அதிகமும் என்ன கூட்டிக்கிட்டு போனது எழுத்தாளர்கள் வீட்டுக்குத்தான். அங்கையும் அதிகம் பேசமாட்டார். இ.பா மேலயும் அசோகமித்திரன் மேலயும் ரொம்ப அபிமானம். இங்க பெங்களூர்ல இருந்தபோது, அடிக்கடி சரஸ்வதி ராம்நாத் மாமியப் பார்க்கப் போயிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மேல ரொம்ப ஆசை. இப்படித்தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்னு ஏதும் அவசியமில்லை. எங்கவெண்ணா உட்கார்ந்துண்டு எழுதுவார். மடியில ஒரு சூட்கேஸை வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டே இருப்பார். மணி மணியா இருக்கும் எழுத்து. சில சமயங்கள்ல, போஸ்டாபீஸ் போய் கடைசி வரிகளையெல்லாம் எழுதி, போஸ்ட் பண்ணிட்டு, ஆபிஸ் போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல ரயில்வே வேலையா இருந்தார். ஏழு வருஷம். அப்பறம் 1975லதான் நேஷ்னல் புக் டிரஸ்ட், தமிழ் பிரிவுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டர் வந்தார். 1984 வரைக்கும் தில்லியில இருந்தோம். அப்புறம், அவருக்கு பெங்களூருக்கு போஸ்டிங்க ஆச்சு. இங்க வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே, அவர் காகித மலர்கள் எழுதிட்டார். அதை ஒரு தபசு மாதிரி பண்ணினேன்னு சொல்வார். தில்லியில வெளிய போகும்போது, அவர் உட்கார்ந்துண்டிருந்த காபி பார், ரெஸ்டாரெண்ட் எல்லாம் காண்பிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகள்லேருந்து கதை கேட்டாதான், கதை எழுதுவார். கதை எழுதிட்டு, என் கிட்ட படிக்கக் குடுப்பார். "எனக்கென்ன, இதெல்லாம் புரியப்போறது"னு சொன்னா, "ஐயோ, எல்லாருக்கும் புரியணும்னுதான் கதை எழுதுறேன். உனக்கும் புரியணும். படிம்"பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க பெங்களூர் வந்த பின்னால, பாரதியாரை படிச்சுண்டே இருப்பார். அதுக்குள்ளேயே "புழுதியில் வீணை" எழுதிட்டார். 39 வயசுக்குள்ள என்னமா எழுதியிருக்கான். சாதிச்சுருக்கான்னு பாரதியார் மேல ரொம்ப ஆச்சரியப்படுவார். அந்த நாடகத்தை எப்படி மேடையேத்தணும்னு பெரிய கனவே இருந்தது அவருக்கு. அந்த நாடகத்தைப் படிச்சாவே தெரியும். நிறைய குறிப்புகள் எழுதியிருப்பார். அதுல தீ, தீ, தீ ன்னு வர வரிகள் எப்படி சொல்லப்படணும்னெல்லாம், அவரே சொல்லச்சொல்லி, கேசட்டுல பதிவு பண்ணி வெச்சிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மாதிரியே இங்கிலீஷ்லயும் அவருக்கு அபார திறமை உண்டு. எம்.எஸ்.ராமஸ்வாமி அவரோட சிறுகதை ஒன்றை மொழிபெயர்க்கறேன்னு சொல்லி கேட்டார். அப்புறம், பின்னால, சாகித்ய அகாதமியோட ஒரு புக்குல, ஆதவனே மொழிபெயர்த்த ஒரு கதையைப் படிச்சுட்டு, நிச்சயமா என்னால இது மாதிரி முடியவே முடியாதுன்னு சொல்லி லெட்டர் போட்டுட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில பேசும்போது ரொம்ப நிதானமா பேசுவார். தான் சொல்லற வார்த்தை சரியான வார்த்தையான்னு யோசித்து யோசித்து பேசுவார். அவர் வார்த்தைகளை கோர்க்கறார்ங்கறது அவரோட முகத்தைப் பார்த்தாவே தெரியும். ஆனால், எழுத்துல அப்படி இல்ல. எழுதித் தள்ளிண்டே இருப்பார். நல்ல ஸ்பீட்."&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;விசாலமான கூடம். எதிர் எதிர் பக்கங்களாய்க் கொண்ட இரண்டு, மூன்று சீட் சோபாக்கள். நடுவே ஒரு டீப்பாய். வலப்பக்கம் தலைக்குமேல் ஷோக்கேஸ். இடதுபக்கம் ஒரு அறை. நேர் எதிரே ஒரு அறை. எதிர் அறையை ஒட்டி வலப்பக்கம் சமையலறை. இடப்பக்கம் குளியலறை போகும் பாதை. வெள்ளையடிக்கப்படாத வீடு. மிதமான இருட்டும் மெளனமும் அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது. ஆதவனைத் தம்முள் பொத்தி வைத்திருக்கும் மெளனம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே சாருமதி. ஆதவனின் மூத்த மகள். நல்ல உசரம். மெளனம். ஆதவனை அப்படியே உரித்து வைத்திருந்தார். பக்கத்தில் அவரது அம்மா திருமதி ஹேமா. பக்கத்தில் அவரது அம்மா. ஆதவனின் மாமியார். திருநீறு துலங்கும் வெள்ளை வெளேர் மாமி.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் இனிய கணவன், அன்புள்ள அப்பா, பொறுப்பான மாப்பிள்ளை, அதற்குமேல் கெளரவமான எழுத்தாளர் என்ற பெருமை அவர்கள் பேச்சு முழுவதும். ஆதவனின் எழுத்துக்களை படித்து, அதன் மேல் கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதை விட, அவரின் ஆளுமை சார்ந்து விசுவாசம் கொண்ட குடும்பம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;சாருமதி தான் சிறுவயதில் எழுதி, கோகுலம் ஆங்கிலம் இதழில் வெளியான கவிதையைக் கொண்டுவந்து காண்பித்தார். முழுப்பக்கம் நீண்டிருக்கும் அழகிய கவிதை. கீழே சாருமதி சுந்தரம் என்ற பெயர் கெட்டி எழுத்தில். அப்பா தமிழ் சொல்லிக்கொடுத்தது, லெமனின் கவிதையைப் படிக்கச் சொல்லிக்கொடுத்தது என்று அனைத்தையும் தன் நினைவில் இருந்து நீவி நீவி எடுத்துத் தந்தார் சாருமதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் மறையும் போது, சாருமதிக்கு ஒன்பது வயது. இன்று கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, வேலைக்குக் காத்திருக்கிறார். இரண்டாவது மகள், நீரஜா. வாசல் கதவைத் திறந்து எங்களை வரவேற்றது நீரஜாதான். கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு. "அறிவுக் களை ததும்பும் முகம்" என்று கதைகளில் படித்திருக்கிறேன். சாருமதி, நீரஜாவைப் பார்த்தபின், அந்த சொற்றொடரின் அர்த்தத்தை அன்றுதான் நேரில் உணர்ந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி ஹேமா சுந்தரத்தைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கச்சலான தேகம். ஆனால், பாறைபோல் உறுதி, மனசுக்குள். இல்லையென்றால், இன்று இவ்வளவு தூரம் பெண்களை வளர்த்து முன்னேற்றியிருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் போனதை என்னால நம்பவே முடியல... அவரோடு ·பிரெண்டோட சிருங்கேரி போய்ட்டு வரேன்னு கிளம்பினேர். அவருக்கு பெங்களூர் அவ்வளவா பிடிக்கல. அவருக்கு தில்லிதான் பிடிச்ச ஊர். இங்கே கொண்டு வந்து போஸ்டிங் போட்டுட்டாளேன்னு அவருக்கு வருத்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், வேலை பார்த்துண்டுதான் இருந்தார். நடுவுல வேற ஒரு டிவிஷனுக்கு மாத்தினாளோ என்னவோ? சரியா ஞாபகம் இல்ல. எழுதறவனைப் போய் வேறெதோவெல்லாம் பண்ணச் சொல்றாளேன்னு அவருக்கு வருத்தம். அவரை அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் பார்த்துக்கொள்ளச் சொன்னான்னு ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூனாவது நாள்தான் பாடி கெடைச்சுது. பார்க்கவே முடியல... உடம்பெல்லாம் ஊதிப் போய்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம், எனக்கென்ன பண்றதுன்னு தெரியல.. நான் சின்னப் பொண்ணு. அவர் போயாச்சு. சின்னச் சின்னதா ரெண்டு கொழந்தைகள். அவர் இருந்தவரை நான் எதிலேயும் போனது கிடையாது. எடுத்து செஞ்சது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்றதுன்னு தெரியல... யார கேக்கறது, என்ன செய்யணும்னு தெரியல... எங்கப்பாதான் எல்லாம் முன்ன நின்னு செஞ்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் வேற இருக்கே. காப்பாத்தியாகணுமே.. படிக்க வெக்கணுமே... முன்னேத்தியாகணுமே.. நல்ல வேளையா நேஷ்னல் புக் டிரஸ்டிலேயே வேலை கொடுத்தா...&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இருபது வருஷம் நான் தலைநிமிர்ந்தே பார்க்கல. அவரோடு புக்ஸ், கட்டுரைகள், எழுதி மிச்சவெச்சது எல்லாம் அப்படியே டெல்லியிலேயே போட்டுட்டு வந்துட்டோம். அவரோட தம்பி வைத்யநாதன்தான் எடுத்து வெச்சிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை வளர்க்கறது மட்டும்தான் என் கடமைன்னு நான் கண்ண மூடிண்டு வேலை பார்த்தேன். கார்த்தால போனா ராத்திரி தான் ஆத்துக்கு வரமுடியும். வெளிய எங்கையும் போனதில்ல. ஒரு சினிமாவோ, டிராமாவோ எதுவும் யோசிச்சதில்ல..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் புக்ஸைப் படிச்சவா யாராவது லெட்டர் போடுவா.. அப்படியே எடுத்து வெச்சுப்பேன். பதில் கூடப் போட முடிந்ததில்ல. வருஷம் ஆக ஆக, பலரும் அவர் எவ்வளவு முக்கியமான ரைட்டர்னு வந்து சொல்லுவா... கேக்கும்போதே கண்ணுல ஜலம் கண்டிண்டும். கேக்கறதுக்கு அவர் இல்லாம போய்ட்டாரேன்னு அடிச்சுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட அப்பா இருந்தவரைக்கும் கொஞ்சம் தெம்பா இருந்தது. பல வேலைகளை அவர் பார்த்துண்டார். அவர் போனப்புறம், எல்லாத்தையும் நானே பார்த்துக்கவேண்டியதாயிடுத்து. அம்மாவுக்கும் வயசாயிடுத்து. இவா ரெண்டு பேரும் வளர்ந்துட்டா.. அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம்..."&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சாருமதி, சில பழைய புகைப்படங்களைக் கொண்டு வந்து காண்பித்தார். மடியில் குழந்தையை (சாருமதியை) வைத்துக்கொண்டிருக்கும் ஆதவன். ஒரு சில குருப் போட்டோக்கள். அப்புறம், ஆதவனின் கல்யாண ஆல்பம் இருப்பதாகச் சொன்னார், அவரது மாமியார். சில கணங்கள் தயங்கினார் திருமதி ஹேமா சுந்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களில் அடுத்த அறையில் இருந்து சாருமதி அந்த ஆல்பத்தைக் கொண்டுவர, உள்ளே திருமதி ஹேமா சுந்தரம் மனம் கசிவது தெரிந்து. கேட்டிருக்கக்கூடாது, தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி சட்டென மேலெழுந்து என்னை இம்சித்தது. அனாவசியமாக, பழைய துக்கங்களை கிளறிவிடுகிறோம் என்ற எண்ணமே என்னை மேலும் வருத்தத்துள்ளாக்கியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. திருமதி ஹேமா சுந்தரம் கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். ஒல்லியாய், கெட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, பஞ்சகச்சத்தில் ஆதவன். மாப்பிள்ளை அழைப்பு, பின், காசி யாத்திரை, ஊஞ்சல், நலுங்கு, பிடிசுற்றிப் போடுதல், பின் திருமாங்கல்யம் முடிதல், மெட்டி அணிவித்தல் என்று அத்தனையிலும் மெளன ஆதவன். அதே கூச்சம். அதே ஒடுக்கம். அதே உறங்கும் கண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குச் சொந்தத்தில் அண்ணன் கிடையாது. எனக்கு அண்ணா என்று யாராவது இருந்திருந்தால், அது ஆதவன் போல் இருக்கவேண்டும் என்று பல நாள்கள் கனவு கண்டிருக்கிறேன். நான் விரும்பும் அதே குணாதிசயங்களோடு, ஆதவன் கருப்பு வெள்ளையில் காட்சி தந்துகொண்டிருந்தார். ஒரு தென்னை மரத்தின் கீழ் குழந்தையைத் தோளில் ஏந்தியபடி. முதிர்ச்சியும் கனிவும் பொலிந்த முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு முறை காபி வந்தது. அன்று அங்கேயே சாப்பிடும்படி திருமதி ஹேமா சுந்தரம் வற்புறுத்த, முடியாதவர்களாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். அன்று மாலையே நான் சென்னை திரும்பவேண்டிய அவசரம் இருந்ததால், மெல்ல கிளம்ப ஆயத்தமானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;"நிறைய பேர் வந்து அவரோட புக்ஸையெல்லாம் ரிப்ரிண்ட் போட கேக்கறா.. அப்பா இருந்தவரைக்கு, அவர்தான் இதையெல்லாம் பார்த்துப்பார். அவர் போனப்புறம், என்னக் கேக்கறா.. எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு. பல புக்ஸ் இப்ப படிக்கறவாளுக்கு கிடைச்சா எவ்வளவு நன்னா இருக்கும்னு நினைச்சுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு புக்கெல்லாம் எவ்வளவு விலை போடறா.. பார்க்கும்போதே பயமா இருக்கு. அவர் காலத்துலலேயே, அதிக வெலை புக்கெல்லாம் பார்த்து, எப்படி வாங்கிப் படிப்பா, இப்படி வெல வெச்சுருக்கே அப்படிம்பார். கொண்டு வரணும், கொறைச்ச வெலைல.. எல்லாரும் படிக்கறா மாதிரி.."&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும்போது, ஆதவனின் மாமியார், தட்டில், மட்டை தேங்காயை வைத்து நின்றுகொண்டிருந்தார். சாந்தமான முகம். அற்புத மாப்பிள்ளையைப் பெற்ற ஆனந்தம். அதைவிட அவர் புகழை இன்று தமிழ் உலகம் புரிந்துகொண்டிருப்பது கண்டு ஆனந்தப்படும் நெஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆத்து மரத்துல காய்ச்ச தேங்கா இது.." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டைக் கொடுக்க வந்தவரை, கிழக்கே பார்த்து நிற்கச் சொன்னேன். பக்கத்தில் திருமதி ஹேமா சுந்தரத்தையும் நிற்கச் சொன்னேன். நான் யார் கால்களிலும் விழுபவனல்ல. அன்று விழுந்து வணங்கவேண்டும்போல் தோன்றியது. என் வழக்கப்படி நான்கு முறை சேவித்தெழுந்தேன். கண்கள் கலங்குவதை, என்னாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;hr /&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Kaagitha%20Malargal.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/320/Kaagitha%20Malargal.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;font&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அன்பு மயமான ஆதவன்... - திருப்பூர் கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் துங்கபத்திரை நதிச் சுழலில் சிக்கிக் காலமான செய்தி வானொலியில் அறிவிக்கப்பட்டது. ஆழ்ந்த இலக்கியவாதிகள் பலரையும் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்திய செய்தி. என் இனிய நண்பரும் எழுத்தாளருமான பால்நிலவன், அந்த வானொலிச் செய்தியைக் கேட்டு, அளவற்ற சோகத்தால் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். நா.பா.வை அந்தச் செய்தி மனமுடையச் செய்தது. ஆதவனைத் தம் தம்பி போலக் கருதி அன்பு செலுத்தியவர் அவர். ஆதவனின் மேல் மிகுந்த நட்புக்கொண்டிருந்தவரான இந்திரா பார்த்தசாரதி துயரவசப்பட்டார். எனக்கு உலகம் வெறுத்தது. ஆதவனே போய்விட்டாரே. இனி என்ன? அகால மரணம். அதிலும் விபத்து. அவரும் நானும் கொண்டிருந்த நட்பு ஒரு துளிப் பொறாமைக் களங்கமோ, சொந்த ஆதாயப் பின்னணிகளோ சிறிதும் கலவாத, ஆத்மார்த்தமான, அன்புமயமான நட்பு. எந்தச் சோகமானாலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உற்ற நண்பர்களையே நாம் இழக்க நேர்கிற சோகம்தான் எத்தனை கொடுமையானது!&lt;br /&gt;&lt;br /&gt;காலமான ஓரிரு நாட்களில் அம்பத்தூரிலிருந்து லா.ச.ரா. என்னைத் தேடி வந்தார். விபத்தில் மரணமடைந்த செய்தியை நானும் அவரும் பகிர்ந்துகொண்டோம். சற்று நேரம் மௌனமாக இருந்தார் லா.ச.ரா. என் மேசைமேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறே சொன்னார்: "அவனும் அழகனய்யா!"&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். அழகான எழுத்தாளர்கள் என்று நா.பா. தொடங்கிச் சிலரைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறக் கூடியவர் ஆதவன். அழகானவர் மட்டுமல்ல. அழகாகவும் சீராகவும் உடையணிபவரும் கூட. மடிப்புக் கலையாமல் இஸ்திரி போடப்பட்ட பான்ட். அதன் நிறத்திற்குப் பொருத்தமான வண்ணத்தில் சட்டை. சட்டையை "இன்" செய்திருப்பார். பளபளவென்று பாலீஷ் போடப்பட்டு மினுமினுக்கும் ஷ¥க்கள். அவரைக் கழுத்தில் கட்டிய டையோடும் நிறையப் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்க்கும் போது ஆசிரியர், பெற்றோர் கட்டளைக்கு அடங்கி ஒழுங்காக டிரஸ் செய்துகொள்ளும் கான்வென்ட் பையன் ஞாபகம் வரும். தலையைச் சீராக குழப்பமின்றி வாரியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதர்ஸ் கில்ட் கூட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தன. ஒரு வருடம் தில்லியில். மறு வருடம் வேறு ஏதாவது ஒரு நகரத்தில். எனவே ஆதர்ஸ் கில்டில் உறுப்பினராக இருந்த நான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லி போக நேர்ந்தது. தில்லி போன போதெல்லாம் இந்திரா பார்த்தசாரதி, கே. ஸ்ரீனிவாசன், கஸ்தூரிரங்கன், என்.எஸ்.ஜெகந்நாதன், கிருத்திகா, தில்லி ராஜாமணி, தம்பி சீனிவாசன், வாஸந்தி என்று தில்லிவாழ் எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்புகள் நிறையக் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தவறாமல் ஆதர்ஸ் கில்ட் கூட்டங்களுக்கு வந்துசொண்டிருந்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் நீல பத்மநாபன். நான், நீல பத்மநாபன், வெங்கட் சாமிநான், தம்பி சீனிவாசன், ஆதவன் எல்லோருமாகப் புல்வெளியில் அமர்ந்து ஒரு முறை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வருகிறது. ஏதோ காராசாரமான இலக்கியப் பரிவர்த்தனை. அப்போது கூட சமநிலை குலையாமல் மௌனம் காத்தார் ஆதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தான் ஆதவன். அவர் அமைதியிழந்து கத்தி கூச்சலிட்டு நான் பார்த்ததே இல்லை. நிதானம், பொறுமை, இணக்கம், அனுசரணை போன்ற உயர்ந்த குணங்கள் அவரிடம் இயல்பாகவே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நேஷனல் புக் டிரஸ்டில் வேலையாயிருந்த அவரை, அவரது கடைசிக் காலங்களில் பெங்கéருக்கு மாற்றினார்கள். அந்த மாறுதல் அவருக்குப் பிடிக்கவேயில்லை. தன் மனைவிக்கும் அந்த மாறுதல் பிடிக்கவில்லை என்றும் ஆனால் பெங்கéர் போகாமல் வேறு என்ன செய்வது என்றும் என்னிடம் அவர் அலுத்துக்கொண்டார். "வாழ்க்கைப் போக்கில் நேரக்கூடிய விஷயங்களை ஜீரணித்துக்கொள்ள வேண்டியதுதான்" என்று அவரை ஆறுதல்படுத்தினேன். மனமில்லாமல் பெங்கéர் போன அவர் பிறகு பெங்கéரிலிருந்து உயிருடன் திரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உவினர்கள் சென்னையில்தான் இருந்தார்கள். சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்க அவர் தவறியதில்லை. ஏதோ ஒருமுறை அப்படிச் சந்திக்காமல் போனது பற்றி அளவற்று வருந்தி அவர் கடிதம் எழுதியதாக ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் நானும் மணிக்கணக்கம்ல் பேசுவோம். பூ மாதிரி உணர்வுகள் அவருக்கு. மென்மையும் பிரியமுமாய் உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறார்போல் பேசுவார். அவருடன் இருக்கும்போது உலக வாழ்க்கை பற்றி மனத்தில் நம்பிக்கை கலந்த ஒரு பாதுகாப்புணர்வு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபத்தில் அவர் "காகித மலர்கள்" எழுதியபோது கையெழுத்துப் பிரதியில் ஒரு பாரா பாலியல் கலந்து காணப்பட்டது. ஜானகிராமன் போலத்தான் அவர் பாலியல் பிரச்னைகளை எழுதுவாரேயல்லாமல், கிளர்ச்சி நோக்கில் எழுதுபவர் அல்ல. என்றாலும் நா.பா. அந்தப் பாராவை பிரசுரிக்க விரும்பவில்லை. அந்தப் படைப்பு புத்தகமாக வரும்போது வேண்டுமானால் அவர் வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் கூறி நா.பா. அந்த வரிகளை எடிட் செய்துவிட்டார். "நா.பா. கருத்துச் சரிதான்" என்று கடிதம் எழுதியிருந்தார் ஆதவன். நா.பா., கஸ்தூரிரங்கன் இருவர் மேலும் அவ்வளவு மரியாதை அவருக்கு. தமது ஒரு புத்தகத்தை கஸ்தூரிரங்கனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபத்தில் அவர் எழுதிய நிழல்கள் என்ற கதையைப் பல்லாண்டுகள் கழித்து ஆனந்த விகடனுக்கு, தீபத்தில் முன்னரே வெளிவந்தது என்று குறிப்பிடாமல் அனுப்பிவிட்டார். விகடனிலும் அது பிரசுரமாகியது. பிறகு விகடனிலேயே ஏற்கனவே வெளிவந்த கதையை விகடனுக்கு அவர் கொடுத்தது தவறு என்று கண்டனக் குறிப்பும் வெளியாயிற்று. செய்தது தவறு என்பதுதான் என் கருத்தும். ஆனால் அவர் ஏன் அவ்விதம் நடந்துகொண்டார் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். கணையாழியில் தொடராக வெளிவந்த அவரது "என் பெயர் ராமசேஷன்" என்ற நாவல் பாலியலை உளவியல் கண்ணோட்டத்தில் ஆராயும் உயர்ந்த நாவல். நா.பா. தினமணி கதிரில் ஆசிரியராக இருந்தபோது, தினமணியின் மாத வெளியீடான கதைக் கதிரில் ஒரு நாவல் எழுதினார். கதிரில் பவுன் மூட்டை என் தலைப்பில் ஒரு நல்ல சிறுகதை எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுறுசுறுப்பாக நிறைய எழுதுபவர். இன்னும் நிறைய எழுதியிருக்க வேண்டியவரும் கூட. கொஞ்சம் ஆயுள் மட்டும் கிட்டியிருந்தால் தமிழ் இலக்கியம் பல உயர்ந்த சிகரங்களை அடைய அவர் எழுத்து உதவியிருக்கும். என்ன செய்வது? விதியின் தீர்ப்பு வேறு மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;காலமான பிறகாவது அவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கொடுக்கப்பட்டது ஒரு சின்ன ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்...இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112714420206142566?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112714420206142566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112714420206142566' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112714420206142566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112714420206142566'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_112714420206142566.html' title='ஆதவன் - பாகம் மூன்று'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112714415139476274</id><published>2005-09-19T21:01:00.000+05:30</published><updated>2005-09-19T21:19:09.833+05:30</updated><title type='text'>ஆதவன் - பாகம் இரண்டு</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தவிர்க்க முடியவில்லை -ஆதவன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Aathavan.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/320/Aathavan.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;'நானும் என் எழுத்தும்' என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது - 'இவனும் இவன் மூஞ்சியும்' என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் - என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். "யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே - இந்த - என்ன சொன்னீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"எமோஷனல் கான்ஃப்ளிக்ட் சரியாக Build up ஆகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம், வாஸ்தவந்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் Craftsmanship நன்றாக இருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி நினைக்கிறீர்களா நீங்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"Superb."&lt;br /&gt;&lt;br /&gt;நான் சந்தோஷப்படுகிறேன். அவரும் சந்தோஷப்படுகிறார் - வம்புதும்பு செய்யாமல் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறவர்களைக் கண்டால் யாருக்குத்தான் சந்தோஷமாயிருக்காது? நான் அவருடன் ஒத்துப் போகும்போது, அவருடைய கூர்மையான ரசனையும், எதிலும் எளிதில் மிரண்டுவிடாத பக்குவ நிலையும் நிரூபணமாகின்றன. உறுதிப்படுகின்றன. அவர் மிரளுகிறவரில்லை. அதே சமயத்தில் குறுகிய பார்வையுடையவருமில்லை. பாராட்டுக்குரிய எந்தச் சிறு அம்சத்தையும் பாராட்டாமல் விடுகிறவரில்லை. என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே? இதுபோன்ற நல்லெண்ணமும் விஷய ஞானமும் உள்ளவர்களுடைய சிநேகிதம் என் எழுத்து வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் கிட்டியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! அப்போது நான் சிறிதும் ஒச்சமில்லாத - எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும் திருப்தியளிக்கக்கூடிய - சிறந்த கதைகளை எழுதியிருக்கக் கூடுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கத்தில், நான் சிறந்த கதைகளைத்தான் எழுதுகிறேனென்று தீர்மானமாக நம்புகிற - என் எழுத்துக்களின்மேல் மாறாத ஈடுபாடும் விசுவாசமும் கொண்ட - வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சந்திப்புகளினால் என் அதிருப்தியும் அவநம்பிக்கையும் சற்றே விலகுவது போலிருக்கிறது. இவர்களுக்காக - இந்தப் பரிசுத்தமான அன்புக்காகவும் சந்தோஷத்துக்காகவும் - நான் எழுத வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியிருந்தாலென்ன? முதன்முதலில் நான் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப் போடும் தோசைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக் கட்டும் குழந்தைகளைப் போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக் கொட்டிக்கொண்டு படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர் குழாம் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்படாதவனாக - இருந்தேன். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தனிமை மற்றவர்களும் நானும் மிகவும் உணர்ந்த ஒன்றாக - சில சமயங்களில் ஒரு பாசாங்காகவே - மாறிவிட்டது. 'நான் தனி' என்று சொல்லிக் கொள்வதும் பிறரால் சுட்டிக்காட்டப்படுவதும் எனக்கு ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டது. முன்னெல்லாம் இப்படியில்லை. நான் தனி என்பதைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளத் தெரியாத ஒரு நிலையில், என்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து சில அம்சங்களில் சில விதங்களில் மாறுபாடுகளும் குறைபாடுகளும் உள்ளனவாக இருந்தது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாகத் தோன்றுகிற நிலையில் - நான் இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும் தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒருநாள் நான் எழுதத் தொடங்கினேன். எனக்கென்று ஒரு புதிய உலகம் - தனி உலகம் - நிர்மாணிக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களிலேயே என் தனிமை தொடங்கி விட்டது. எழுத்தும் தொடங்கி விட்டது. ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நானும் என் சிநேகிதன் ஒருவனுமாகச் சேர்ந்து, 'அணுகுண்டு' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். எங்களிருவருக்கும் பெயரில் ஒற்றுமை - சுந்தரம்; தனிமையிலும் ஒற்றுமை. ஆனால் அவன் தனிமை வேறு மாதிரியானது. அது மற்றவர்களைவிட நிறைய மார்க்குகள் வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் சரிசமமாகப் பழக விரும்பாத அல்லது பழக இயலாத கெட்டிக்கார மாணவனின் தனிமை. என் தனிமையோ, சாமர்த்தியக் குறைவு காரணமாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் விளைந்த தனிமை. எப்படியோ, எங்களிருவரின் தனிமையுமாகச் சேர்ந்து, அணுகுண்டைத் தோற்றுவித்தது. ஒன்பதாம் வகுப்பில் சுந்தரம் கலைப்பிரிவும், நான் விஞ்ஞானப் பிரிவும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு செக்ஷன்களில் பிரிந்து செல்லும் வரையில் அணுகுண்டு ஜாம்ஜாமென்று நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்து, பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்டதென்றாலும், நான் உண்மையிலேயே ஒரு எழுத்தாளனாக உருவானது 1962ல்தான். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். முதன்முதலாகக் காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில் ஏதோ எழுதித் தள்ள வேண்டுமென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுத வேண்டுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும், எனக்காகக் காத்திருந்து என்னுடன் பேசியவாறே நடந்து வந்ததும், திடீரென்று உலகமே ஒரு புதிய ஒளியுடன், புதிய அர்த்தத்துடன் என் கண்களுக்குத் தென்படத் தொடங்கியது. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான விஷயங்களும் கூட, வாழ்க்கையில் சில நிஜமான கணங்களுக்கு முன்னால் எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகிவிட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் பெரும் உதவி செய்த, ஒரு காரணகர்த்தாவாகவே இருந்த அவள், இன்று எங்கேயிருக்கிறாளோ அறியேன். அவள் கன்னடக்காரி; இந்த வரிகளை அவள் படிக்க சான்ஸ் இல்லை. பிற்பாடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு பெண்ணும் தமிழ் தெரியாதவளாக, என் கதைகளைப் படிக்காதவளாகவே இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால், அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும், பெண்களும், ரெஸ்டாரண்டு, சினிமா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள். அளவளாவினார்கள். எழுத்தாளனாக இருப்பதில் என்ன செளகரியம் பாருங்கள் - 'ரெஸ்டாரண்டும் சினிமாத் தியேட்டரும் வராத கதை ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?' என்று என் சென்னை நண்பன் ஒருவன் போன வருடம் என்னைக் கேட்டான். கெட்டிக்காரன்தான். என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும் இடங்களையும் வைத்துத்தானே என்னால் எழுத முடியும்? என் வாழ்வின் பெரும் பகுதி ரெஸ்டாரண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கழிந்திருக்கிறது. என் பழைய நண்பன் சுந்தரம் ஐ.ஏ.எஸ் ஆபீசரான பிறகு என்னைச் சந்தித்ததும் ஒரு ரெஸ்டாரண்டில்தான். "ஹலோ, அணுகுண்டு!" என்று நாடக பாணியில் கூறியவாறு அவன் என்னை நோக்கிக் கையை நீட்டியபோது, அவன் குரலின் தொனியும் தோரணைகளும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் நீட்டிய கரத்தைப் பிடித்து நான் குலுக்கினேன். "ஹலோ" என்றேன். எனக்கும் அப்போது கொஞ்சம் திமிரும் கர்வமும் உண்டாகியிருந்தது. என் கதைகள் ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கியிருந்தன. அவன் ஏதோ சாதித்திருந்தானென்றால், நானுந்தான் ஏதோ சாதித்திருந்தேன். நான் இன்னும் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதாகத்தான் கேள்விப்படுவதாகச் சொன்னான். நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன். சின்னப் பையன்களாக இருக்கும்போது செய்யப்படும் ஒரு அசட்டுத்தனத்தை, நான் இன்னமும் செய்து கொண்டிருப்பதாக அவன் அபிப்ராயப்படுவது போலிருந்தது. 'ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!' என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரம் என் கதைகளைப் படித்திருந்தானோ என்னவோ, ஆனால், வேறு பலர் படிக்கத் தொடங்கியிருந்தார்கள். என் பெயரைக் குறித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். விகடனில் என்னுடைய கதைகள் பல 'முத்திரை' பெற்று வெளிவந்தன. "இவர்தான் ஆதவன், ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிறவர்" என்று சிலர் பக்தியுடனும் சிலர் குத்தலாகவும் கூறத் தொடங்கியிருந்தார்கள். மனித மனத்தின் நெளிவு சுளிவுகளையும் வக்கிரகங்களையும் புரிந்துகொள்ள இந்த அபிப்ராயங்கள் எனக்கு மிக உதவியாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விகடனில் என் கதைகள் வெட்டுப்படாமல் முழுமையாகப் பிரசுரமான ஒரே காரணத்தால் நான் தொடர்ந்து என் கதைகளை அவர்களுக்கு அனுப்பினேன். பிறகு தீபம் வரத்தொடங்கியது. நான் தீபத்தில் எழுதலானேன். என் எழுத்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமும், தீபத்தின் தோற்றமும் ஒருசேர நிகழ்ந்தது என் அதிர்ஷ்டந்தான். ஆனால், தீபத்தில் இடம்பெறத் தக்க அளவு தகுதிபெற்று விட்டதற்காக மகிழ்ச்சியடைவது போலவே, விகடனில் எழுதத் தொடங்கியதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது. பெரிய பத்திரிகைகள்தான் எழுத்தாளர்கள் பலரைக் கெடுத்திருப்பதாகக் குமுறுகிறவர்கள், சிறிய பத்திரிகைகளில் 'செல்லம்' கொடுக்கப்பட்டுக் குட்டிச்சுவராகப் போன எழுத்தாளர்களை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை. அல்லது இவர்களைக் குட்டிச் சுவர்களாக ஒப்புக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு' என்ற என் கதை விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமான பொழுது, சக எழுத்தாளர் ஒருவர், "முத்திரைக்காகவென்றே எழுதியிருக்கிறீர்கள்" என்று அபிப்ராயம் தெரிவித்தார். முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது. தீபத்தில் நான் எழுதிய சில நல்ல கதைகளை யாரும் படித்ததாகக் கூடக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், அதிக சன்மானம் பெற்று இப்படியொரு கதை வெளியானவுடன், பலர் மிகவும் மெனக்கெட்டு என்னிடம் அந்தக் கதை ஏன் நன்றாக இல்லை என்று விவரிப்பதற்குப் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கெல்லாம் என் நன்றி. என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன். தாஜ்மகால் கதை என்னுடைய தலைசிறந்த முயற்சியென்று நானும் நினைக்கவில்லை. ஆனால், அது ஏதோ ஏமாற்று வித்தை என்பது போலச் சிலர் கண்ணைக் சிமிட்டிச் சிரிக்கும் போது, எனக்கும் இவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. என்னைக் கறுப்பாக நிரூபிப்பதன் மூலம் தம்மை வெளுப்பாக நிரூபித்துக் கொள்ள முயலும் சாகஸம் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை உண்மையாக்க முயலும் ஏக்கமும் ஆதங்கமும் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை மறுப்பதன் மூலமாகத்தான் இன்னொருவருடைய அர்த்தங்கள் உறுதிப்படுகின்றனவென்றால் - அந்த அளவுக்கு அவை பலவீனமானவையென்றால் - பாவம்! மறுத்துக் கொள்ளட்டும்; எனக்கு என் தேடல்தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்க முடியாமல் ஈடுபடும் ஒரு தேடல். என்னை நானே உட்படுத்திக் கொள்ளும் ஒரு பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து, ஒரு அனுபவம் அல்லது ஒரு உணர்ச்சி - இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு, விவரணை, பகிர்ந்து கொள்ளல், ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை, என்னையுமறியாமல் என்னுள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின், சலனங்களின் தேடல் என் தேடல்கள் நிறைவு பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் நான் வெற்றி பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டதாக எனக்கு உறுதியேற்படும் சமயங்களில், மற்றவர்கள் இந்த வெற்றியை அங்கீகரிப்பதோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதோ என்னைப் பாதிக்காத, நான் கவலைப்படாத விஷயங்கள். அதேபோல பரீட்சைகளில் நான் தோல்வியடையும்போது, என் தேடல்கள் நிராசையடையும்போது, மற்றவர்களின் எந்தவிதமான புகழ்ச்சிகளும் மதிப்பெண்களும் இந்தத் தோல்விகளை வெற்றிகளாகவோ, நிராசையைச் சந்துஷ்டியாகவோ மாற்றிவிடப் போவதில்லை. ஒவ்வொரு கதையை எழுதிய பின்பும் நான் என்னையும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன் - மனைவி சமத்துவம் என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்துகொண்டேன். ஏதோ ஒரு கட்டத்தில் ஒருவரிடம் மற்றவர் பணியும்போது தான் அமைதியும் அந்நியோந்நியமும் உண்டாகிறது. இந்த நிலை ஏற்படும்வரையில் இருவருக்குமிடையே ஒரு மெளனமான போராட்டம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். தாஜ்மகால் கதையில் மனைவி பணிய விரும்புகிறாள். கணவன் இதை விரும்பவில்லை. அதே சமயத்தில் தான் பணியவும் அவன் தயாராக இல்லை. கடைசியில் அவள் விருப்பத்துக்கு அவன் பணிகிறான். அவள் பணிவை ஏற்றுக் கொள்கிறான் - தன் காலைப் பிடித்துவிடச் சொல்கிறான். வெற்றி யாருக்கு? மனைவிக்குத்தானே! அந்த நயம் சிலருக்குப் புரிந்தது. சிலருக்குப் புரியவில்லை. பலர் கண்களுக்கு, மனைவி கணவனுடைய காலைப் பிடித்துவிடும் இமேஜ்தான் பூதாகாரமாகத் தெரிந்தது. ஒருவிதக் குற்றமனப்பான்மை காரணமோ என்னவோ? மரபுக்கு வால்பிடிக்கும் இக்கதை முதூதிரை பெற்றதில் ஆச்சரியமிலலையென்று இவர்கள் நினைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு - சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு - இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன். பலர் நினைப்பது போல இவர்கள் அப்படியொன்றும் சராசரியானவர்களல்லவென்பதை உணர்ந்து, நான் சொல்ல விரும்புபவற்றை இவர்களுக்குச் சொல்கிறேன். அதே சமயத்தில் இவர்கள் விரும்புகிறவற்றையெல்லாம் சொல்லவும் நான் முயல்வதில்லை. எதை எழுதுகிறேன் என்பதையும், எப்படி எழுதுகிறேன் என்பதையும் நான்தான் தீர்மானிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விமரிசகர் என் கதையைப் பாராட்ட, அதே கதையை என் தாயாரோ, எதிர்வீட்டு இளைஞனோ, ஆபீஸில் என்னுடன் வேலை செய்கிறவரோ சுமாராயிருக்கிறதென்று சொன்னால், பின் சொன்னவர்களின் அபிப்பிராயங்களை நான் அலட்சியப்படுத்துவதில்லை. எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத் தொலைவில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப் போய்ப் பார்க்கும் ஆசையினால், பிரத்யட்ச உலகத்தினுள்ளே சதா இயங்கிக் கொண்டிருக்கும் பல சூட்சுமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால், அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக் கொள்ளும் ஆசையினால், நான் மேற்கொண்டுள்ள ஒரு பயணம். நான் செல்கிற பாதையையும் திசையையும் பற்றி எனக்கே ஒரு குழப்பமில்லாத நிச்சயமும் தெளிவும் இருக்கிறவரையில்தான், என் பயணம் எனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, பயனுள்ளதாக அமையும். ஏதோ ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்துப் பத்துப் பேர் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் என்பதற்காக, அதே கட்டத்தில் தேங்கிவிட நான் விரும்பவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டப்பட்டுக் கதைகள் எழுதியது போக மிஞ்சும் நேரத்தை, நான் ஒரு சாதாரண மனிதனாக, வேறு சாதாரண மனிதர்களுடன் அமைதியாகக் கழிக்கவே விரும்புகிறேன். மண்ணின் ஸ்பரிசத்திலும் வாசணனயிலும் இன்பமடையும் குடியானவன்போல, இந்தச் சாதாரண மக்களுடன் கலந்து பழகும்போதுதான் எனக்கு இன்பமுண்டாகிறது. இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது. எனக்கு இது இல்லை. நான் எப்பொழுதும் சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டும் சுரங்கங்கள் வெட்டிக் கொண்டும் மதிற் சுவரேறிக் குதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கே இலக்கியச் சிறையின் காவல்காரர்களின் துப்பாக்கித் தோட்டாக்களைச் சம்பாதித்தவாறு இருக்கிறேன். சுடட்டும், நிறையச் சுடட்டும். ஒருநாள் நான் நிச்சயம் தப்பித்துக் கொண்டு போகத்தான் போகிறேன். என் பாதை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் என்னுடன் வரலாம். நான் நிர்மாணிக்கப் போகும் உலகத்தில் உங்களுக்குச் சிரத்தையிருந்தால் நீங்களும் என்னுடன் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் விரும்பும் உலகங்களை என் மூலம் நிர்மாணிக்க, தயவுசெய்து முயலாதீர்கள். அது என்னால் இயலாத காரியம். என் பாதையின் சில கட்டங்கள் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், எனக்குச் சரியென்று தோன்றுகிற பாதையில்தான் நான் செல்ல முடியுமென்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப் பையனாக இருக்கும்போது, புதுச் சட்டை அணிந்தவுடன் எனக்குச் சில நாட்களுக்கு ஒரே கூச்சமாக இருக்கும். யாராவது கவனிக்க வேண்டும் போல் இருக்கும்; ஒருவரும் கவனிக்காமலிருந்தால் தேவலை போலவும் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் எதிலும் புதுமை தொடங்கி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகிறது. எழுதத் தொடங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. சட்டைகளையாவது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் புழங்க வேண்டியிருக்கும் நிர்ப்பந்தம் காரணமாக, என்னைச் சுற்றியிருப்பவர்கள் அணிவதால், நானும் அணிவதாகச் சொல்லலாம். ஆனால், எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல. குச்சு நாய்க்குட்டியின் சுறுசுறுப்பையும் புதிதாகப் போட்டுக் கொண்ட கொண்டையையும் பற்றி மரியாதைக்காகப் பிரஸ்தாபிப்பதுபோல, "பிரமாதம் ஸார், உங்கள் கதை!" என்று ஒரு ஸ்வீட் யங்க் திங்க் தேவைக்கதிகமாகப் புன்னகை செய்யும்போதோ அல்லது வேறு சிலர், என் அகம்பாவத்துக்குத் தீனி போட விரும்பாததுபோல, நான் கதைகளெழுதுவதொன்றும் தமக்குப் பெரிய விஷயமல்லவென்று காட்டிக் கொள்ளச் சிரமப்படும்போதோ, எனக்குச் சிரிப்புத்தான் பொத்துக் கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடையீர்! எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன்; முடிந்தது. காதலித்தவளை மறக்க முயன்றேன்; முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எத்தனைதான் உதாசீனப்படுத்திய போதிலும், "தூக்கிக் கொள்ளணும்!" என்று சிணுங்கும் குழந்தையைப் போல இது மீண்டும் மீண்டும் என் காலை வந்து கட்டிக் கொண்டதால், 'ஏதோ நீயாவது என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயே!' என்று நான் இதைத் தூக்கிச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன். என் மூஞ்சிதானே என் குழந்தைக்கும் இருக்கும்? இது எல்லாருக்கும் பிடித்திருக்க நியாயமில்லை. இதற்காக மூஞ்சியை மாற்றிக் கொள்வதோ சாத்தியமில்லை. ஆகவே என் எழுத்துக்களைப் படித்துவிட்டு, 'இப்படி ஒரு எழுத்து ஏன்? இப்படிப்பட்ட முயற்சி ஏன்?' என்று அங்கலாய்ப்பவர்களும் சிரிப்பவர்களும் கோபப்படுகிறவர்களும் விரட்ட விரட்ட மூக்கில் வந்து உட்காரும் ஈயைப்போல, இரவின் அமைதியினூடே திடீரென்று பக்கத்து வீட்டிலிருந்து கேட்கும் குழந்தையின் அழுகைச் சத்தத்தைப் போல, இதையும் சகித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு தொந்தரவாக நினைத்து, அதிகமாகச் சட்டை செய்யாமல், வேறு நல்ல எழுத்துக்களையும், அவற்றின் எழுத்தாளர்களையும் தேடிக் கண்டெடுப்பதிலும், அவர்களைச் சீராட்டுவதிலும், தம் பொழுதை உபயோகமாகச் செலவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Ramaseshan.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/320/Ramaseshan.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆதவன் - &lt;a href="http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/ashokamitran.html"&gt;அசோகமித்திரன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனும் நானும் 'தீபம்' காரியாலயத்தை விட்டிறங்கி மவுண்ட் ரோடு ரவுண்டானா அருகில் நடந்து வந்தோம். அண்ணா சிலை அப்போது நினைக்கப்படக்கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு இன்னும் வயதாகியிருக்கும் என்று நினைத்தேன்" என்று ஆதவன் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு நிறையவே ஆகிவிட்டது. ஆனால் நான்தான் உங்களை இன்னும் வயதானவராக எதிர்பார்த்தேன்." என்று பதில் சொன்னேன். அது 1967ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ' 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருபது ஆண்டுகள் எங்கள் இருவருக்கும் பலவிதத்தில் ஒரே மாதிரியாக இருந்துவிட்டது. பாத்திரங்கள் என்று எடுத்துக் கொண்டால் எங்கள் இருவர் படைப்புகளிலும் நிறைய ஆள் மாறாட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் போதைக் கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனுடைய படைப்பு ஒன்றில் திடீரென ஓர் இளைஞன் நினைப்பான் : "குருதத் கூடத் தற்கொலை செய்துகொண்டு போயாயிற்று. இனி நான் ஏன் இருக்க வேண்டும்?" எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இளம் வயதில் ஓர் உன்னதமான இலட்சிய நிலையில் இத்தகைய மனநிலையை யார்தான் அனுபவிப்பதில்லை? எந்தச் சுயநலக் கலப்பும் இல்லாத இந்த நிலைக்குப் புறவாழ்க்கையில் ஒரு பலனும் கிடையாது. ஆனால் இத்தகைய சோகமும் ஏக்கமும் ஒரு மனிதனின் உண்மையான பரிமாணங்கள் அல்லவா? குருதத் ஒரு ஹிந்தி சினிமாப்பட டைரக்டர். அவருடைய படைப்புகளிலிருந்து ஒரு தோற்றம் அவரைப் பற்றி லட்சக்கணக்கானோர் மனத்தில் கெட்டிப்பட்டு அவர் திடீரென்று இறந்தவுடன் ஒரு கணம் வாழ்க்கையே அர்த்தமற்றதாகத் தோன்றச் செய்து விடுகிறதல்லவா! இந்தத் தோற்றமும் இப்படி நினைப்பதும் லெளகீக உலகிற்கு உதவாத 'ரொமாண்டிக்' சாயைகள் என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால் அச்சாயைகள் மனத்தில் நேரும்போது மனிதன் எத்தகைய புனித தளத்திற்கு உயர்ந்து விடுகிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனின் முதல் நாவலும் அவருடைய படைப்புக்களில் சிகரம் போல இருப்பதுமான 'காகித மலர்கள்' ஒரு விதத்தில் அவர் குருதத்திற்குச் செலுத்திய அஞ்சலிதான். குருதத்தே 'காகித மலர்கள்' என்ற தலைப்பில் மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒரு திரைப்படம் எடுத்தார். அப்படத்திற்குப் பிறகு தன் கதாநாயகன் போல குருதத்தின் வாழ்க்கையும் சிதறுண்டு போயிற்று. ஆனால் ஆதவனுடைய நாவல் ஒரு சிறப்பான இலக்கியப் பயணத்தின் துவக்கமாயிருந்தது. அவர் எழுதிய 'பழைய கிழவர் புதிய உலகம்' ஆண்டின் சிறந்த சிறுகதையாக 1974ல் தேர்தெடுக்கப்பட்டது. 'கணபதி ஒரு கீழ் மட்டத்து குமாஸ்தா' ரஷ்ய மொழியில் பெரும் பாராட்டு பெற்றது. அவருடைய பல கதைகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகித் தற்காலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு மதிப்புக்குரிய இடம் வாங்கித் தந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனுடைய எழுத்துபோலவே அவருடைய சுபாவமும் மென்மையானது. வாழ்க்கையெல்லாம் அவர் பிறருக்குச் செய்த சிறுசிறு தியாகங்கள் கணக்கற்றவை. சாதுவானவனைத் துன்புறுத்துவதில் களிப்படையும் வக்கிர குணமுடையவர்கள் பால்கூட அவருக்குப் பரிவுதான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்ச் சாவும் தற்கொலையும் இன்றையப் புனைகதைப் படைப்புகளில் அடிக்கடி வருவதுதான். ஆனால் ஆதவனுடைய கதைகளில் இவை சற்று அதிகமாகவே காணப்படுவதாக நான் நினைத்ததுண்டு. இந்தக் கற்பனைச் சாவுகள் படிப்பவர்களை ஓரளவு திடமனது உடையவர்களாக்க உதவும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் 45 வயதுகூட முடியாதபோது, சிருங்கேரி புண்ணியத் தலத்தில் ஆற்றில் குளிக்கப் போனவர் சுழியில் சிக்கி, இறந்தார் என்று ஜூலை இருபதாம் தேதி தகவல் கிடைத்தபோது திடமனத்தோடு இருக்க முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112714415139476274?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112714415139476274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112714415139476274' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112714415139476274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112714415139476274'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_19.html' title='ஆதவன் - பாகம் இரண்டு'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112714339201118420</id><published>2005-09-19T20:36:00.000+05:30</published><updated>2005-09-19T21:06:13.836+05:30</updated><title type='text'>ஆதவன் - பாகம் ஒன்று</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Aathavan_1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/320/Aathavan_1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/"&gt;திசைகள் &lt;/a&gt;செப்டம்பர் 2004 இதழ் &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D"&gt;ஆதவன் &lt;/a&gt;சிறப்பிதழாக வெளிவந்தது. அப்போது ஆதவனின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமில்லை. சமீபத்தில் படித்த பின்பு இணையத்தில் தேடிப்பார்த்தேன். திசைகளிலிருந்து அது காணாமல் போயிருந்தது. கூகிளின் கேஷ் புண்ணியத்தில் அது படிக்க கிடைத்தது. அதை இங்கே சேமித்து வைத்துக்கொள்கின்றேன். ஒரே ஒரு சிறிய எச்சரிக்கை. சற்றே நீளளளளளளளமான பதிவு இது. பின் எப்போதாவது பயன்படும் என்று பதிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காகித மலர்கள் - ஒரு மதிப்பீடு    தி.க.சிவசங்கரன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூறு வயதைக் கடந்துள்ள தமிழ் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் வளர்ச்சிக்கும் உயிராற்றலுக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது, ஆதவனின் "காகித மலர்கள்". இது ஓர் 'அக உலக நாவல்' என்று கூறலாம். 30 அத்தியாயங்களையும், சுமார் 490 பக்கங்களையும் கொண்ட இதில் சம்பவங்கள் அதிகம் கிடையாது. மிக நிதானமாகவும் ஆழமாகவும் படித்து அனுபவிக்க வேண்டிய படைப்பு இது. பல்வேறு பாத்திரங்களின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்திரிக்கும் இந்நாவலின் களம், புதுடெல்லி. ஒரு பரந்த பகைப்புலத்தில், இலக்கிய ஓவியமாக இந்நூல் தீட்டப் பெற்றுள்ளது. 1972 ஏப்ரல் - 1975 மார்ச் கால கட்டத்தில் இந்நாவலில் இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்கட் பகுதியினரின் வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் ஆகியவற்றைக் காணலாம். புதுடெல்லியின் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம் (பஸ் போக்குவரத்துத்), தொழிலாளர் உலகம் முதலியவற்றின் பிரதிநிதிகளை இதில் சந்திக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;- உணவு அமைச்சகத்தில் டிபுடி செக்ரடரியாகவும் தென்னிந்தியக் கிளப்பின் காரியதரிசியாகவும் இருந்து, தமது பல்வேறு வேடங்களால் ஜாயிண்ட் செக்ரடரியாகப் பதவி உயர்வு பெறும் பசுபதி;&lt;br /&gt;- நவநாகரிகப் பழக்க வழக்கங்களில் திளைத்து, தன் கணவனின் பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருந்து, நாடக நடிப்பில் ஈடுபாடுள்ள குடும்பத் தலைவியாக விளங்கும் மிஸஸ் பாக்கியம் பசுபதி (வயது 52);&lt;br /&gt;- ஐந்தாண்டுகள் அமெரிக்காவில் பயின்ற பின்னர் தாயகம் திரும்பி, ஓர் அமெரிக்க சர்வகலாசாலையில் 'எகாலஜி' (இயற்கை - சூழ்நிலை இயல்) என்னும் விஞ்ஞானத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுரை எழுத முனைந்துள்ளவனும், பசுபதி தம்பதியின் மூத்த மகனுமான விசுவம் (வயது 32);&lt;br /&gt;- விசுவத்தின் மனைவியும், விமானக் கம்பெனியில் ஓர் ஊழியருமான பத்மினி;&lt;br /&gt;- கல்லூரிப் பரீட்சைகளில் பலமுறை தோற்று, பி.ஏ. இறுதிப் பரீட்சைக்கு வேண்டா வெறுப்பாக ஆயத்தமாகிக் கொண்டு, அதே சமயத்தில் 'ரொமாண்டிக்' கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழும் இளங்கவிஞனும், விசுவத்தின் தம்பியுமான செல்லப்பா (வயது 24);&lt;br /&gt;- மேலைய கலாச்சாரத்தில் பற்றுக்கொண்ட ஆவேசமிக்க கல்லூரி மாணவர் தலைவனும், செல்லப்பாவின் தம்பியுமான பத்ரி ஆகியோரைக் கொண்ட குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்நாவலின் பிரதான பாத்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸஸ் பாக்கியத்துடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மத்திய அமைச்சர்; செக்ஷன் ஆபீசர் எம்.ஜி.ஒய். ஐயர்; அவர் மகன் (சீற்றமுள்ள கல்லூரி மாணவன் - பத்ரியின் நண்பன் - ஆங்கில எழுத்தாளன்); கணேசன்; 'டைம்ஸ்' பத்திரிகையின் துணை ஆசிரியரும் பசுபதி குடும்பத்தின் நண்பருமான நரசிம்மன்; அந்தக் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவளும், கல்லூரி மாணவியும், பத்ரி, கணேசன், செல்லப்பாவின் சிநேகிதியும், சுதந்திரப் பிரியையுமான தாரா; பிரபல வலதுசாரி எம்.பி.யான ஆர்யபிரகாஷ்; அவர் கட்சியைச் சேர்ந்த மாணவர் யூனியன் தலைவர் ராம்கிஷோர்; பத்திரிகை ஆபீஸ் டைப்பிஸ்ட் மற்றும் செல்லப்பாவின் நண்பனான ரமணி; விசுவத்தின் நண்பனும் விவசாய ஆராய்ச்சிக் கழக ஊழியனுமான உண்ணி, அவன் மனைவி முதலிய பாத்திரங்கள், புது டெல்லியின் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டுப் பிரிவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரைவர் கபூர்சந்த், கண்டக்டர் ராம்பிரஷாத், பசுபதியின் வீட்டு வேலைக்காரன் ராம்சிங் முதலிய பாத்திரங்கள், கீழ்த்தட்டுப் பிரிவினர். சுமார் 20-க்கு மேற்பட்ட பாத்திரங்கள், இந்நாவலின் ஊடும் பாவுமாக உள்ளனர். இவர்களின் மனப்போக்குகளும் செயல்பாடுகளும் இந்த நாவலுக்கு உருக்கொடுக்கின்றன. வர்ணனைகள் மற்றும் உரையாடல்கள் வாயிலாகவும் இந்நாவல் விரிவடைகிறது; ஆழமும் சுவையும் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாத்திர இயல்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலின் சில குறிப்பிட்ட பாத்திரங்களின் இயல்புகளைக் காண்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. விசுவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இயற்கையின் நியதிகளை உணருதலையும், அவற்றைப் பேணுதலையும், ஒரு முக்கிய அடிச்சரடாக இந்நாவல் கொண்டுள்ளது' என்று ஆதவன் கூறுகிறார். எனவே, 'எகாலஜி' (இயற்கை - சூழ்நிலை இயல்) விஞ்ஞானியும் அறிவு ஜீவியுமான விசுவம், இந்நாவலில் ஒரு பிரதான பாத்திரம் என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்திய நகரங்களின் சூழ்நிலையில் யந்திர நாகரிகத்தின் பாதிப்புகளும் விளைவுகளும்' என்ற தலைப்பில், விஸ்கான்ஸின் யுனிவர்ஸிடிக்கு இன்னும் 6 மாதங்களுக்குள் விசுவம் ஆய்வுரை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, புது டெல்லியிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மனைவியுடன் அவன் வந்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிவும் இங்கிதமும், உண்மையில் நாட்டமும், விடுதலை உணர்வும், தன்னடக்கமும், தனது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆர்வமும் கொண்டவன் விசுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;'துரதிருஷ்டவசமாக அவன் யாருடனும் ஒத்துப்போக முடியாத ஒரு டைப்; மூடி ஃபெல்லோ. உக்கிரமான - சில சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும் - கொள்கை வீரன்' என்று விசுவத்தைப் பற்றி அவன் அம்மா மிஸஸ் பாக்கியம் வருணிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவன் மனைவி பத்மினியின் பார்வையில் - விசுவம் ஒரு ஹீரோ; உல்லாசப் பயணி; பைத்தியம்; குழந்தை; சோம்பேறி; ரொம்ப சென்சிடிவ்; உலக சகோதரத்துவத்தைப் பற்றிச் சொல்லுகிறவன்; ஆனால் நாலு பேருடன் கலகலப்பாக பழகத் தெரியாதவன்!&lt;br /&gt;&lt;br /&gt;விசுவத்தின் லட்சியம் என்ன? அடிப்படையான குணாம்சம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குள் விசுவம் இவ்வாறு சிந்திக்கிறான்: ஒரு டாக்டர் பட்டம்; அதன் மூலம் ஓர் உயர்ந்த பதவி - இதுவா அவன் லட்சியம்? இல்லை. அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தான் வேண்டுவது என்ன என்பது பற்றி ஒவ்வொரு கணமும் தெளிவுடன் இருக்கவேண்டும். தன்னுடைய அப்பாவைப் போலப் போராட்டமேயன்றி, அதிகச் செலாவணி பிம்பங்களுடன் அடித்துச் செல்லப்படுவதை அவன் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'தன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக் கொள்வதுதான் அவனுக்கு முக்கியம். தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்து கொள்வதுதான் முக்கியம். ஆழத்தில், வெகு ஆழத்தில், அவன் யார்? அவன் யாசிப்பது எது? இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும். தேடியவாறு இருக்கவேண்டும். மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகாமல் அவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இது சாத்தியம்தானா?'&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தன்னைப் பற்றிய வேதாந்த விசாரணையில் ஈடுபடும் விசுவம், 'இயற்கையைத் தொழுதலை மீண்டும் நாகரிகமாக்குவதுதான்' உலகம் அழியாமல் காப்பதற்கான ஒரே வழி என்றும் எண்ணுகிறான். 'இது அவ்வளவு சுலபமானதல்ல. மரங்களையும் செடி கொடிகளையும் நேசிப்பது என்பது தனிமைப்படுத்தப்படக்கூடிய ஓர் அம்சமல்ல; விஷயமல்ல. பல தலைமுறைகளாக வளர்ந்து ஸ்தாபிதமாகியுள்ள ஒரு மனப்போக்கே மாற்றப்பட வேண்டும்' என்று கருதுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியின் தாறுமாறான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கியவர்கள் யாராவது ஒரு ஸ்டுபிட் அண்டர் செக்ரடரி, டிபுடி செக்ரடரி அல்லது இவர்களைப் போன்ற ஆசாமியாக இருக்கும் என்று கணேசன் கூறியபொழுது, விசுவம் இவ்வாறு சொல்கிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;'அண்டர் செக்ரடரியும் டிபுடி செக்ரடரியும்கூட நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டவர்கள்... அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. இந்த ஸிஸ்டமே-அமைப்பே தவறானது'.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கருதும் விசுவம், நாவலின் இறுதியில் எவ்வாறு இருக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;'தன் கவர்ச்சிகரமான பிரதிபலிப்புகளை நாடி, நாடியதைக் கண்டதாக மயங்கி, தன்னிடமிருந்து தப்பியவாறு' இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஏதேதோ பொய்களில் சிக்கிக் கொண்டேன்; என்னைக் காப்பாற்று' என்று பத்மினியை நினைந்து வருந்துகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை அறிவிக்கும் தந்தியைக் கண்டவுடன், அவன் மனம் இலேசாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதான பாத்திரமான விசுவம், ஒரு சிறந்த படைப்பு. இந்த அறிவு ஜீவியின் உளப் போராட்டங்கள், நன்கு சித்திரிக்கப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. செல்லப்பா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரலில் பி.ஏ.யை முடிக்க எண்ணும் செல்லப்பா, மென்மையான உள்ளம் படைத்தவன்; பணிவும், அன்பும், ஒத்துழைப்பும், நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவன். மிஸஸ் பசுபதியின் தனி அன்புக்குப் பாத்திரமான செல்லப் பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் பரீட்சை மற்றும் பாடப் புத்தகங்களை வெறுப்பவன்; ரொமாண்டிக் கனவுலகில் சதா சஞ்சரிப்பவன்; பெண்ணழகை ரசிப்பவன்; இளங் கவிஞன்; கலை - இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவன் தன்னம்பிக்கை அற்றவன்; முயற்சி செய்யத் தயங்குபவன்; வாழ்க்கையின் நிஜங்களுக்கு அஞ்சி, கற்பனைகளில் சுகம் காண்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்தந்தச் சமயங்களில் செய்யவேண்டிய விஷயங்கள் அதற்கான நேரம் கடந்த பிறகுதான் அவனுக்கு எப்போதுமே புலப்படுகின்றன; மிக எளிய முடிவுகளை எடுப்பதில் அவனுக்கு எப்போதுமே சாமர்த்தியம் போதாது'.&lt;br /&gt;&lt;br /&gt;'செல்லப்பாவின் பிரச்சினைகள் எல்லாம் தற்செயலாகத் தீர்ந்தால்தான் உண்டு; அவனாக அவற்றைத் தீர்க்க சக்தியற்றவன்'.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் ரமணியும் செல்லப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் சந்திப்புகளும் உரையாடலும் மிகச் சுவையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணிக்குத் திருமணம் ஏற்பாடாகிவிட்டதால், செல்லப்பாவின் தனிமையும் மன உளைச்சல்களும் அதிகரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஏ. பரீட்சையை நன்றாக எழுதாததால் தனக்குத் தோல்வி நிச்சயம் என்பதைச் செல்லப்பா உணருகிறான். தனது வேதனைகளை மறக்க ஊர் சுற்றுகிறான்; சினிமா பார்க்கிறான். இறுதியில், தாராவின்பால் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்படுகிறது. அவளது அரவணைப்பைப் பெற்ற அவன், இவ்வாறு எண்ணுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;'இவளைத் தினம் தினம் பார்க்க வேண்டும். இவள் போடுவது வேஷமாக இருந்தாலும் பாதகமில்லை. நான் எங்கேயாவது பற்றிக் கொண்டாக வேண்டும். இவள் ஒரு இவள்... அதுவே முக்கியமானது; போதுமானது'&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய முடிவுக்கு வரும் செல்லப்பா, இந்த நாவலின் ஜீவநாடியான பாத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. பத்ரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லப்பாவின் தம்பியான பத்ரி, கல்லூரி மாணவன்; பாப் மியூசிக் மற்றும் மேலைய கலாசாரத்திலும் பெண்களுடன் பழகுவதிலும் பற்றுக் கொண்டவன்; சுதந்திரப் பிரியன்; துணிச்சல் உள்ளவன்; பெற்றோருடன் உளமார்ந்த ஒட்டுறவு இல்லாமல், அந்நியமாகி நிற்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;யுனிவர்சிடி ஸ்பெஷல் பஸ்ஸில் தாராவைக் கேலி செய்த மாணவர்களைக் கண்டக்டர் ராம் பிரகாஷ் கண்டிருக்கிறான்; அவனை மாணவர்கள் அடிக்கின்றனர்; அச்சமயத்தில் பத்ரி தலையிட்டு, கண்டக்டரைக் காப்பாற்றுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கும் அவனது சிநேகிதியான தாராவுக்கும் டிஸ்கோதேயில் வாக்குவாதம் ஏற்பட்டு, அவனது ஆணவம் மேலோங்குகிறது; 'போகலாம்' என்று அவன் கோபத்துடன் எழுந்து விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் இயக்கம் ஒரு ஜன்னியைப்போல அவனை ஆட்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் யூனியன் தலைவர் ராம்கிஷோருக்கு எதிரான அணிக்குத் தலைமை தாங்குகிறான், பத்ரி. மாணவர்கள் தொடர்ந்து போராடுவதை ராம்கிஷோர் எதிர்க்கிறான். இதனால் பத்ரி அணியைச் சேர்ந்த குல்வந்த் ஆத்திரமடைகிறான்; அவனது ஆட்களில் ஒருவன் ராம்கிஷோரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிருப்தியுற்ற மாணவர் கும்பல், அடாவடிச் செயல்களில் இறங்குகிறது. பஸ்களைக் கடத்துதல், எரித்தல் முதலியவற்றில் ஈடுபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் சில மாணவர்கள் ஒரு பஸ்ஸை 'ஹைஜாக்' செய்யும்பொழுது, நடைபாதையில் வாழும் ஒரு சக்கிலியன் குடும்பத்தின்மீது பஸ்ஸை ஏற்றிவிடுகின்றனர். சக்கிலியனும் அவன் மனைவியும் அங்கேயே மடிந்து விடுகின்றனர்; அவர்களுடைய குழந்தை மட்டும் சாகவில்லை. பெருந்திரளாகக் கூடிய மக்கள், பத்ரியையும் இதர மாணவர்களையும் பஸ்ஸுக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர்; அந்த மாணவர்களைப் போலீஸார் ஸ்டேஷனுக்கு இட்டுச் செல்லுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பிடியிலிருந்து பத்ரியை விடுவிக்கும் பசுபதி, மகனைக் கண்டிக்கிறார். ஆனால் அவன் சீறுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;'ஜெயிலுக்கு அனுப்பினால் போயிருப்பேன்... எனக்குப் பயமில்லை. உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமென்று நிரூபிக்க இது இன்னொரு சந்தர்ப்பம், அவ்வளவுதான். அந்த 'ஈகோ' வினால்தான் நீ வந்தாயே தவிர, எனக்காகவா வந்தாய்?' என்று பத்ரி எடுத்தெறிந்து பேசுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து, வீட்டுக்கு அழைத்து வருகிறார் பசுபதி.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமுறை இடைவெளியின் சின்னமாகவும், இந்நாவலில் ஒரு முக்கிய இழையாகவும் விளங்கும் பத்ரியைத் திறமையுடன் படைத்திருக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4. பசுபதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிபுடி செக்டரடரியாக இருந்து ஜாயிண்ட் செக்ரடரியாகப் பதவி உயர்வு பெறும் பசுபதி, புதுடெல்லி உயர் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுறுசுறுப்பாக வெவ்வேறு வேடங்களை அணிந்து, வெவ்வேறு மட்டங்களில் சரளமாகப் பழகும் பசுபதி, மத்திய அரசாங்க எந்திரத்தின் போக்குகளை நமக்கு நன்கு உணர்த்தும் பாத்திரமாக விளங்குகிறார். ஆதவனின் படைப்பாற்றலுக்கு இவர் ஒரு சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பா ஒரு சிறந்த நடிகர், தன்னைப் பற்றி பல்வேறு பிம்பங்களை உருவாக்குவதில் வல்லவர்' - இது பசுபதியைப் பற்றி விசுவத்தின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ மேலதிகாரிகளின்கீழ் கிடைத்த பிரமோஷன்கள்பற்றி, ஜாயிண்ட் செக்டரரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ள பசுபதி எண்ணிப் பார்க்கிறார்; அப்போது பாக்கியத்தின் நினைவும் அவருக்கு வருகிறது. 'அவள் - பாக்கியம் இல்லாமல் இது (பிரமோஷன்) சாத்தியமாகியிருக்காது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இது பற்றி அவருக்கு எந்தவிதமான கிலேசங்களும் ஏற்பட்டதில்லை...'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் மூர்க்கமாக எதையும் விலக்க முயன்றதில்லை. யாரையும் தவிர்க்க முயன்றதில்லை. போலியான கட்டுப்பாடுகளில் சிக்கி உழலும் ஒரு 'டிபிகெல் பிராமினாக' இல்லாமலிருக்கவே நான் முயன்று வந்திருக்கிறேன். புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலைகள் இவற்றில் பரவசமடைந்து வந்திருக்கிறேன். என்னை நானே புதிதாகக் கண்டுபிடித்தவாறே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும், புதிய வேஷமொன்றை அணியும் வாய்ப்பு...' என்று எண்ணுகிறார், பசுபதி.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில், 'எனக்கு என்ன ஆகிக் கொண்டிருக்கிறது? நான் எங்கே தவறிழைத்தேன்? புதிய புதிய சூழல்களை - பாவனைகளை - வாழ்க்கை மதிப்புக்களைச் சுவீகரித்தவாறே இருந்தது தவறா?' என்னும் குற்ற உணர்வும் அவருக்கு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு மந்திரியுடன் பாக்கியம் நெருங்கிப் பழகுவது குறித்து அவருக்கு அச்சமுண்டாகிறது: 'இவர் என்னைவிடச் சிறந்த நடிகர்... பாக்கியம்! எனக்குப் பயமாயிருக்கிறது'.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியம் பங்கேற்கும் நாடகத்திற்குத் தலைமை தாங்கவிருக்கும் இந்த மந்திரி ஓர் அயோக்கியன், 'பக்கா ரோக்' என்று அவர் சந்தேகப்படுகிறார். இறுதியில் அவரது பயமும் சந்தேகமும் ஊர்ஜிதம் ஆகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பத்ரியை அழைத்துக் கொண்டு அவர் வீடு திரும்பியதும், கார் விபத்தில் பாக்கியம் இறந்துவிட்டதாக டெலிபோன் மூலம் செய்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிது புதிதாக வேஷமணியும் உயர் அதிகாரி பசுபதியின் பாத்திரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் ஆதவன் சித்திரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5. பாக்கியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிஸஸ் பாக்கியம், ஒரு குடும்பத் தலைவி மட்டுமல்ல; நாடக நடிகையும்கூட. எப்போதும் அழகிய நவநாகரிக பிம்பங்களை அணிய விரும்புகிறவள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா நாடக மேடைக்கு வெளியேயும் ஒரு நடிகைதான். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வேஷங்கள் அணிவதில் இன்பம் கொள்கிறவள். அப்பாவும் அப்படித்தான்' - இது விசுவத்தின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தின் மையப் புள்ளியாக இருக்க விரும்பும் மிஸஸ் பாக்கியத்தைப் பற்றி பத்ரியின் கருத்து என்ன? தாராவிடம் அவன் இவ்வாறு கூறுகிறான்: 'அவள் ஒரு தீவிர சுயநலவாதி. தன்னைப் பற்றிய மிகையான எண்ணமுடையவள். தான் சொல்வது எதுவாயினும் பிறர் அதை மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறவள்'.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு மந்திரியின் தோரணையும், ஆகிருதியும், பேச்சும், பார்வையும் அவளை ஆக்கிரமித்து விடுகின்றன. அவள் பரவசம் அடைகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியம் நடிக்கும் நாடகத்திற்கு மந்திரி தலைமை தாங்குகிறார்; அவரது நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு மகிழ்வூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகையே வெல்லக்கூடிய தீரமும் சாகசமும் படைத்தவராகத் தோன்றிய மந்திரியுடன் ஓர் இரவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள், மிஸஸ் பாக்கியம். திடீரென்று நள்ளிரவில் அவளுக்கு ஞானோதயம் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'இவரை விட்டுச் செல்ல வேண்டும். உடனே செல்ல வேண்டும். எனக்கு என்ன ஆகிவிட்டது?... இவரும் எல்லா ஆண்களையும்போல ஓர் ஆண். எல்லா ஆண்களையும்போல ஆசையும், அகந்தையும், பயமும், சிறுமைகளும், இவற்றை மூடி மறைக்கும் முகமூடிகளும் உள்ளவர். என் உடலையும் என் 'ஈகோ' வையும் வருடத் தெரிந்தவர்' என்று பாக்கியம் எண்ணுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சே, நான் ஒரு முட்டாள்' என்று நினைத்தவாறு அவள் மந்திரியின் வீட்டு வாசலுக்கு வருகிறாள். அங்கிருந்த காரை ஓட்டிக் கொண்டு, சாலையில் படுவேகமாகச் செல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என் கணவரே, என்னை அணைத்துக் கொள்ளுங்கள்; இறுக அணைத்துக் கொள்ளுங்கள்; என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அவள் உள்ளம் ஓலமிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக வேகமாகச் சென்ற கார், தார் டிரம்களில் மோதித் தட்டாமாலை சுற்றுகிறது. எதிரே பிரும்மாண்டமாக அசுர வேகத்தில் வந்த லாரி அதனுடன் மோதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸஸ் பசுபதியின் அலறல், பாதியிலேயே உறைந்து போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியத்தின் துயர முடிவு, நம் உள்ளத்ல் ஓர் அநுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆசிரியர் அவளைச் சாக அடித்திருக்க வேண்டாம் என்றும் தோன்றுகிறது. 'காவிய நியாயம்' (Poetic Justice) கருதி, அவளுக்கு இத்தண்டனையை அவர் வழங்கிவிட்டார் போலும்! ஒருவேளை, இந்த முடிவுதான் பொருத்தமானது என்றும் அவர் கருதியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6. கணேசன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரியின் கிளாஸ்மேட்டான கணேசன் (வயது 19), இந்த நாவலில் ஒரு முக்கிய பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர வர்க்க இளைஞர்களின் பிரதிநிதியாகவும், 'தலைமுறை இடைவெளி' யின் சின்னமாகவும், வெளி நாடுகளில் பெரும் பதவி வகிக்க வேண்டும் என்ற வேட்கைகொண்டவனாகவும், பேச்சுக்களில் தந்திரசாலியாகவும் இவன் விளங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுடைய அப்பா எம்.ஜி.ஓய். ஐயரும், பத்ரியின் அப்பா பசுபதியும் ஒரே மினிஸ்டிரியில்தான் இருக்கிறார்கள். ஆனால் பத்ரியின் அப்பா டிபுடி செக்ரடரியாகிவிட்டார், இவனது அப்பா வெறும் செக்ஷன் ஆபீஸர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அவன் தன்னைவிட உயர்ந்த பதவி வகிக்கவேண்டும் என்று அவன் அப்பா விரும்புகிறார். அதே சமயத்தில் குலதர்மத்தை அவமதிக்கக்கூடாதென்றும் விரும்புகிறார். தோசையும் முழுசாக இருக்க வேண்டும்; அதைத் தின்னவும் கூடாது என்றால் எப்படி முடியும்?... முதலில் அவன் பிதுரார்ஜிதமாகப் பெற்றுள்ள நடையுடை பாவனைகள், மனப்போக்கு ஆகியவற்றை மறந்தாக வேண்டும். சுத்தமான ஸ்லேட்டில்தான் தெளிவான சித்திரம் எழுதமுடியும். பழைய மாளிகையை இடித்துத்தான் புதிய மாளிகையை அமைக்க முடியும்' என்று கணேசன் எண்ணுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரி தலைமையில் மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிடும் ஆவேசப் பேச்சாளனாகவும் கணேசன் விளங்குகிறான். ஆனால் மாணவர்களின் கரவொலிக்கிடையே, முக்கிய கட்டத்தில் கூட்டத்தைவிட்டு நைசாக வெளியேறி, தாராவுடன் சினிமாவுக்குச் சென்றுவிடுகிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;தனது ஆங்கிலக் கட்டுரைகளைத் திருத்தித் தருமாறு தாரா அவனிடம் கூறுகிறாள். அவளுடைய புன்னகை, பேச்சு, அவள் வாங்கிக் கொடுக்கும் ஐஸ் கிரீம், எல்லாமே அவள் தன் நோக்கங்களுக்கு ஏற்றவாறு அவனைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசிய முறைகள்தாமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு இதழில் அவனது கட்டுரையைப் பிரசுரித்த 'டைம்ஸ்' துணையாசிரியர் நரசிம்மனைச் சந்தித்து, நன்றி கூறுகிறான், கணேசன். அவர் என்ன சொன்னாலும் ஒத்துப் போகவும் தயாராயிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இவனுக்கு நான் அமைப்பின் அடையாளம்; என் தோழமை இவனுக்கு ஓர் உந்துதல்; ஓர் ஏணி' என்று எண்ணுகிறார் நரசிம்மன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தட்டு வர்க்கத்திலிருந்து மேல்தட்டு வர்க்கத்திற்குப் பாய்ந்து முன்னேற விரும்பும் கணேசனின் இயல்புகளை மிக அழகாக விளக்கியுள்ளார், ஆதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7. நரசிம்மன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'டைம்ஸ்' பத்திரிகை துணையாசிரியர் நரசிம்மன், பசுபதி குடும்பத்தாரின் நண்பர்; இந்த அறிவு ஜீவி, ஒரு சுவையான பாத்திரம்; நாவலின் முக்கிய இழைகளில் ஒன்றாக விளங்கும் படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தாரா, கணேசன், விசுவம், பத்ரி முதலிய இளந் தலைமுறையினரின் எண்ணங்களையும் செயல்களையும் அநுதாபத்துடன் புரிந்துகொள்ள முயலும் முதிய தலைமுறையின் பிரதிநிதி இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது பத்திரிகையில் காரசாரமான தலையங்கங்களை எழுதும் நரசிம்மனின் இன்றைய நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;'சமூக அநீதிகளுக்கெதிராக வாளை உருவிக் கொண்டு ஆவேசமாகப் பாய்ந்து செல்லும் வீரனாகத் தம்மைக் கற்பனை செய்துகொண்டு அவர் பெருமையில் திளைத்துண்டு... ஆனால் இப்போது அந்த மயக்கம் சிதைந்துவிட்டது. தானும் சரி, எடிட்டர் போன்றவர்களும் சரி, ஒரே நாடகத்தில் வெவ்வேறு பாத்திரங்களேற்று நடிக்கும் நடிகர்களென்றுதான் அவருக்குத் தோன்றியது. அவருடைய கோபமும் ஒரு விற்பனைப் பொருளாகிவிட்டது; வாசகர்களைக் கவருவதற்காக ஆடும் ஒரு போலியான "சாமியாட்டம்" ஆகிவிட்டது.'&lt;br /&gt;&lt;br /&gt;கிளப்பில் விவாதம் நடக்கிறது. இருபது வருடங்களுக்கு மேலாக அஞ்ஞாதவாசம் புரிந்துவிட்டு, இப்போது மாணவர்க்ளைப் பக்கபலமாகக் கொண்டு அரசியலைச் சுத்தப்படுத்தும் இயக்கம் தொடங்கியிருந்த அந்தச் சர்வோதயத் தலைவர்தான் 'நம்மைக் காப்பாற்றப் போகிறார்' என்று நரசிம்மன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன் மனம் இன்னும் அற்புதங்கள் புரியும் கதாநாயகர்களை நம்புகிற மட்டத்திற்குமேல் வளர்ச்சியடையவில்லைஒ என்று ஒருவர் அவரை நையாண்டி செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஆத்திரமுற்ற நரசிம்மன், முஷ்டியை ஓங்கி அவர் முகத்தில் குத்துகிறார்; அவரும் பதிலுக்கு நரசிம்மனைக் குத்துகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகை ஆசிரியர் நரசிம்மன், நம் நினைவைவிட்டு நீங்காத ஒரு பாத்திரம். அவரது இயல்புகளை மிகத் தெளிவாக ஆதவன் படம் பிடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மினி, தாரா போன்ற நவநாகரிக நங்கையரின் குண இயல்புகளை விரித்துரைக்க இங்கு இடமில்லை. அவர்களும் தமது அகங்காரத்தின் வழியே செல்பவர்கள்தாம் என்பதை ஆதவன் எடுத்துக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், இந்த நாவலின் பிரதான பாத்திரங்களும், பஸ் கண்டக்டர் ராம்பிரகாஷ் போன்ற உப பாத்திரங்களும், மிகக் கவனமாகவும் யதார்த்தமாகவும் படைக்கப் பெற்றுள்ளன; அவர்களது பலங்களையும் பலவீனங்களையும் நாம் உணர்ந்து கொள்ளுமாறு மிக நுட்பமாக உருவாக்கப் பெற்றுள்ளனர். பாத்திரச் சித்திரிப்பு விஷயத்தில் ஆசிரியரின் விழிப்புணர்ச்சி பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உரைநடை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலின் வெற்றிக்கு ஆதவனின் உரைநடையும் ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;'எகாலஜி' யை (இயற்கை-சூழ்நிலை இயலை) ஓர் அடிச்சரடாகக் கொண்டுள்ள இந்நாவலில், புது டெல்லியின் குளிர் காலம், வசந்த காலம், வெய்யில் காலம், புழுதிக் காற்றுக் காலம், மழைக் காலம் ஆகிய பருவங்களின் சூழ்நிலையில், இயற்கை, மரம் செடி கொடிகள், மனிதர்கள் ஆகியோரின் நிலைகளை ஆதவனின் உரைநடை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;சில உதாரணங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'வெய்யிலின் வீச்சும் ஒளியும் மங்கி, அதன் கடைசிச் சுவடுகள் மட்டும் ஆகாயத்தின் ஓரங்களில், வெளியே எடுத்துக் கொட்டுவதற்கு வசதியாக அறை மூலையில் பெருக்கி ஒதுக்கப்பட்ட குப்பையைப் போலக் காட்சியளித்தது'.&lt;br /&gt;&lt;br /&gt;'குளிர் காற்று அவன் திறந்த மார்பைத் தாக்கியது. ஊறுகாயின் காரத்தைப்போல அந்தக் குளிரின் உறைப்பு அவனுக்கு ஓர் இதமான துன்பத்தைக் கொடுத்தது'.&lt;br /&gt;&lt;br /&gt;'பலமுறை ரிப்பேர் செய்யப்பட்டுவிட்ட அந்த ஷூவின் அடிப்பாகம், பல்வேறு சக்கிலியர்களின் கைத்திறன் காரணமாய் இன்னமும் வாளிப்பாக இருந்தபோதிலும், கூன் விழுந்த முதுகைப் போல சற்றே வளைந்திருந்தது. ஷூவின் மேல் பாகமோ, பலமுறை பிரசவித்த ஒரு பெண்மணியின் இடையைப்போல கொளகொளவென்று தன் ஆரம்பகால வளைவுகளின் நேர்த்தியை முழுதும் இழந்துவிட்டிருந்தது'.&lt;br /&gt;&lt;br /&gt;'வசந்தம். டபிள் டெக்கர் பஸ், மரங்களின் வேட்கையைத் தீர்ப்பதுபோல் கிளைகள்மீது முரட்டுத்தனமாக மோதி உரசிச் செல்கிறது. புதிய வானம், புதிய வெய்யில், பளிச்சென்ற வெய்யில், மரங்களைப்போல மனிதர்களையும் புதிய மெல்லிய - உடைகள் அணிய வைத்து ஒருவரையெருவர் புதுமையாக உணர வைக்கும் வெய்யில். மரங்கள் களைந்து எறிந்த கம்பளி உடைகளைப் போல சாலையின்மேல், நடை பாதைகளின்மேல், புல்வெளிகளின்மேல், பழுப்புத் திட்டுகளாய் உதிர்ந்து கிடக்கும் - காற்றில் தத்தித் தத்திச் செல்லும் - உதிர்ந்த இலைகள்; உலர்ந்த இலைகள்...'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஷாப்பிங் முடிந்து அவர்கள் சாமான் பைகளுடன் காரில் வந்து ஏறிக்கொள்ளும் சமயத்தில்தான் திடீரென்று வீசத் தொடங்கியது புழுதிக் காற்று. எவ்வளவு உக்கிரமாக, ஆணின் பலத்தையும் வெறியையும் நினைவூட்டும் ஒரு ஹூங்கார ஓசையுடன் அடித்தது அந்தக் காற்று!'&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவனின் உரைநடையில் கவித்துவம் மட்டுமின்றி, சமகாலப் பேச்சு வழக்கும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்றைய உலகை இன்றைய நடையில் சித்திரிக்கிறது, காகித மலர்கள்' என்ற இமயப் பதிப்பகத்தாரின் கூற்று, முற்றிலும் சரியானதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கட்டுக்கோப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது' என்று இந்நூலின் கட்டுக்கோப்பு பற்றி ஆதவன் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமையான, சற்று சிக்கலான கட்டுக்கோப்புள்ள ஒரு நாவல் இது என்பதில் ஐயமில்லை. உதாரணம்: 13, 27, 28, 29, 30வது அத்தியாயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலை இரண்டுமுறை நிதானமாகப் படித்தால், இதன் கட்டுக்கோப்பிலுள்ள புதுமையை வாசகர்கள் நன்கு உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;'காகித மலர்' களின் உத்திபற்றி, 'தமிழ் நாவல் 50 பார்வை' என்ற நூலில் அசோகமித்திரன் இவ்வாறு கூறுகிறார்: 'ஓவியம் (ஓர் உதாரணமாக, புதுடில்லி மாரிக்காலத் துவக்கத்தை வர்ணிக்கும் முதல் அத்தியாயம்), நாடகம், திரைப்படம் ஆகிய மூன்று கலைச் சாதனங்களும் எளிதில் வர்ணிக்க முடியாத ஓர் அதிசயக் கலவையில், அபூர்வமான இலக்கியப் படைப்பாக "காகித மலர்கள்" உருப்பெற்றிருக்கிறது.'&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்த ரசனையுடனும், ஆய்வு உள்ளத்துடனும் இந்த நாவலைப் படிப்பவர்கள், அசோகமித்திரனின் கருத்து மெய்யானது என்பதை உணருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமை, சோதனை, தனித்தன்மை ஆகிய மூன்று முக்கிய அம்சங்களும் இந்நாவலில் விரவிக்கிடப்பதை கலா ரசிகர்கள் கண்டுகொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒருவிதத்தில் இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால், அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால், இந்த நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது' என்று ஆதவன் கூறுகிறார் (எனது 'காகித மலர்கள்' என்ற கட்டுரை).&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்; அவர் கூறுவதுபோல இந்த நாவலில் 'தனித்த ஒரு தொனியும் லயமும்' இருக்கின்றன என்பதை நாம் உணருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆதவனின் தத்துவ நோக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சுய பார்வையும் சுய இயக்கமும் மழுங்கடிக்கப்பட்டு, நாம் உருவாக்கிய ஓர் அமைப்பில் நாமே கைதிகளாகப் போயிருக்கிறோம் இன்று: வெவ்வேறு வேடங்களின் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது.'&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால் விடை என்ன?" என்று ஒருவர் கேட்டார். கணேசன் ஓரிடத்தில் சொல்வதுபோல, "அமைப்பை இடித்துத் தரைமட்டமாக்குவதா?"... இல்லை... நிகழ வேண்டுவது, உண்மையில் மனமாற்றம்தான்: நாம் ஒவ்வொருவரும் ஒரு மொத்த அமைப்பின் பங்குதாரர் என்ற உணர்வின் அடிப்படையில், நம் "தானை" அடிக்கடி பரிசீலித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளத் தயாராதல்' என்று மேற்கண்ட கட்டுரையில் ஆதவன் வலியுறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சீய - லெனினியப் பார்வை உடையவர்கள், ஆதவனின் இத்தகைய தத்துவ நோக்கை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பே நமது பொருளாயத, ஆன்மீகச் சீரழிவுகளுக்கெல்லாம் காரணம் எனக் கருதுவோர், 'உண்மையில் நிகழ வேண்டுவது ஒரு மனமாற்றம்தான்' என்ற ஆதவனின் கருத்தை ஏற்க மாட்டார்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு தகர்க்கப்பெற்று, சகல மக்களின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சோஷலிச அரசு ஏற்படாத வரையில், 'நம் "தானை" அடிக்கடி பரிசீலித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல்' என்பது வெறும் நல்லெண்ணமாகவே நின்று விடும்; எனவே, மனமாற்றத்தை விரும்பும் ஆதவனின் அறநெறி உணர்வை நாம் வரவேற்றபோதிலும், அவரது தத்துவத்தின் வழியில் அது காரிய சாத்தியமற்றது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நூலின் செய்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இன்றைய அமைப்பின் தன்மைகள், திசைகள் பற்றிய ஓர் அதிருப்தியை' முக்கிய சரடாக இந்நூல் கொண்டுள்ளது என்று ஆதவன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அதிருப்தியை வாசகர்கள் மனத்தில் ஏற்படுத்துவதுதான் நூலின் நோக்கம் என்று எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களிடையேயான உறவுகளில் நேர்மையும் தூய்மையும் மிளிர வேண்டும்; அப்படியானால் வாழ்க்கையில் நேசமும் இனிமையும் நிறைந்திருக்கும். ஆனால், இன்றைய சமுதாய அமைப்பிலுள்ள சிலர், தமது சுயநல வேடங்களாலும், சுயநல வேடங்களாலும், சுய ஏமாற்றுக்களாலும், அகங்காரத்தாலும், மனித உறவுகளை அழுக்காக்கி விடுகிறார்கள்; எனவே மணமுள்ள மலர்களாகத் திகழவேண்டிய மக்கள், காகித மலர்களாகக் காட்சியளிக்கிறார்கள் என்ற செய்தி, இந்நூலில் தொனிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'யதார்த்தம் உறைக்க வேண்டும். அந்த உறைப்பு, சில ஆக்கபூர்வமான சலனங்களை உருவாக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்' என்று தமது பிரகடனத்தில் கூறுகிறார், ஆதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலில் அவரது விருப்பம் பெருமளவு நிறைவேறியிருக்கிறது என்றே கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சன யதார்த்தவாதம் (Critical Realism) என்ற படைப்பாக்க முறையில் எழுதப்பெற்றுள்ள இந்நாவல், கலையழகுடன் கூடிய ஒரு சிறந்த உள இயல் - சமுதாய இயல் சித்திரமாக விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு விதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே - இந்த நாவல் உள்பட - நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் கூறவேண்டும்; உங்கள் எதிரொலிகளே இந்தச் சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும்' என்று தமது பிரகடனத்தில் ஆதவன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நேர்மையான, நுட்பமான கலைப் படைப்பாகத் திகழும் இந்நாவலை நாம் மனமாரப் பாராட்டுவோம். 1970ம் ஆண்டுகளில் வந்த தமிழ் நாவல்களில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காகித மலர்கள் - ஆதவன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி.க.சி. அவர்களும் பிறரும் என்னுடைய காகித மலர்கள் நாவலில் இந்த அளவு சிரத்தை காண்பித்து, அது பற்றிய தம் கருத்துக்களை எடுத்துக் கூறியதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலை எழுதுமாறு எனக்கு ஊக்கமளித்து, சுமார் மூன்று வருட காலம் தம் பத்திரிகையில் தொடராக வெளியிட்ட திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுவது என் கடமையாகும். எழுத்தாளன் தன் எழுத்தின் பிரயோசனம் தொடர்பான பல அதிருப்திகளையும் அவநம்பிக்கைகளையும் சோர்வுகளையும் எப்போதும் சுமந்து திரிபவன். ஒவ்வொரு தடவை எழுத உட்காரும்போதும் இத்தகைய உணர்வுகளுடன் போராட வேண்டியிருப்பவன், பல சமயங்களில் இவற்றுக்கு முழுவதுமாக இரையாகித் துவண்டு சாய்ந்து விடக்கூடியவன். திரு. நா.பா. என் எழுத்து வாழ்வின் ஒரு முக்கியமான கட்டத்தில் எனக்கு ஆதரவுக் கரம் நீட்டி அணைத்துக் கொண்டவர். அவருடைய பக்கÀலம் இல்லாமல் இத்தகைய ஒரு நாவலை, இத்தகைய ஒரு பரந்த கான்வஸில், என்னால் எழுதி முடித்திருக்க முடியுமென்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே - இந்த நாவல் உட்பட - நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது. அதாவது, நேரடிச் சந்திப்புகளின்போது என் வார்த்தைகள், அவற்றின் அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டு, என் பெளதிக ஆகிருதி, முகத்தின் தன்மை ஆகியவைகூட எதிராளியிடம் சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. முதல் பார்வையில் ஒருவரிடம் இனிய சகோதர பாவத்தைக் கிளறுகிற என் மூஞ்சி, இன்னொருவரிடம் முதல் பார்வையில் பகைமை உணர்வுகளையும் வெறுப்பையும் தூண்டுவது ஏன் என்பது என்னை எப்போதும் அலைக்கழிக்கிற ஒரு பிரச்சினை. இந்த 'பரஸ்பர பிம்பங்களின்' tension இலிருந்து விடுபட்டு என்னையும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் பற்றிய நிதானமான, ஆழமான சம்பாஷணையில் ஈடுபடும் ஒரு சாதனமாகவே எழுத்தை நான் பயன்படுத்துகிறேனென்று நினைக்கிறேன். எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில், என் நாவலைப்பற்றிக் கூறப்பட்ட பல வகைக் கருத்துக்களும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. என் எழுத்தை - அதன் தன்மையையும் நோக்கங்களையும் - நான் மென்மேலும் பரிசீலித்துப் பார்த்துக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் இவை உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;'முழுமையின் தேடல்' என்று சொன்னேன். இந்தத் தேடலைப் பல சமயங்களில் ஓர் எல்லைக்கு மேலேயே நான் இட்டுச் செல்கிறேனோ என்கிற சந்தேகமும் எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. 'உங்கள் கதைகளில் ஒரு பிரச்சினையின் "இரு பக்கங்களையும்" காண்கிறேன்' என ஒரு நண்பர் மகிழ்ச்சியுடன் கூறியதும், இந்த 'இரு பக்க' ஆய்வு முயற்சியினால் என் படைப்புகளின் செறிவும் கலாரூபமும் பழுதுபட்டு விடுவதாக மற்றொருவர் கவலையுடன் சுட்டிக் காட்டியதும் இச்சந்தர்ப்பத்தில் எனக்கு நினைவு வருகின்றன. ஆனால் நல்லதோ கெட்டதோ, இதுதான் என் இயல்பு. ஒரு பக்கம் இந்த இயல்புக்கும்; மறுபக்கம் இலக்கியத்தின் பரிணாமரீதியான வடிவக் கோட்பாடுகள் மற்றும் 'மீறல்' களின் சாத்தியக்கூறுகளுக்குமிடையே, ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயன்று போராடியவாறிருப்பதுதான் என் தலை விதி.&lt;br /&gt;&lt;br /&gt;முழுமை பற்றிய ஒரு கவலை மற்றும் ஜாக்கிரதையுணர்வு காரணமாகவே, என் படைப்புப் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு அபிப்பிராயமும் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கிறது, அவசரமாகக் 'கோடிட்ட இடங்களைப்' பூர்த்தி செய்யத் தூண்டுகிறது - எல்லாருமே எல்லாவற்றையும் கண்டு சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல. ஆனால் இது அவசியமில்லாதது மட்டுமல்ல, 'காகித மலர்கள்' போன்ற ஒரு நாவலின் விஷயத்தில் இது சாத்தியமுமல்ல என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நான் உணருகிறேன். பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது. எல்லா இழைகளுமே எல்லாருக்கும் பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் இவை எல்லாமே ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆழ்ந்த சலனங்களை எழுப்புவதாக இல்லை... இன்றைய அமைப்பின் தன்மைகள், திசைகள் பற்றிய ஓர் அதிருப்தியை முக்கியச் சரடாகக் கொண்டிருக்கும் இந்நாவலில் ஆங்காங்கே இடதுநிலைச் சார்பு மிகவும் பளிச்சென்று, தவிர்க்க முடியாமல், தலைதூக்குகிறது. மார்க்ஸியச் சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்கள் இச்சார்பை இனம் கண்டுகொண்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அதே சமயத்தில் அவர்களுடைய பாராட்டை என் தலையில் ஏதோ ஒரு பட்டயத்தை அவசரமாகக் கட்டி, ஏதோ ஒரு கொள்கைச் சிறையில் தள்ளும் முயற்சியாகவும் நினைத்து, நான் பீதியும் பதட்டமும் கொள்ளத் தொடங்குகிறேன் - என்னுடைய நாவலின் இடதுநிலைச் சார்பேயில்லை என்று சில சமயங்களில் ஆவேசமாக மறுக்குமளவுக்கு தம் சுயேச்சைத் தன்மை பங்கப்படாமலிருக்கவேண்டும் என்ற கவலையுள்ள எல்லாக் கலைஞர்களுக்குமே இத்தகைய பதட்டங்கள் இயல்புதான் என்று நினைக்கிறேன். பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு நானே இருப்பதாக நினைக்கிற - அல்லது பாவிக்கிற - பலவகைப் பரிமாணங்களை மார்க்ஸிஸ்டுகளுக்கு மட்டும் நான் ஏன் மறுக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது இதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்கப் போனால், இலக்கிய ரீதியாகச் சில நுட்பமான (ஆனால் செறிவான) பற்றுக்கோடுகள், ஆழ்ந்த தேட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள நான், இத்தகைய பற்றுக் கோடுகளும் தேட்டங்களும் இலக்கியப் படைப்பாளியல்லாதோரிடமும் வித்தியாசமான தோற்றங்களில் இடம் பெற்றிருப்பதையும், வேறு வகைகளில் தன்னைப் பிரகடனம் செய்து கொள்ளத் துடிப்பதையும், உணரவும் அங்கீகரிக்கவும் தவறினால் அது என் கலையின் - இந்தக் கலையைப் போஷிக்கும் சக்திகளாக நான் நம்ப விரும்புகிற என்னுடைய பரிவின், எந்த ஒரு திட்டம் அல்லது விளக்கத்துக்கும் தப்பி நிற்கும் வாழ்க்கையின் பிரும்மாண்டம் அல்லது மர்மம் பற்றிய பிரக்ஞையின் - குருட்டுத்தனமான மறுதலிப்பாகவே அமையும் அல்லவா? என்னுடைய படைப்புடன் பிறர் தத்தம் நோக்கில் நேர்மையுடன் ஓர் உறவை ஸ்தாபிக்க முயலுதல் எவ்வாறு என் ஆட்சேபத்துக்குரியதாக முடியும்? மாறாக, பலதரப்பட்டவர்களைத் தன்னுடன் பலவகை மட்டங்களில் உறவுகொள்ளத் தூண்டுதலிலேயே என் படைப்பினுடைய பரந்துபட்ட தன்மையின், அதிகமான பரிமாணங்களின், வீச்சின், நிரூபணம் அடங்கியிருக்கிறதென்பதை நிதானமான தருணங்களில் நான் உணருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல, செல்லப்பா என்கிற பாத்திரம் பல இளைஞர்களை மிகவும வசீகரித்திருக்கிறது. பிற பாத்திரங்களுடன் விடவும் இந்தப் பாத்திரத்துடன் தாம் நெருக்கமான உணருவதாக அவர்கள் கூறியபோது, ஒரு தலைமுறை பற்றிய முழுமையான சித்திரம் எனக்குக் கிடைத்ததாக நான் உணர்ந்தேன். ஆனால் செல்லப்பாவை Withdrawal என்கிற 'ஒதுங்குதல் தன்மை' யின் குறியீடாகச் செய்து இவ்வியல்புக்கு 'வீர வணக்கம்' செய்வதும் என் நோக்கமாயிருக்கவில்லை. அதே சமயத்தில் இந்த 'ஒதுங்குதல்' பாலும், இத்தகைய இதர சில பொதுவான மனப்பாங்குகள், 'தான்' கள் அல்லது 'வேடங்கள்' பாலும் ஆசிரியரின் ஆழ்ந்த பரிவையும் ஈடுபாட்டையும் இந்நாவலைப் படிப்பவர்கள் உணர்வார்களென்று நம்புகிறேன். ஒரு self-righteosnessஐயும் pompousnessஐயும் இந்நாவலில் நான் அறவே தவிர்த்திருக்கிறேன். மனிதர்களின் 'வேடங்களைக் கலைத்தெறிகிறார்', 'ஹிப்பாக்ரஸியைச் சாடுகிறார்' போன்ற பிரயோகங்கள் இந்நாவல் குறித்த எழாமலிருக்க வேண்டுமென்பது என் பணிவான வேண்டகோள். நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் - அதிக பட்சமாக - கொள்ளவேண்டும். இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் - வாழ்வின் பிரும்மாண்டத்தையும் 'வெல்ல முடியாத தன்மை' யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் - இது எழுதப்பட்டிருக்கிறது. விசுவமும் செல்லப்பாவும் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் அர்த்தமற்ற சில நியதிகள், சில அநீதிகள் ஆகியவற்றினால் கஷ்டங்களுக்கு உள்ளாவதாகச் சித்திரித்துள்ள அதே சமயத்தில், அவர்கள் தாமும் பல பலவீனங்கள், குறைகள் உள்ளவர்களென உணர்த்தவும் நான் தவறவில்லை. தட்டையான இலட்சிய வார்ப்படங்களில் அவர்கள் உருவாகியிருந்தால் யதார்த்தம் தேவையான செறிவுடனும் பரிமாணங்களுடனும் உருவாகாமல் போயிருக்கும்; 'உறைக்காமல்' போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்தம் உறைக்க வேண்டும், அந்த உறைப்பு சில ஆக்கபூர்வமான சலனங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவிதத்தில், இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால் அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால் இந்நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது. இந்நாவலை நான் தீபத்தில் எழுதத் தொடங்கும்போது எனக்குச் சரியாக முப்பது வயது: இளைஞர்கள், முதியவர்கள், இரு சாராரையும் - ஒருங்கே - நுண்மையாகக் காணவும் உணரவும் ஏற்ற Vantage point. இன்று இதுபோன்ற ஒரு நாவலை என்னால் எழுதமுடியாது: குறிப்பாக, செல்லப்பா, பத்ரி, கணேசன், தாரா ஆகியோர் வரும் பகுதிகளை நிச்சயம் எழுதமுடியாது. எனவே, இந்நாவலைப்பற்றி இப்போது நான் சொல்லக்கூடிய எந்த விளக்கத்தையும் மீறி அது ஒரு தனித்த ஆளுமையும் ஜீவனும் உள்ளதாயிருக்கக் கூடும்: இது ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;'எகாலஜி' பற்றி அறுபதுகளில் மிகவும் பேசப்பட்டது. இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலையும் பிற உயிரினங்களையும் சார்ந்ததாக அமைந்துள்ள 'சங்கிலி இயக்கத்தின்' அம்சங்களைப் பரந்த நோக்கில் ஆராயும் புதிய விஞ்ஞானப் பிரிவே 'எகாலஜி'. மனிதனும் இச்சங்கிலியில் ஒரு பகுதிதான். வானமும் கடலும்கூட அதேபோல இதன் பகுதிகளே. சங்கிலியின் ஒரு கண்ணி இற்றுப் போனாலும் அதனால் சங்கிலியே முழுவதுமாகப் பாழ்பட்டுப் போகும், பயனற்றுப் போகும் என்பதே 'எகாலஜிஸ்டுகள்' இன்றைய மனிதனுக்கு - நாளைய சந்ததியரின்பால் தம் பொறுப்பை உணராமல் இச்சங்கிலியின் கண்ணிகளை நாசப்படுத்தி வரும் மனிதனுக்கு - கூறும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;'காகித மலர்களி' ல் வரும் பசுபதி ஐயரும், அவருடைய தலைமுறையைச் சேர்ந்த பிறரும், இந்தப் 'பொறுப்பற்ற தன்மை' யின் - தம் செயல்கள், முடிவுகள் ஆகியவை அடுத்த தலைமுறையினரை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய கவலை சிறிதும் இல்லாத போக்கின் - குறியீடுகள். மனிதனின், வாழ்க்கையின், வெளிப்பாடுகளை ஆராய்வதில் இன்பங்காண்கிற ஓர் எழுத்தாளனாக (அல்லது ஓர் அமெச்சூர் சமூகவியலாளனாக என்று வைத்துக் கொள்ளுங்கள்) நம் சமுதாய அமைப்புடன் 'எகாலஜி' என்ற கருத்தை இணைத்துப் பார்க்க நான் முயன்றிருக்கிறேன் இந்நா வலில் என்று இப்போது தோன்றுகிறது. அறுபதுகளில் 'எகாலஜி' பற்றி நான் விரிவாகப் படித்ததும், மாணவர் அதிருப்தியும் வன்முறை நடவடி க்கைகளும் என்னுள்ளே எழுப்பிய சிந்தனை அலைகளும், இந்நாவலில் என்னுடைய ஒரு பாணியில் கலாரூபம் பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வெவ்வேறு பாத்திரங்களின் தனித்த மனப் போராட்டங்களாக, பிம்பத் தேடல்களாக, அமைந்துள்ள காகித மலர்களின் அத்தியாயங்கள், இன்றைய சமூகம் வெவ்வேறு 'தான்' களாகப் பிளவுபட்டுக் கிடப்பதைச் சித்திரிக்கும் விதமாக அமைந்துள்ளன. மனிதனுள்ளே எப்போதுமிருக்கிற மிருகம் மீண்டும் மீண்டும் நாவலின் பக்கங்களில் 'வன்முறை' வடிவத்திலோ வேறு வடிவங்களிலோ தலைதூக்குகிறது. அதே சமயத்தில் சில 'தான்' களின் சிதறலாகவும் இது அமைகிறது. விசுவத்தின் தலையில் தடியடி படும்போது, வாழ்க்கையின் ஒரு மறுபுறத்தை, மற்றொரு பரிமாணத்தை, அவன் உணருகிறான். அதேபோல செல்லப்பா தான் யதார்த்தத்திலிருந்து ஒளிந்து வாழ நிர்மாணித்துள்ள ஓர் அழகிய கற்பனை உலகம், கண்டக்டரின் முரடுத்தனம், சினிமா தியேட்டரில் அவன் தொடையை வருட முயலுபவர் ஆகியவர்களால் கீறல்களையும் வடுக்களையும் சம்பாதித்த வண்ணமிருக்கிறது. இது வாழ்க்கையின் ஒரு inevitable process. ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம். செல்லப்பாவின் அம்மாவின் மரணமும் இத்தகையதுதான். அவள் தன் மருமகளை புதிய தலைமுறைப் பெண்மை பற்றிய தன்னுடைய ஒரு கொச்சையான பிம்பத்தில் பொருத்தி, அவள் ஒரு amoral person ஆகத் தானே உருவகித்துக் கொண்டு, அந்த amoralityயு டன் போட்டிபோட முயலுகிறாள். ஆனால் ஒரு முக்கியக் கட்டத்தில்தான் கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்கநெறிகளுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்பதை உணருகிறாள். இது அவளைச் சிதற அடித்து விடுகிறது. தவறான பரஸ்பர பிம்பங்களும், இவற்றின் மோதல்களும்தான் வாழ்க்கையின் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுய பார்வையும் சுய இயக்கமும் மழுங்கடிக்கப்பட்டு, நாம் உருவாக்கிய ஓர் அமைப்பில் நாமே கைதிகளாகப் போயிருக்கிறோம் இன்று: வெவ்வேறு 'வேடங்களி'ன் கைதிகள். அரசியல் தலைவர்கள், ஒரு mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். ஸெக்ரடரியட்டிலும் பிற இடங்களிலும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், 'நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?' என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில 'தியரி' களை உச்சாடனம் செய்துகொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள் (விசுவத்தின் 'எகாலஜி' ஈடுபாடுகூட, ஒரு கோணத்தில், அதிநாகரிகமான ஒரு பிம்பத்தை அணியும் முயற்சிதான்). பெண்கள், ஆணின் 'அடிமை', 'மகிழ்வூட்டும் கருவி' - அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் 'புரட்சி' செய்கிறவள் - என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், 'வேடங்கள்' அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு gerontocratic அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityன், ஒரு alienationன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியானால் விடை என்ன?' என்று ஒருவர் கேட்டார். கணேசன் ஓரிடத்தில் சொல்வதுபோல, 'அமைப்பை இடித்துத் தரைமட்டமாக்'குவதா? இல்லை; ஓர் அமைப்புப் போனால் அதன் இடத்தில் இன்னொரு அமைப்பு, அதன் உச்சியில் இன்னொரு oligarchy வரும். கணேசன் அவ்வாறு நினைப்பதில் அவனுடைய 'தான்' - தனக்கு அதிகச் சலுகைகளும் வாய்ப்புகளும் கிடைக்க ஓர் அமைப்பை யாசிக்கும் 'தான்' - வெளிப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிகழவேண்டுவது உண்மையில் மன மாற்றந்தான்: நாம் ஒவ்வொருவரும் ஒரு மொத்த அமைப்பின் பங்குதாரர் என்ற உணர்வின் அடிப்படையில், நம் 'தானை' அடிக்கடி பரிசீலித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளத் தயாராதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் நியதிகளை உணருதலையும், அவற்றைப் பேணுதலையுமே இந்நாவல் ஒரு முக்கிய அடிச்சரடாகக் கொண்டிருப்பதால், இயற்கை வர்ணனைகளை - அவை இலக்கியப் பரிணாம நோக்கில் சற்றே பழைமையானவையென உணர்ந்தும் - நாவலில் ஆங்காங்கே அமைத்திருக்கிறேன். இதை என்னுடைய 'இலக்கிய வெகுளித்தனமாக'ச் சிலர் நினைப்பதை நான் அறியாமலில்லை. இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய 'தான்' அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா? இந்த 'தான்' இங்கே வேண்டுமென்றே கைவிடப்பட்டிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கைவிடப்படலே நாவலின் கருப்பொருளுக்கு ஒரு சங்கேதமாக அமைவதையும் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. பாக்கியமுத்து, இந்நாவலில் தம்மை மிகவும் கவர்ந்தது அதன் நேர்மை அல்லது 'உண்மைத் தொனி' என்றார். இதுதான் முக்கியம், இறுதியாக என்று எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய சார்பு பற்றிய ஒரு பிரகடனத்தை என்னிடமிருந்து வேண்டுகிறவர்கள், இதையே அப்பிரகடனமாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;font&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112714339201118420?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112714339201118420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112714339201118420' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112714339201118420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112714339201118420'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post.html' title='ஆதவன் - பாகம் ஒன்று'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112416413210705721</id><published>2005-08-16T09:15:00.000+05:30</published><updated>2005-08-16T09:21:06.276+05:30</updated><title type='text'>சுமதி ராமசுவாமி, லெமூரியா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.hindu.com/br/2005/08/16/images/2005081600681501.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px;" src="http://www.hindu.com/br/2005/08/16/images/2005081600681501.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தென்புலம் என்றும் நம் முன்னோர்களின் ஆவி இருக்கும் இடம் என்றும் வதந்திக்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாகும் லெமூரியா கண்டம் பற்றி, வரலாறு ஆசிரியர் &lt;a href="http://www.culturebase.net/artist.php?1363"&gt;சுமதி ராமசுவாமி&lt;/a&gt; எழுதியுள்ள  &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0520240324/102-7749737-5388135?v=glance"&gt;The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories&lt;/a&gt; என்ற ஆங்கில நூலைப் பற்றிய &lt;a href="http://www.hindu.com/br/2005/08/16/stories/2005081600681500.htm"&gt;விமர்சனம் இன்று ஹிந்துவில்&lt;/a&gt; வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;(இதைப் போலவே தமிழில் லெமூரியாவினைப் பற்றி ஜெயகரன் என்பவரும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று எண்ணுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி ராமசுவாமி எழுதிய மற்றொரு புத்தகமான,  &lt;a href="http://www.ucpress.edu/books/pages/6972.html"&gt;Passions of the tongue&lt;/a&gt; என்ற புத்தகத்தினை &lt;a href="http://content.cdlib.org:8088/xtf/view?docId=ft5199n9v7&amp;amp;brand=ucpress"&gt;இலவசமாக இங்கே&lt;/a&gt; படிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112416413210705721?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112416413210705721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112416413210705721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112416413210705721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112416413210705721'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/08/blog-post.html' title='சுமதி ராமசுவாமி, லெமூரியா'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112226479468574618</id><published>2005-07-25T09:38:00.000+05:30</published><updated>2005-07-29T13:00:26.670+05:30</updated><title type='text'>அமதியுஸ்</title><content type='html'>&lt;a href="http://en.wikipedia.org/wiki/Mozart"&gt;வொல்·ப்கேங் அமதியுஸ் மோட்ஸார்ட்&lt;/a&gt; என்ற இசைமாமேதை பற்றி &lt;a href="http://www.imdb.com/name/nm0001232/"&gt;மிலோஸ் ·போர்மேன்&lt;/a&gt; இயக்கி 1984இல் வெளிவந்த திரைப்படம். இது &lt;a href="http://www.imagi-nation.com/moonstruck/clsc69.html"&gt;பீட்டர் ஷா·பர்&lt;/a&gt; எழுதிய நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டது. இன்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் இந்த நாடகம் மேடையேறிய படிதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos14.flickr.com/16395870_2557fc2e0e_b.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px;" src="http://photos14.flickr.com/16395870_2557fc2e0e_b.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(இரண்டு மாதம் முன்பு, பாரீஸில் உள்ள ஒரு சப்வேயில் இருந்த &lt;a href="http://www.imdb.com/title/tt0086879/combined"&gt;அமதியுஸ் &lt;/a&gt;போஸ்டரை, என் கேமராவில் பிடித்தேன்)&lt;br /&gt;&lt;br /&gt;மோட்ஸார்ட் அனைத்து கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் ஒரு ·பேண்டஸி, ஒரு ஆதர்சம் என்று தோன்றுகிறது. பல படைப்புகள், நாவல்கள், இசை அர்ப்பணிப்புகள், மோட்ஸார்டினை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த &lt;a href="http://www.imdb.com/title/tt0086879/combined"&gt;அமதியுஸ்&lt;/a&gt; படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இசைக்கலைஞர்களுக்கான ஒரு உறைவிடம் என்று வியன்னாவை அனைவரும் புகழ்வார்கள். 1775இல் வியன்னாவின் அரசவை இசைக்கலைஞராக இருந்தவர் &lt;a href="http://w3.rz-berlin.mpg.de/cmp/salieri.html"&gt;அன்டோனியோ சாலியாரி&lt;/a&gt;. இவரும் அக்காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞர். இவர் தான் மோட்ஸார்டின் மீது பொறாமைக் கொண்டு, மோட்ஸார்ட்டுக்கு விஷம் கொடுத்து கொன்றவர், என்று வதந்திக்கப்படுபவர். தன் இறுதிநாட்களில் மனநிலைப் பிறழ்ந்து, நான் தான் மோட்ஸார்டைக் கொன்றேன் என்று கூறியவர். இந்த சாலியாரியின் பார்வையில், சாலியாரி என்ற இசையறிவு கொண்டவர் பார்வையில் மோட்ஸார்டின் வாழ்க்கை, அவருடைய சிறப்பு நம் கண்முன் விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வயதான சாலியாரி, மனநல மருத்துவமனையில் பியானோ வாசித்தபடி இருக்கிறார். அங்கு வரும் பாதிரி ஒருவர், சாலியாரியிடம் பேச்சு கொடுத்து, confess செய்ய முயற்சிக்கிறார். அப்போது சாலியாரி அவரை ஏளனத்துடன் பார்த்துவிட்டு, தன் கருத்தினை வலியுறுத்த, தன்னுடைய கதையினை அப்பாதிரியிடம் கூறுகிறார். அவருடைய சிறுவயது, அவருக்கான இசையார்வம், ஆனால் அவர் தந்தை அதை ஊக்குவிக்காதது, அதே சமயத்தில் சிறுவயது மோட்ஸார்ட் தேவாலயங்களிலும், அரசவையிலும் பியானோ வாசிப்பது, வயலின் வாசிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என்று கதை நீள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மோட்ஸார்டின் பெருமை நம் அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையில் நாம் அனைவரும் மோட்ஸார்ட்டின் ஒரு இசையாக்கத்தையாவது கேட்டிருப்போம். "Happy birthday to you" இசை (இதை மோட்ஸார்ட் தன் ஐந்தாம் வயதில் இசையமைத்தாராம்), டைட்டன் வாட்ச் விளம்பரத்திற்கு வரும் இசை என பல இடங்களில் நாம் கேட்டிருக்கிறோம். அந்த மேதையின் இசையினை, இன்னொரு இசை அறிவாளனாகிய சாலியாரி, அதன் சிறப்பினை விளக்கி நாம் கேட்பது கொஞ்சம் புதுமை.&lt;br /&gt;&lt;br /&gt;சாலியாரிக்கு மோட்ஸார்ட்டின் இசைமீது ஒரு மாபெரும் மதிப்பு, வியப்பு. சாலியாரி, இறைவன் இட்ட கட்டளையினால்தான், தான் இசையமைப்பாளர் ஆனதாகவும், சிறந்த இசையாக்கத்தினை படைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் போது, மோட்ஸார்ட்டின் ஒரு இசையாக்கத்தினைக் கேட்க நேர்கிறது. நெகிழ்ந்து போகிறார், அதே சமயம் கடவுளிடம் கோபம் கொள்கிறார், இப்படிப் பட்ட இசையினை தன்மூலம் வெளியிடாததால். அதுவரை சால்ஸ்பர்க்கில் ஆர்க்பிஷப்பிடன் வேலை செய்து கொண்டிருந்த மோட்ஸார்ட், வியன்னாவின் இசையார்வம் மிக்க, அரசன், புரவலன், யோஸ·ப் II இன் அழைப்பின் பேரில், வியன்னாவிற்கு வருகிறார். சாலியாரி மோட்ஸார்ட்டின் மீது வியப்பு கொண்டிருந்தாலும், பொறாமையினால் உதவி செய்வது போல உபத்திரவம் செய்வது என்று கதை செல்கிறது. பல அருமையான, காலத்தால் அழியாத இசைப்படைப்புகளான &lt;a href="http://www.reginaopera.org/figaro.htm"&gt;·பிகாரோவின் திருமணம்&lt;/a&gt;, &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/B000059PII/qid=1121686748/sr=1-5/ref=sr_1_5/002-0562016-8923220?v=glance"&gt;மந்திரப் புல்லாங்குழல் &lt;/a&gt; மற்றும் பலவற்றினை படைக்கிறார். குடியினாலும், ஊதாரித்தனத்தாலும் வறுமையிலும், உடல் நலக்குறைவிலும் உழல்கிறார் மோட்ஸார்ட். உலகத்தின் அனைத்து மேதமைகளும், இளவயதிலேயே இறக்கவேண்டும் என்ற எழுதா விதிக்கேற்ப, தன் முப்பத்தி ஆறாம் வயதில் இறக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;(மோட்ஸார்ட் எப்படி இறந்தார் என்பது ஒரு &lt;a href="http://www.geocities.com/Vienna/Strasse/2915/amadeus.html"&gt;மர்மமான &lt;/a&gt;(அதாவது பல கான்ட்ரவர்ஸி தியரிகள் கொண்ட) விஷயம். சில அவர் குடித்து குடித்து நலத்தை கெடுத்துக் கொண்டார் என்றும், சாலியாரி விஷம் கொடுத்தார் என்றும், கரு மனிதன் ஒருவன் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்று பல விளக்கங்கள், வதந்திகள் உண்டு.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Old%20Salieri.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/200/Old%20Salieri.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;திரைப்படம் மிகவும் சுவாரஸ்யாமாக செல்கிறது. அருமையான காட்சியமைப்பு, உடைகள் மற்றும் பிற உபகரணங்கள், அப்படியே இருநூற்றாண்டுகளுக்கு முன் இருந்த வாழ்வை பார்ப்பது போன்ற ஒரு படிமம் தோன்றுகிறது. படத்தில் மோட்ஸாட்டாக நடித்தவர் டாம் ஹல்ச்சே. ஒரு இளம்-தாந்தோன்றித்தனமான மேதையை நம் கண்முன்னே நன்றாகவே நிறுத்துகிறார். ஆனால் அவரை மிஞ்சியவர் சாலியாரியாக நடித்த முர்ரே ஆப்ரஹாம். அட்டகாசமான நடிப்பு. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மோட்ஸார்ட்டின் இசையினை எழுத்து வடிவில் முதலில் பார்த்துவிட்டு, அதன் இருந்த சிறப்பை அவர் விவரிக்கும் காட்சி மிகப் பிரமாதம். அவருடைய நடிப்பு என்னை அக்காட்சியினை மட்டும் ஒரு பத்து பதினைந்து தடவை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Mozart.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/200/Mozart.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;விமர்சகர்கள் கூறும் குறைகளான கவர்ச்சியான மோட்ஸார்ட் மனைவி, பிறகு மடத்தனமான ஒரு சிரிப்பு to be precise - a giggle, மோட்ஸார்ட்டினை ஒரு maverick genius போல தோன்றவைக்க கொஞ்சம் நாடகத்தனமான characterization போன்ற விஷயங்களை எல்லாம் விட்டுத்தள்ளி, நம்மை ரசிக்க வைக்கிறது இப்படத்தின் திரைக்கதை. மோட்ஸார்ட்டின் மேதமையினை மட்டும் அறிந்து கொள்ளாமல், சாலியாரி என்ற இசைக்கலைஞன், கடவுளை தான் அப்பழுக்கில்லாமல் நம்பியதும், அந்த கடவுள் தன்னை ஏமாற்றிவிட்டு மோட்ஸார்ட்டின் வழியாக இசையினை கொணர்ந்து வஞ்சித்ததுமாக கதை செல்கிறது. படத்தின் இறுதியில் அருமையான வசனம் ஒன்று இருந்தது. மனம் பிறழ்ந்த சாலியாரி, இறைவன் தன்னை வஞ்சித்து, தன் மூலம் சராசரியான இசையினையும், மோட்ஸார்டின் மூலம் அபாரமான, சிறந்த இசையினையும் வெளிப்படுத்தியதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். தன் கதையினை இது வரை கேட்டுக் கொண்டிருந்த பாதிரியினைப் பார்த்து சொல்கிறார், I will speak for you, Father. I speak for all mediocrities in the world. I am their champion. I am their patron saint. Mediocrities everywhere... I absolve you. I absolve you. I absolve you. I absolve you. I absolve you all.&lt;br /&gt;&lt;br /&gt;எழுச்சி, வீரம், பிரம்மாண்டம் போன்ற உணர்வுகள் தான், எனக்கும் மோட்ஸார்டின் இசையினை இப்படத்தில் கேட்டவுடன் தோன்றியது. ஒருவித வசீகரமும், ஈர்ப்பும் உண்டாக்கியது இந்தவித இசை. குறிப்பாக, &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Abduction_from_the_Seraglio"&gt;The Abduction from the Seraglio&lt;/a&gt; கேட்டப் போது வந்த பிரமிப்பு, எழுச்சி கலந்த உணர்வினை வார்த்தைகளில் என்னால் கூற இயலவில்லை. சில நாட்களுக்கு முன் &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D"&gt;தி.ஜானகிராமனி&lt;/a&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D"&gt;ன்&lt;/a&gt; ஒரு &lt;a href="http://www.themusicmagazine.com/routes.html"&gt;சிறுகதையினைப் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பினை (Message என்ற தலைப்பில்) பற்றி&lt;/a&gt; நான் படிக்க நேரிட்டது. (இன்னும் அதன் மூலத்தினை படிக்கவில்லை). அதில் இருந்த அந்த மேற்கத்திய இசையாளர், ·பிலிப் போல்ஸ்கா, நாதஸ்வர வித்வான் பிள்ளையின் இசையினைக் கேட்டு லயித்து நிற்பார் (Pillai is amazed that a Tyagaraja composition yearning for peace should fill a foreigner with that very feeling). அமதியுஸ் படத்தின் சில இசையாக்கத்தினை கேட்கும் போது, எனக்கு அந்த ·பிலிப்பின் உணர்வு நன்றாகப் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய செவ்வியலிசையாகட்டும், எந்நாட்டு செவ்வியலிசையாகட்டும் அதில் உள்ள ஜீவனும், வசீகரமும் அனைவரையும் கவரும் தன்மை பெற்றவை. நாம் நம்முடைய receiverஇனை சரியாக இசைத்து வைத்திருந்தால் எவ்விசையினையும் மெய்மறந்து ரசிக்கலாம் என்று எண்ணுகிறேன். அதற்குத் தேவை ஒரு தூண்டுகோல் மட்டுமே. அலுக்க வைக்கும் விவரணைகளைக் கொண்டிருந்தாலும், சோழ மன்னர்களின் வரலாற்றின் மீது அடங்கா ஆர்வத்தை உண்டாக்கிய பொன்னியின் செல்வனைப் போல, மேற்கத்திய செவ்வியலிசை மீது எனக்கு ஆர்வம் பிறந்ததற்கு அமதியுஸ் ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்புகள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. எல்லோரையும் போல நானும், Mozart என்பதை மொசார்ட் என்று தான் உச்சரித்துக் கொண்டிருந்தேன். வியன்னாவில், மொசார்ட்டின் வீடு எங்கு உள்ளது என்று ஒரு அம்மையாரிடம் கேட்டு அவர் விழிக்க, அருகில் இருந்த இன்னொரு பெண்மணி, அவர்கள் மோட்ஸார்ட்டின் வீட்டிற்கான வழியினை கேட்கிறார்கள் என்று கூறி எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள் (நாங்களும் வழிந்துவிட்டு இடத்தை வேகமாக காலி செய்து கொண்டு ஓடினோம்). அதனால் தான் பதிவெங்கும் மோட்ஸார்ட் என்று எழுதியுள்ளேன் . அதே போல, Bach என்பது பாக் இல்லை பாஹ் என்றும், Beethoven என்பது பீத்தோவன் இல்லை, பெத்தோவன் என்றும் மற்றவர்கள் ஏளனம் செய்யாமலேயே அறிந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. என்னாடா, இந்த மேற்கத்திய செவ்வியலிசை கடியாக இருக்கிறேதே என்று ஆரம்பத்தில் உங்களுக்கு தோன்றுமானால், சில ஸ்டான்லி க்யூப்ரிக் படங்களைப் பாருங்கள். செவ்வியலிசையினை திரைப்படங்களில் அருமையாக பயன்படுத்தியவர் க்யூப்ரிக். குறிப்பாக Eyes Wide Shut படத்தில் செவ்வியலிசையினை பின்ணனி இசையாக பயன்படுத்துவதன் மூலம் காட்சிகளில் அட்டகாசமாக விறுவிறுப்பினை ஏற்படுத்தியிருப்பார். அதைப் போலவே, A Clockwork Orange, 2001 : A Space Odyssey போன்ற படங்களிலும் அந்த பாணி இசையினை நன்கு உபயோகித்திருப்பார். கண்டிப்பாக உங்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Too_Much.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/200/Too_Much.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;3. மோட்ஸார்டின் இசையினை எந்த எந்த படத்தில் உபயோகித்துள்ளனர் என்று IMDBஇல் ஒரு தேடல் செய்தேன். வந்த ரிசல்ட் ஒரு ஸ்க்ரீன்ஷாட் இது. படத்தினை பாருங்கள் கொஞ்சம் டூ மச் என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் ;). (இப்போது சரி செய்து விட்டனர், IMDB ஆட்கள் :)) )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112226479468574618?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112226479468574618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112226479468574618' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112226479468574618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112226479468574618'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/07/blog-post_25.html' title='அமதியுஸ்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-112055119313296266</id><published>2005-07-05T13:39:00.000+05:30</published><updated>2005-07-12T15:47:19.166+05:30</updated><title type='text'>இளையராஜாவின் திருவாசகம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/7586/211/1600/Raaja.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/7586/211/200/Raaja.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D"&gt;சிதம்பரத்தில்&lt;/a&gt; வளர்ந்ததால், என் தாய் சிவபுராணத்தை நான் உருப்போடுமாறு ஒரு கோடைவிடுமுறையில் ஆர்வத்தினை தூண்டினார். மேலும், சிதம்பரம் ஆலயத்தில் மார்கழி மாதம், தீபாராதனையின் போது திருவெம்பாவை படிப்பார்கள். சில சமயம் சிவபுராணமும் உண்டு. அது படிப்பதா பாடுவதா என்று சரியாக சொல்லமுடியாது. கர்நாடக ராகத்தில் எல்லாம் பாடமாட்டார்கள், அதே சமயம் தேமே என்றும் படிக்க மாட்டார்கள். அது வேறுவிதமான, ஆனால் எனக்கு பிடித்தமான ஒரு இசையாக இருந்தது. பெரும்பாலும் பல சைவ ஆலயங்களில் இந்த மாதிரி படிப்பதை (அல்லது பாடுவதை) கேட்டு லயித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பட்ட எனக்கு இளையராஜாவின் இந்த ஆரட்டாரியோ முயற்சி மிகுந்த எதிர்பார்ப்பினை தூண்டிவிட்டுருந்தது. ஞாயிறு அன்று வாங்கினேன் இது வரை மூன்று முறை முழுவதாகக் கேட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் ஒன்று, it is good, in fact very good, but it is not fabulous.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம். இசையின் technical aspectsஇன் அறிவிலியாகிய நான், என்னுடைய அனுபவம் கொண்டுதான் கூறமுடியும். இந்த ஆரட்டோரியா முயற்சி முற்றிலும் புதுமையானது, இதைப் போன்ற ஒன்றினை நான் இதுவரைக் கேட்டதில்லை என்றேல்லாம் &lt;a href="http://www.hindu.com/2004/11/26/stories/2004112603032000.htm"&gt;ஸ்டீஃபன் ஷ்வாட்ஸ் சொல்லியிருந்தார்&lt;/a&gt;. இது சில பாடல்களுக்கு வேண்டுமானால் உண்மை, ஆனால் இளையராஜாவின் திரைப்பட பாடல்களிலும், பின்ணனி இசையிலும் இந்த ஆரட்டோரியாவில் உள்ளது போன்ற இசையினை கேட்டது போல எனக்கு தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சங்கதி, இந்த இசைத்தொகுப்பின் மொத்த நேரம் அறுபது சொச்ச நிமிடங்களே. &lt;a href="http://tippingcup.rediffblogs.com/2005_26_06_tippingcup_archive.html#1120287232"&gt;ராஜேந்திரன் தன் பதிவில் சொன்னது போல&lt;/a&gt;, இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. பல நாட்கள், கடுமையாக உழைத்து, மிகப் பெரிய எதிர்பார்பினை ஏற்படுத்தியதாலோ என்னவோ, எனக்கு இந்த ஒரு விஷயம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு திருவாசகத்தில் இன்னொரு பிரச்சினை. சில பாடல்கள் மிக எளிதாகப் புரிகிறது (உ.ம் : &lt;span style="font-weight: bold;"&gt;புல்லாகி பூடாய்&lt;/span&gt;... ,&lt;span style="font-weight: bold;"&gt; புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்&lt;/span&gt;..), சிலது சுத்தமாக புரியவில்லை. நான் வாங்கிய குறுந்தகடுத் தொகுப்பில் பாடல்வரிகள் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்திருந்தனர். அதைப்போலவே அப்பாடல்களுக்கான பொருளினையும் கொடுத்திருக்கலாமோ. இன்னொரு சங்கதி, திருவாசகத்தில் உள்ள சில வரிகள் இப்போது ஏற்புடையதா என்று தெரியவில்லை. உதாரணம், "&lt;span style="font-weight: bold;"&gt;வளை கையார் கடைக்கண் அஞ்சேன்&lt;/span&gt;". இது சுலபமாக புரிந்து கொள்வதற்கு ஏற்றதாகக் கருதுகிறேன். ஆனால் இதனுடைய context தெரியாமல், ஐயகோ, எவ்வளவு மூடத்தனமான சிந்தனை என்றெல்லாம் சொல்லலாமா என்று தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் (&lt;a href="http://www.harimozhi.com/"&gt;ஹரி கிருஷ்ணன்&lt;/a&gt; போன்றவர்கள்) சொன்னால் புரிந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இசைத்தொகுப்பில் எனக்கு பிடித்த பாடல்களை, அதே வரிசையில் பட்டியலிட்டுள்ளேன் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்&lt;/span&gt;&lt;br /&gt;கொஞ்சம் நாட்டுபுறம் நடையோ என்று எண்ண வைக்கும் ஆரம்பம். பிறகு தான் தெரிகிறது, மேற்கத்திய செவ்வியலிசையினை, நம்மூர் பாணியில் தன்னான என்று பாடிவிட்டு, &lt;a href="http://ta.wikibooks.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"&gt;அச்சப்பத்து &lt;/a&gt;என்ற திருவாசகத்தின் பாடலை பாடுகிறார் ராஜா. எனக்கு இது மிகவும் இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொல்லா வினையேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnation.org/sathyam/east/thiruvasagam/tvasagam01.htm"&gt;சிவபுராணத்தில் &lt;/a&gt;உள்ள பாடல். மிக நீண்ட பாடல் (இருபது நிமிடங்கள் நீள்கிறது). இப்பாடலின் நடுவில், சில வரிகள் ஆங்கில மொழியாக்கப்பட்டு, ரே ஹர்கோர்ட் என்பவராலும் தமிழ் வரிகள் ராஜாவினாலும் பாடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முத்து நற்றாமம்&lt;/span&gt;&lt;br /&gt;ராஜா பாடாத ஒரே பாடல். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், ஆஷா, மஞ்சரி, காயத்ரி போன்றோர் பாடியுள்ளனர். &lt;a href="http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"&gt;திருப்பொற் சுண்ணம்&lt;/a&gt; என்ற திருவாசகப் பாடல். அருமையாக வந்துள்ளது. மற்ற பாடல்களில் சொற்களை அழகாக பிரித்து பாடியவர், இப்பாடலின் துவக்கத்தில் ஏன் அப்படி செய்யவில்லை என்று தெரியவில்லை. &lt;span style="font-weight: bold;"&gt;முத்து நற்றாமம்&lt;/span&gt; என்பது &lt;span style="font-weight: bold;"&gt;முத்து நல் தாழம்&lt;/span&gt; என்று தேடிப் படித்த பின்பு தான் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பூஏறு கோனும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnation.org/sathyam/east/thiruvasagam/tvasagam09.htm"&gt;திருக்கோத்தும்பி &lt;/a&gt;என்ற திருவாசகப் பாடல் இது. பவதாரிணியும், ராஜாவும் பாடியுள்ள பாடல். இப்பாடல் எனக்கு மேற்கத்திய செவ்வியலிசை போன்றெல்லாம் தெரியவில்லை, அல்லது இளையராஜாவின் பலபாடல்களினைக் கேட்டதால் வந்த விளைவா என்றும் தெரியவில்லை. ஆனால் கேட்க அருமையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உம்பர்கட்கரசே&lt;/span&gt;&lt;br /&gt;ராஜா பாடிய பாடல். நமக்கு அதிகம் பரிச்சயமான "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" (எட்டாம் வகுப்பு செய்யுள் என்று ஞாபகம்) பாடல் இதில் வருகிறது. &lt;a href="http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"&gt;பிடித்த பத்து&lt;/a&gt; என்ற திருவாசகப் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பூவார் சென்னி மன்னன் &lt;/span&gt;&lt;br /&gt;திருவாசகத்தின் &lt;a href="http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"&gt;யாத்திரைப் பத்து&lt;/a&gt; என்ற தொகுப்பில் உள்ள பாடல். இசைத்தொகுப்பின் முதல் பாடல், இளையராஜா பாடியுள்ளார். இது எனக்கு ஒரு மிஸ்டிக் எஃபெக்ட் ஏற்படுத்துவதாக உள்ளது. முதல் பாடல் என்பதால் ஒரு மெஜஸ்டிக் எஃபெக்ட் ஏற்படும் என்ற எண்ணம் என நினைக்கிறேன். ஆனால் மற்ற பாடல்களைப் போல அதிகமாகக் கவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுட்டிகள் :&lt;/span&gt;&lt;br /&gt;* &lt;a href="http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;விக்கி புத்தகங்களில் திருவாசகம், மற்றும் திருவாசகத்தின் உரை&lt;/a&gt;&lt;br /&gt;* &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE"&gt;தமிழ் விக்கிபீடியாவில் இளையராஜா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-112055119313296266?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/112055119313296266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=112055119313296266' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112055119313296266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/112055119313296266'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/07/blog-post.html' title='இளையராஜாவின் திருவாசகம்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-111941581152013953</id><published>2005-06-22T10:06:00.000+05:30</published><updated>2005-06-22T10:53:20.483+05:30</updated><title type='text'>மஜா</title><content type='html'>&lt;span style="font-style: italic;"&gt;வித்தியாசம், புதுமை&lt;/span&gt; என்ற சொற்கள் நம் தமிழ் சினிமாவினால் கொலை செய்யப்பட்டவை என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. விக்ரம் தன்னுடைய கடுமையான உழைப்பினையும், திறமையையும் அந்நியன் போன்ற கதைக்கு பிழிந்துக் கொடுத்திருக்கிறாரே என்ற என்னைப் போல நொந்து போயிருக்கலாம் அல்லது நொந்து போவதற்கு தயாராக இருக்கலாம். படத்தைப் பாருங்க, திரைப்படத்தைப் பற்றி ஹைப் க்ரியேட் செய்வதில் கமலை மிஞ்சியவர் ஷங்கர் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில், விக்ரம் நடிக்கவிருக்கும் மஜா என்ற திரைப்படத் துவக்க விழாவிற்காக சில promotion உத்திகளை என்னால் பார்க்க நேரிட்டது. நீங்களும் பாருங்கள் அசந்து போவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/FrontPageUpClose.jpg"&gt;&lt;br /&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/FrontPageUpClose.jpg" border="0" /&gt;&lt;/a&gt;   &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/FirstnLast.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/FirstnLast.jpg" border="0" /&gt;&lt;/a&gt;   &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/MajaTheevu.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/MajaTheevu.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/Second.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/Second.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/Vintage.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/Vintage.jpg" border="0" /&gt;&lt;/a&gt;   &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/pAandiyar.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/pAandiyar.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/Fourth.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/Fourth.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/MajaTransport.jpg"&gt;&lt;img style="width: 233px; height: 174px;" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Maja/MajaTransport.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://www.flickr.com/photos/santhoshguru/"&gt;இங்கேயும்&lt;/a&gt;, &lt;a href="http://photobucket.com/albums/v360/santhoshguru/Maja/"&gt;மேலும் சில படங்களுக்கு ...&lt;/a&gt;  )&lt;br /&gt;&lt;br /&gt;Promotion எல்லாம் நல்லாத்தான் இருக்கு.........ம்ம்ம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-111941581152013953?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/111941581152013953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=111941581152013953' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111941581152013953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111941581152013953'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/06/blog-post_22.html' title='மஜா'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-111821024127850500</id><published>2005-06-08T11:21:00.000+05:30</published><updated>2005-06-09T13:03:00.236+05:30</updated><title type='text'>புத்தக மீய்ம்</title><content type='html'>&lt;a href="http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209"&gt;மதியும்&lt;/a&gt;, &lt;a href="http://suvadu.blogspot.com/2005/06/blog-post_07.html"&gt;ஷங்கரும்&lt;/a&gt; என்னை விளையாடக் கூப்பிட்டுள்ளனர். என் பட்டியல் இங்கே :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புத்தகங்களின் எண்ணிக்கை : &lt;/span&gt;&lt;br /&gt;400 - 500 (&lt;a href="http://indianwriting.blogspot.com/"&gt;உமா மஹாதேவன் - தாஸ்குப்தா&lt;/a&gt;வோட &lt;a href="http://indianwriting.blogspot.com/2005/06/book-tagged-in-bombay.html"&gt;லிஸ்ட &lt;/a&gt;பாருங்க அம்மாடியோவ்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கடைசியாக வாங்கின புத்தகங்கள் : &lt;/span&gt;&lt;br /&gt;(நான் சீன் விடுவதற்கு சான்ஸ் கிடைத்துவிட்டது ;). அப்பாடா போனவாரம் தி.நகர் புக்லேண்டில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி என் அப்பாவிடம் வாங்கி கட்டிகொண்டது :) )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;கமலாம்பாள் சரித்திரம் - &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D"&gt;பி.ஆர். ராஜம் அய்யர்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை&lt;/li&gt;   &lt;li&gt;கலை உலகில் ஒரு சஞ்சாரம் - &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D"&gt;வெங்கட் சாமிநாதன்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;இன்றைய நாடக முயற்சிகள் - வெங்கட் சாமிநாதன்&lt;/li&gt;   &lt;li&gt;கடவு - &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29"&gt;திலீப்குமார்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி&lt;/li&gt;   &lt;li&gt;நாலு மூலை - ரா.கி.ரங்கராஜன்&lt;/li&gt;   &lt;li&gt;வரி வரியாகச் சிரி - ஜே.எஸ்.ராகவன்&lt;/li&gt;   &lt;li&gt;பதி பசு பாகிஸ்தான் - எஸ்.வி.ராஜதுரை&lt;/li&gt;   &lt;li&gt;கறுக்கும் மருதாணி - கனிமொழி&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://www.complete-review.com/reviews/chatteru/eaugust.htm"&gt;English August&lt;/a&gt; - &lt;a href="http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/upamanyuchatterjee.html"&gt;Upamanyu Chatterjee&lt;/a&gt; ( இது Five point some படித்த ஹேங்கோவரில் வாங்கியது)&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://www.sapnaonline.com/frm_main.asp?prod_type=A&amp;key=madhaviah&amp;amp;id=04EgTz3Fmo&amp;search=YES&amp;amp;x=23&amp;y=3"&gt;Padmavati     &lt;/a&gt;- &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE"&gt;A. Madhaviah&lt;/a&gt; (மொழிபெயர்த்தவர் : மீனாக்ஷி தியாகராஜன். தமிழில் "பத்மாவதி சரித்திரம்" கிடைக்காததால் ஆங்கில மொழிபெயர்ப்பு வாங்கவேண்டியதாயிற்று)&lt;/li&gt; &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சமீபத்தில் படித்து முடித்த புத்தகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் - &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"&gt;க.நா.சு&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்&lt;/li&gt;   &lt;li&gt;டுபாக்கூர் "டா வின்ச்சி கோட்" (Da Vinci Code) - &lt;a href="http://www.danbrown.com/"&gt;Dan Brown&lt;/a&gt; (&lt;a href="http://www.louvre.fr/louvrea.htm"&gt;பாரிஸ் லூவ்ரே மியூசித்துக்கு&lt;/a&gt; போகும் முன்னால், இதை படிச்சுட்டுப்போ என்று என் சகாவின் பரிந்துரையில் படித்தேன். காதுல பூ சுத்தலாம், மாலை போடறது கொஞ்சம் டூ மச்)&lt;/li&gt; &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படித்துக் கொண்டிருப்பவை :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;காகித மலர்கள் - ஆதவன்&lt;/li&gt;   &lt;li&gt;Unbearable lightness of being - Milan Kundera&lt;/li&gt;   &lt;li&gt;நாலு மூலை - ரா.கி.ரங்கராஜன்&lt;/li&gt;   &lt;li&gt;Bangalore - Peter Colaco&lt;/li&gt; &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படிக்க வேண்டும் என்று விழைபவை (அதாவது இன்னும் வாங்கவில்லை) :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர. ராமசாமி&lt;/li&gt;   &lt;li&gt;மௌனியின் கதைகள்&lt;/li&gt;   &lt;li&gt;மோகமுள் - தி.ஜானகிராமன்&lt;/li&gt;   &lt;li&gt;புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு - தொ.மு.சிதம்பர ரகுநாதன்&lt;/li&gt;   &lt;li&gt;கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்&lt;/li&gt;   &lt;li&gt;பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்&lt;/li&gt;   &lt;li&gt;Dance of Shiva - &lt;a href="http://www.tamilnation.org/hundredtamils/coomaraswamy.htm"&gt;Ananda Coomaraswamy&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;Introduction to Indian Art - Ananda Coomaraswamy&lt;/li&gt;   &lt;li&gt;Nataraja in Art, Thought and Literature - C.Sivaramurthy&lt;/li&gt;   &lt;li&gt;Foucault's Pendulum - &lt;a href="http://www.telegraph.co.uk/arts/main.jhtml?xml=/arts/2005/05/24/boeco22.xml&amp;sSheet=/arts/2005/05/22/bomain.html"&gt;Umberto Eco&lt;/a&gt;&lt;/li&gt; &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மிகவும் பிடித்தவை (Books That Mean a Lot to Me):&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;பாரதியார் கதைகள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்&lt;/li&gt;   &lt;li&gt;ஸ்ரீரங்கத்து கதைகள் - சுஜாதா&lt;/li&gt;    &lt;li&gt;என் பெயர் ராமசேஷன் - ஆதவன் (முதல் ஐம்பது பக்கம், மாம்பழத்தில் வண்டு வகையறா புத்தகமா என்று எண்ண வைத்து இறுதியில் எங்கோ ஒரு உயரத்துக்கு போன புத்தகம்)&lt;/li&gt;   &lt;li&gt;திரைஉலகில் - வெங்கட் சாமிநாதன்&lt;/li&gt;   &lt;li&gt;Swami and Friends - R.K.Narayan&lt;/li&gt;   &lt;li&gt;The Curious Incident of the Dog in the Night-Time - Mark Haddon&lt;/li&gt;   &lt;li&gt;Freedom at Midnight - Larry Collins, Dominique Lapierre&lt;/li&gt; &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிடித்தவை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;காக்டெயில் - &lt;a href="http://sudesamithiran.blogspot.com/"&gt;சுதேசமித்திரன்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://public.web.cern.ch/Public/Content/Chapters/Spotlight/SpotlightAandD-en.html"&gt;Angels and Demons&lt;/a&gt; - Dan Brown (ஹெலிகாப்டர்ல மேலே போயி பட்டாசு வெடிக்கிறதெல்லாம் கண்டுக்கலைன்னா;) )&lt;/li&gt;   &lt;li&gt;மானசரோவர் - அசோகமித்திரன்&lt;/li&gt;   &lt;li&gt;எம் தமிழர் எடுத்த திரைப்படம் - தியோடர் பாஸ்கரன்&lt;/li&gt;   &lt;li&gt;எப்போதும் பெண் (தலை சுஜாதா எழுதுனது) - அருமையான விஷயம் டைல்யூட் செய்யப்பட்டுவிட்டதாகக் கருதுகிறேன். (ஆனால் எப்போதும் போல, இப்புத்தகத்தின் மூலமான சிமோன் தி புவாவின் The Second Sex படிக்க ஆர்வம் வந்துள்ளது)&lt;/li&gt;&lt;li&gt;ராயர் காபி கிளப் - &lt;a href="http://vembanattukkaayal.blogspot.com/"&gt;இரா.முருகன்&lt;/a&gt;&lt;/li&gt;  &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படித்தவை... ஆனால் அவ்வளவாக (சுத்தமாக என்றும் சொல்லலாம்) ஒட்டாதவை :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;   &lt;li&gt;பொன்னியின் செல்வன் - செவ்விலக்கியம் என்றெல்லாம் சொன்னதால் படித்தேன். எனக்கு அப்படி தெரியவில்லை. இதைப் பற்றி என் கருத்துக்களை எழுதி &lt;a href="http://www.blogger.com/profile/3072121"&gt;இவனிடமும்&lt;/a&gt;, இந்த (&lt;a href="http://groups.yahoo.com/group/ponniyinselvan/"&gt;1&lt;/a&gt; , &lt;a href="http://www.louvre.fr/louvrea.htm"&gt;2&lt;/a&gt;) குழுக்களிடமும் வாங்கி கட்டிக்கொள்ள கொள்ள ஆசை :))&lt;/li&gt;   &lt;li&gt;உலக சினிமா (எஸ்.ராமகிருஷ்ணன்) - ஐநூறு ரூபாய்... ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்... இது பற்றி அடுத்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று எண்ணம்.&lt;/li&gt; &lt;/ol&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்த ஆட்டத்தை இவங்களும ஆடினா நல்லாயிருக்கும்: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;அண்ணாத்தே &lt;a href="http://dystocia.weblogs.us/"&gt;மாண்டி&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://sudesamithiran.blogspot.com/"&gt;சுதேசமித்திரன்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://vembanattukkaayal.blogspot.com/"&gt;இரா.முருகன்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://www.domesticatedonion.net/blog/"&gt;வெங்கட்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;&lt;a href="http://desikann.blogspot.com/"&gt;தேசிகன்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://etamil.blogspot.com/"&gt;பாஸ்டன் பாலா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/li&gt;    &lt;li&gt;&lt;a href="http://karupu.blogspot.com/"&gt;கறுப்பி&lt;/a&gt;&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;(இந்த பதிவினை படித்தபின்பு எனக்கு என்னவோ என்னைப் பற்றி ரொம்ப படிப்பாளி ரேஞ்சுக்கு ஒரு இமேஜ் பில்டப் கொடுத்துவிட்டேனோ என்று "எனக்குத்" தோன்றுகிறது. இந்த இடத்தில் ஒன்றே ஒன்றினை நினைத்துப் பார்த்துக்கொள்கின்றேன். எங்கோ படித்த ஞாபகம், ஜெயகாந்தன் சொன்னாராம், "புத்தகம் படிப்பதால் ஒருவன் மேதாவியோ அறிவாளியோ சிந்தனையாளனோ ஆவதில்லை. சொந்தமாகவும், originalஆகவும் எவன் சிந்திக்கின்றானோ அவன் அறிவாளி, அவன் சிந்தனையாளன்". சொந்தமாகவும், originalஆகவும் நான் சிந்திக்கின்றேனா என்று என்னை கேட்டுக்கொள்கின்றேன். பதில் வருவது கொஞ்சம் கடினம் தான். ஆனால் சிரிப்பு வருகிறது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-111821024127850500?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/111821024127850500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=111821024127850500' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111821024127850500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111821024127850500'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/06/blog-post.html' title='புத்தக &lt;a href=&quot;http://en.wikipedia.org/wiki/Meme&quot;&gt;மீய்ம்&lt;/a&gt;'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-111379634701283959</id><published>2005-05-19T09:10:00.000+05:30</published><updated>2006-07-20T09:12:42.993+05:30</updated><title type='text'>காக்டெயில் - வாசக அனுபவம்</title><content type='html'>&lt;a href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=&amp;products_id=10004"&gt;&lt;img style="width: 77px; height: 122px;" src="http://img.photobucket.com/albums/v727/chithran/cocktail_wr.jpg" border="0" /&gt;&lt;/a&gt;"&lt;span style="font-style: italic;"&gt;நாவல் வடிவமானது இறந்துவிட்டது. இனி கதை எழுத்து என்ற சொல்லாடல் களமானது, தன்னிலிருந்தே ஓடிப் பெருகுவதாய் தன்னையே திரும்பச் சொல்லி பதிவு செய்து கேலி செய்து மறுத்து உருவாகும். எழுதப்படும் போது உருவாவதாய் இருக்கும்&lt;/span&gt;" என்ற &lt;a href="http://www.federman.com/"&gt;ரேமண்ட் ·பெடர்மானின்&lt;/a&gt; சொற்களோடு துவங்குகின்றது இந்நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் என்பது வாழ்க்கையின் தேடலில் வெளிப்பாடு, ஆன்மிக நோக்குடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவரானால், உங்களுக்கான நாவல் இதுவல்ல. (நான் பார்த்த அளவில்) &lt;a href="http://www.imdb.com/name/nm0000233/"&gt;டாரண்டினோ &lt;/a&gt;போன்றவர்களின் திரைப்படங்களில் கதையோ, தேடலோ ஒரு மண்ணும் இருக்காது, ஆனால் திரைப்படம் மிகவும் வசீகரமாக இருக்கும். அதற்கு காரணம், கதை சொல்லும் நடை, பாங்கு, (இப்போ புதுசா வந்த சொல்லான) ஒயில் (Style) என்று தான் சொல்லமுடியும். அதைப் போலவே இந்நாவலின் நடைதான் இதன் அழகிற்கு காரணம். வாசகர்களை மெல்லிதாக நக்கலடித்து, கவனத்தை ஈர்த்து, சப்பையான விஷயத்தை அழகாக சொல்லும் முறையில் வெற்றி அடைகின்றது இந்நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசு என்ற எழுத்தாளன் ஒருவனைப் பற்றியது. எல்லா எழுத்தாளர்களைப் போல, தான் மட்டும் தனித்துவமானவன் என்ற தனித்துவமின்மையினை, தனித்துவமாகக் கொண்ட எழுத்தாளன். ·போட்டோஷாப் மற்றும் டி.டி.பி மென்கலன்களை இயக்கத்தெரிந்த கொஞ்சம் ஹைட்டெக்கான, பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் endsம் அல்ல meansம் அல்ல என்பது போன்ற அதி அற்புத தத்துவங்களை பழகும் மனிதன். தன்னளவில் தன்னை விட்டேத்தி என்று எண்ணிவாழ்பவனின் கதை, காக்டெயில். உபேந்திரா போல, "யாக்கே கூல்ட்ரிங்கு" என்று கூறி பீரைக் குடித்து தண்ணீரை சேமியுங்கள் அற்பப் பதர்களே என்பதைக் கூறாமல் கூறி, அதை கடைபிடிக்கும் தகையனார் நம் பாசு என்கிற பாலசுப்பிரமணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் படித்ததில், என்னை மிகவும் கவர்ந்த நாவல். இந்நாவலின் கதையினை சொல்லி உங்கள் கழுத்தையறுக்கப் போவதில்லை. ஏனென்றால் கதை என்று அப்படி பெரிதாக ஒன்றும் இல்லை. எனவே இந்நாவில் இருந்து பெற்ற சில போதனைகள், சில fundaக்கள், சில சுவாரஸ்யமான triviaக்கள் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;1. கோல்கொண்டா ரூபி ரெட் ஒயினும், கிங்·பிஷர் பியரும் எடுத்துக் கொள்ளவும். ஒரு சாதாரண கண்ணாடி தம்ளரில், ஒரு லார்ஜ் அளவுக்கு ஒயின் ஊற்றுங்கள். பிறகு அந்த தம்ளர் நிறையும் அளவு பியர் ஊற்றுங்கள். இப்போது, பியரின் கசப்புச் சுவை முற்றிலும் மறைந்து, வைனின் துவர்ப்பும் முற்றிலும் மறைந்து, அளவான இனிமைபோடு நாவில் ஒட்டும் பதத்தில், சிறுபிள்ளையும் சப்புக்கொட்டி சாப்பிடும் பதார்த்தம் போல இருக்கும். (இது லெதர் பாரிலேயே பழி கிடக்கும் எழுத்தாள நண்பர் (வேறு யாரு...&lt;a href="http://charuonline.com/"&gt;சாரு நிவேதிதா&lt;/a&gt; என்று தான் நினைக்கிறேன்) சொல்லிகொடுத்ததாம்)&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒரு லார்ஜ் என்பது அறுபது மில்லிமீட்டர். ஸ்மால் என்பது முப்பது மில்லி. மூன்று லார்ஜ்களை கொண்டது ஒரு குவார்ட்டர் (180 மில்லி). ஆனால் ஒரு ஹா·ப் என்பது 360 மில்லி, என்று நினைத்தீர்கள் என்றால், ஜன்ம சாபல்ய மற்று போக மாட்டீர்கள். So get your basics right. ஒரு ஹா·ப் என்பது 375 மில்லி. அதே போல ·புல் என்றால் ஒரு லிட்டர் என்று அப்பாவித்தனமாக எண்ணாமல், 375 X 2 = 750 மில்லி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (டீம் பார்ட்டிகளில் சகாக்கள் அனைவரும் நாற்றம்பிடித்த கிங்·பிஷர் பீரை அடித்துக் கொண்டு, அதற்கே மப்பேறி உளர்வதை, குடிப்பழக்கம் இல்லாத காரணத்தால் Tropicana ஆப்பிள், பைனாப்பிள், தர்பூஸ், முலாம் பழம் என்று குடித்து என்னைப் போல bladderஐ நிரப்பிக் கொண்டு பார்க்கும் தன்மை கொண்டவர் என்றால், மேற்கூரிய இந்த இரண்டு பாயிண்டுகளும் அடுத்த டீம் பார்ட்டியில் பிஸ்து காட்டுவதற்கு உபயோகப் படலாம் )&lt;br /&gt;&lt;br /&gt;3.·புல் மப்பில் யமஹா ஒட்டிக்கொண்டு, தாறுமாறான வேகத்தில், ·பளைஓவரில் செல்லவும், எப்படியாவது தட்டுதடுமாறி ·ப்ளைஓவரின் ஒரத்தில் இடித்து கீழே விழவும். பின்னர் உங்களுடை, அரதப் பழைய பைக்/டூ-வீலர் சாகசத்தை மனதில் நினத்துக் கொள்ளவும், ஏதாவது ஒரு பெண்ணிற்கு ரூட் போடுவதற்காகவோ, அல்லது சீன் விடுவதற்காகவோ, அல்லது தற்செயலாக செய்யப் போன வாகன சாகசத்தில் இருந்து, அதிர்ஷ்ட வசமாக தப்பிக்கொண்டதை மனதில் நினைத்துக் கொள்ளவும். அதை உங்கள் திறமையால் தப்பித்ததாக எண்ணிக்கொள்ளவும். ஆக இப்போது நீங்கள் ஒரு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் தில்லாலங்கடி. ·ப்ளைஓவரில் மூலையில் இருந்து எழுந்து கொண்டு, ·ப்ளைஓவரின் வளைவில் இடதுபக்கம் கொஞ்சம் மேடாகவும், வலதுபக்கம் கொஞ்சம் பள்ளமாகவும் ரோடு போடாத எஞ்ஜினியர்களை மனதாரப் புகழவும். உங்கள் விபத்துக்கு காரணம், நீங்கள் எல்லை, ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் தான் என்று திருப்திபட்டுக் கொண்டு, ஆஸ்பத்திரியில் சென்று அட்மிட் ஆகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தண்ணி ·பண்டாக்கள் போதும். வேற விஷயத்துக்கு வருவோம். சென்னையில் இருப்பவர் என்றால் உங்களுக்கான சில விஷயங்களை, &lt;a href="http://www.google.com/adsense"&gt;கூகள் AdSenseஐ&lt;/a&gt; விட சென்சிபிளாக ஒரு இடத்தில் வரும் டிப்ஸ் ( விளம்பரம் எண்டும் சொல்லலாம் :) ) என்ற பெயரில் கூறுகிறார், நாவலாசிரியர். பட்டுக்கோட்டை ஒயின்ஸின் சிறப்பான டிஷ், மீன் முட்டை (அயிலை மீனும், கோழி முட்டையும் சேர்த்து செய்தது), சுபா ஒயின்ஸின் சிறப்பம்சம் நெத்திலி மீன், சேலம் ஆர்.ஆர் ஒயின்ஸின் சிறப்பம்சம் கடல் உணவுகள். மறுபடியும், என்னைப் போல Egg-vegetarian ஆக நீங்கள் இருந்தால், உங்களுக்கு "சீஸ் - செர்ரி- பைனாப்பிள்" என்ற வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய பதார்த்தம் ஒன்றும் உள்ளது. (அதைப் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொன்னூறு ரூபாய் கொடுத்து யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியிட்டுள்ள காக்டெயில் புத்தகம் வாங்கிக்கொள்ளுங்கள் :) )&lt;br /&gt;&lt;br /&gt;5. டேய், சோத்தமிக்கி, வேறயெதையாவது பற்றி சொல்லு என்று நீங்கள் இந்த விண்டோவினை மூட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களை, சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவி உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுவாள். சரி, அடுத்த விஷயம். சில எழுத்தாளர்களைப் பற்றி காக்டெயில் எனக்கு கூறியவை. இந்த எழுத்தாளர் மிகவும் புத்திசாலி, ஒரு ரெபல், இவர் எழுதிய ஒரே சிறுகதைத் தொகுப்பு, "&lt;span style="font-weight: bold;"&gt;இன்று நிஜம்&lt;/span&gt;" என்ற நூல் கிடைப்பதே அரிதாம். இளவயதில் அகால மரணமடைந்த இவர், இறக்காமலிருத்திருந்தால் தமிழையே தலைகீழாய் புரட்டிப் போட்டிருப்பாராம். அந்த இவர், சுப்பிரமணிய ராஜூ.&lt;br /&gt;&lt;br /&gt;6. அடுத்த எழுத்தாளர் in-focus, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF"&gt;சுந்தர ராமசாமி&lt;/a&gt; என்ற பெயரிலும், பசுவய்யா என்ற பெயரிலும் எழுதிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர். இவர் எழுத்தை படித்த பலர், தன் தலைமுறை ஆப்பரேட்டிங் சிஸ்டம் படித்த இன்ஜியர்களாக அமெரிக்கா சென்று அவுட்லுக் மற்றும் MS-Excel, எக்ஸலாகும் போது, சிலர் மட்டும் புத்தகப் புழுக்களாக, ஓசி டைரியில் கதை எழுதி, சிறுபத்திரிக்கையில் எழுதி அல்லது சிறுபத்திரிக்கை நடத்தி (சரி ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்), பெண்களைப் பெற்றவர்களை பயமுறுத்தி வைப்பவர்களாம். இப்படி, சுந்தர ராமசாமியின் எழுத்தை படித்தவர்கள் சீரழிந்து கொண்டிருக்க, சுந்தர ராமசாமி மட்டும் தூரதேசங்களில் லொகேஷன் பார்க்கும் இயக்குநர்கள் போல சுற்றிக் கொண்டு இருப்பவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;7.இறுதியாக, சுதேசமித்திரன் என்ற எழுத்தாளான், முதல் தர ஜனரஞ்சக பத்திரிக்கையின் சிறுகதைப் போட்டியில் இருபதாயிரம் ரூபாய் பரிசு பெற்ற எழுத்தாளன். கால்டவுஸர் போட்டுக்கொண்டு (இப்பல்லாம் வேட்டி கட்டிக்கொண்டு :) ) சென்னையின் வலைப்பதிவு நண்பர்களிடையே புகழ்பெற்ற ஒருவர் நடத்தும் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள "&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=sho&amp;itemid=37"&gt;கோபுரம் தாங்கி&lt;/a&gt;" என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளன், சுதேசமித்திரன். தி.ஜானகிராமனிடமிருந்து நடையினையும், ஜெ·ப்ரி ஆர்ச்சரின் சிறுகதைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, சுஜாதாவிடம் ராணி பத்திரிக்கை படிக்கும் புழுவே என்ற நயன தீட்சையினை வாங்கிய எழுத்தாளன், சுதேசமித்திரன். ஆரம்ப காலத்தில் பாலகுமாரன் மற்றும் ராஜேஷ் குமார் போன்றவர்களின் கதைகளின் பற்று கொண்ட எழுத்தாளன், தன் பேராசிரியரின் பரிந்துரையின் பேரில், ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலைப் படித்து, தன்னுள்ளே பெரிய மாறுதலைக் கண்ட எழுத்தாளன் , சாரி, எழுத்தாளர், சுதேசமித்திரன். &lt;a href="http://sudesamithiran.blogspot.com/"&gt;அர்த்தமண்டபம் &lt;/a&gt;என்ற வலைப்பதிவு எழுதும், அடோபி போட்டோஷப் தெரிந்த, புதுமையான எழுத்து நடை கொண்ட எழுத்தாளன், சுதேசமித்திரன் என்ற ஷங்கர். அவர் எழுதி வெளிவந்துள்ள நாவல் "&lt;a href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=&amp;amp;products_id=10004"&gt;காக்டெயில்&lt;/a&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;Spoiler&lt;/span&gt;:&lt;br /&gt;கதை இல்லையென்று சொன்னாலும், ஒரு க்ளூ. நான் கூறப் போகும் ஒரு வரிசையில், காக்டெயிலை சேர்த்துக் கொள்ளலாம். (If you want to read the spoiler, select the invisible text, which is present down here :) )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;தலைவர் &lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 255, 255);" href="http://www.ucomics.com/calvinandhobbes/"&gt;Calvin &amp; Hobbes&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;ஸ்டீ·பன் கிங் எழுதிய &lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 255, 255);" href="http://www.imdb.com/title/tt0363988/combined"&gt;Secret Window&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;ஜான் நாஷ் பற்றிய &lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 255, 255);" href="http://www.imdb.com/title/tt0268978/combined"&gt;A beautiful mind&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;புதுமைச்செம்மல், வித்தியாசப் பம்மல், இரா. பார்த்திபன் இயக்கிய&lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 255, 255);" href="http://www.hindu.com/thehindu/fr/2004/09/10/stories/2004091002210300.htm"&gt; குடைக்குள் மழை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;....ம்ம்ம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;இன்னும் சொல்லவேண்டும் என்றால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;ரஜினியை முழுங்கி ஏப்பம் விட்ட தங்கத் தலைவி, கலைத்தாய்  &lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 255, 255);" href="http://www.jothikaonline.com/"&gt;சோதிகா&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt; நடித்த சந்திரமுகி.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-111379634701283959?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/111379634701283959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=111379634701283959' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111379634701283959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111379634701283959'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/05/blog-post.html' title='காக்டெயில் - வாசக அனுபவம்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-111310252186617638</id><published>2005-04-10T08:29:00.000+05:30</published><updated>2005-04-11T09:12:19.510+05:30</updated><title type='text'>விக்கிபீடியா</title><content type='html'>சிறிது காலமாக &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mayooranathan"&gt;மயூரநாதன்&lt;/a&gt;, &lt;a href="http://enkirukkal.blogspot.com/"&gt;பாலசுந்தர்&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams"&gt;ரவிசங்கர்&lt;/a&gt; ஆகியோர் மற்றும் சமீப காலமாக நான், முட்டி மோதிக்கொண்டும், கனவுக் கண்டு கொண்டிருந்ததும் சீக்கிரம் கைகூடும் என எண்ணுகிறேன். நேற்று சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பில் &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/"&gt;பத்ரி &lt;/a&gt;என் எண்ணங்களை உரக்கச் சொல்வதுபோல், &lt;a href="http://ta.wikipedia.org/"&gt;விக்கிபீடியா &lt;/a&gt;பற்றியும் அதில் அனைவரும் ஏன் எழுத வேண்டும் என்பது பற்றியும் கூறினார். மிக்க சந்தோஷம். ஆனால் விக்கிபீடியாவில் தொழில்நுட்பரீதியில் (அல்லது &lt;a href="http://valavu.blogspot.com/"&gt;இராம.கி&lt;/a&gt; சொன்னது போல நுட்பரீதியில்) பல மாற்றங்கள் செய்ய வேண்டியது உள்ளது. அவை :&lt;br /&gt;&lt;br /&gt;1. மீடியா விக்கி என்ற திறமூல மென்பொருளை, upgrade செய்யவேண்டும். (விக்கிபீடியா தளம் இந்த மென்பொருளினின் மேல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது)&lt;br /&gt;2. ஈ-கலப்பை போல், சுரதா &lt;a href="http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm"&gt;மென்பொருள்&lt;/a&gt; போல், விக்கிபீடியாவின் உள்ளேயே ஒரு தமிழ் எடிட்டர் தேவை. மேலும், இப்போது உள்ள எடிட்டர், ஃபையர்பாக்ஸில் தள்ளாடுகிறது. ப்ளாகரில் உள்ளது போன்ற எடிட்டரினை விக்கிபீடியாவிற்குள் கொண்டு வரவேண்டும்.&lt;br /&gt;3. இது அனைத்திற்கும் மேலாக, தமிழ்மணத்தில் உள்ளது போல, விக்கிபீடியாவும் டைனமிக் எழுத்துருவில் (Dynamic Fonts) எழுத்துக்கள் அமையவேண்டும்.&lt;br /&gt;4. நல்ல கட்டுரைகள் விக்கிபீடியாவிற்குள் வரவேண்டும், ஆங்கிலத்தில் போட்டுத்தாக்கிக் கொள்வது போல, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Talk:India"&gt;Edit War&lt;/a&gt;கள் தமிழ் விக்கிபீடியாவிலும் வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில், உங்களால் எது முடியும் என்று சொல்லுங்கள், சேர்ந்து செய்வோம். மிகவும் முக்கியமாக, &lt;a href="http://suvadu.blogspot.com/"&gt;ஷங்கர் &lt;/a&gt;சொன்னது போல, வலைப்பதிவர்கள் உங்களுடைய பதிவில் ஒரு ஆளுமையினைக் குறித்தோ, ஒரு இடத்தினை குறித்தோ, ஒரு துறையினைக் குறித்தோ, அல்லது ஒரு உணவுப் பண்டத்தை (&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF"&gt;இட்லி&lt;/a&gt;) குறித்து கண்டிப்பாக நீங்கள் எழுதியிருப்பீர்கள். அவை உங்களுடைய பர்சனல் டச்சுடன் இருக்கலாம். அவற்றை, ஒரு விக்கிபீடியாவில், உயர்தரமான களஞ்சியத்தில் சேர்த்து எழுதுவது எப்படி என்று தெரிந்தால், மாற்றி எழுதி விக்கிபீடியாவில் சேருங்கள். உங்களுக்கு அதில் எதாவது உதவிவேண்டும் என்றால் &lt;a href="mailto:santhoshguru@gmail.com"&gt;எனக்கு&lt;/a&gt; ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். என்னால் முடிந்த உதவியினை நான் செய்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://ta.wikipedia.org/" target="_new"&gt;&lt;img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/e/e8/Wiki_Small.jpg" alt="தமிழ் விக்கிபீடியா" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மேலும் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் அல்லது தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்கிபீடியாவினை விளம்பரப் படுத்துங்கள். வெறும் ஐந்து கே.பி தான் இதன் அளவு. மேலும், கூகள் Pagerank அதிகமாகி, நீங்கள், கூகளில் தேடும் போது, விக்கிபீடியாவில் இருந்தால், சொல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;textarea rows=7&gt;&lt;p&gt;&lt;a href="http://ta.wikipedia.org" target="_new"&gt;&lt;img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/e/e8/Wiki_Small.jpg" alt="தமிழ் விக்கிபீடியா" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/textarea&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(விக்கிபீடியாவில் என்னென்ன கட்டுரைகள் சமீபமாக, தொகுக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிய &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Recentchanges"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்கவும்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-111310252186617638?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/111310252186617638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=111310252186617638' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111310252186617638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111310252186617638'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/04/blog-post_10.html' title='விக்கிபீடியா'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-111287477795429647</id><published>2005-04-07T17:19:00.000+05:30</published><updated>2005-04-07T17:49:59.773+05:30</updated><title type='text'>கசாகூளம்</title><content type='html'>திருச்சியில், மண்டல பொறியியல் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட &lt;a href="http://www.nitt.edu/"&gt;National Institute of Technology, Trichyயில் &lt;/a&gt;ஆண்டு தோறும் நடக்கும் விழா "&lt;a href="http://www.nitt.edu/festember/"&gt;ஃபெஸ்டம்பர்&lt;/a&gt;". அதில் ஒருமுறை நடத்தப்பட்ட ஒரு பல்சுவை நிகழ்ச்சிக்கு &lt;span style="font-weight: bold;"&gt;கசாகூளம் &lt;/span&gt;என்று பெயர் &lt;a onmouseover="ddrivetip('நாங்கள் அதில் முதல் பரிசு வேறு பெற்றோம் :)', 'white', 300)" style="border-style: none none dotted; border-color: -moz-use-text-color; border-width: 0px 0px 1px; color: rgb(0, 0, 0); text-decoration: none;" onmouseout="hideddrivetip()"&gt;வைத்திருந்தினர் &lt;/a&gt;. கேட்பதற்கு வினோதமாகவும், எனக்கு விசித்திரமாகவும் இருந்தது கசாகூளம் என்ற சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில், &lt;a href="http://www.hindu.com/lr/2005/03/06/stories/2005030600280500.htm"&gt;ரிச்சர்ட் க்ளோவர் தொகுத்துள்ள Dag's dictionary&lt;/a&gt; பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் (இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் :) ). மொழியினால் வெளிப்படுத்த முடியாத சில செயல்களுக்கு, ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு தத்துபித்து விளக்கமும் கொடுத்தால் அது ஒரு dagword. உதாரணத்திற்கு, Batbiter என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். Batbiter என்றால் சூப்பராக விசப்பட்ட பந்தில், டூபாக்கூர் மாதிரி விளையாடி, beaten ஆன பிறகு, பேட்டில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போல் பார்ப்பவர். சுருங்கக்கூறின் நம்ம சவுரவ் கங்குலி மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல என்னுடைய dagword தான், இந்த &lt;span style="font-weight: bold;"&gt;கசாகூளம்&lt;/span&gt;. ரொம்ப சுற்றி வளைக்காமல் கூற வேண்டும் என்றால் &lt;span style="font-weight: bold;"&gt;Potpourri, Collage, Medley&lt;/span&gt; மாதிரி என்று கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு எழுதுவது ஒருமாதிரி அலுத்துப் போனதாலும், வேறு பல பணிகள் சுவாரஸ்யமாக இருந்ததாலும் இவ்வளவு நாள் என் வலைப்பதிவுக்கு விடுமுறை விட்டிருந்தேன். இனி ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த விடுப்பில், இணையத்தில் நேரம் மிக சுவாரஸ்யமாக போனதற்கு காரணம், &lt;a href="http://ta.wikipedia.org/"&gt;கட்டற்ற களஞ்சியம்&lt;/a&gt; தான். அட நம்ம &lt;a href="http://ta.wikipedia.org/"&gt;விக்கிபீடியாங்க&lt;/a&gt;. மேலும், கொஞ்சம் புத்தகங்கள் படிக்கவும் நேரம் கிடைத்து. வலைப்பதியவேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல் புத்தகம் படிக்கவும், திரைப்படம் பார்க்க முடிந்தது. இனி மேலும் அப்படியே தொடரும் என நினைக்கிறேன். (வலைப்பதிவதும் தொடரும் என எண்ணுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;என் வலைப்பதிவின் உள்ளடக்கத்தினை பிரதிபலிக்குமாறு ஒரு கசாகூளத்தினை (Collage) செய்து, வலைப்பதிவின் முகப்பில் இட்டுள்ளேன். அதை செய்ய உதவிய, &lt;a onmouseover="ddrivetip('கமலஹாசன் என்பதன் செந்தமிழ்பெயர்ப்பு :)', 'white', 300)" style="border-style: none none dotted; border-color: -moz-use-text-color; border-width: 0px 0px 1px; color: rgb(0, 0, 0); text-decoration: none;" onmouseout="hideddrivetip()"&gt;தாமரை நகுலன்&lt;/a&gt; அழகொத்த, தீம்குரலோன்&lt;a href="http://www.blogger.com/profile/4190965"&gt; கார்த்திக் &lt;/a&gt;அவர்களே உங்களுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-111287477795429647?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/111287477795429647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=111287477795429647' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111287477795429647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/111287477795429647'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2005/04/blog-post.html' title='கசாகூளம்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-110319258849200245</id><published>2004-12-16T15:44:00.000+05:30</published><updated>2004-12-16T16:01:31.453+05:30</updated><title type='text'>இரு புத்தகங்கள் - ஒரு பார்வை</title><content type='html'>நான் இந்த வருடம் படித்ததில் சிறந்த, மிகவும் பிடித்த புத்தகங்கள் எவை என்று அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். பிஏ.கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை, ஆங்கிலத்தில் மார்க் ஹட்டன் (Mark Haddon) எழுதிய The Curious Incident of the Dog in the Night-Time . இந்த இருநூல்களும் புனைவிலக்கிய (fiction) வகையினை சார்ந்தவை, ஆனால் புனைவு மட்டும் இல்லாமல் உண்மைச் சம்பவத்தை, அனுபவங்களை புனைவு என்னு சட்டை போட்டு கொண்டு சொல்பவை. என்னை மிகவும் கவர்ந்த, இந்த இருநூல்கள் பற்றிய சில கிறுக்கல்கள் (விமர்சனங்கள் அல்ல) :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0385512104/002-3962233-2900848?v=glance"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;The Curious Incident of the Dog in the Night-Time&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt; - &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.powells.com/authors/haddon.html"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;Mark Haddon&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகம். இந்த அறிமுகம் போதும் என நான் எண்ணுகிறேன். இந்த புத்தகத்தினை படிக்கும் முன்னால் இதன் கதை அல்லது கதைக்களம் பற்றி முன்கூட்டியே அறியாமல் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியம் தரும். கொஞ்சம் அதிகமான இளகிய மனம் உள்ளவர்களை இப்புத்தகம் அழவைத்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். பலர் இதை வேகமாக முடிக்காமல், வேண்டுமென்றே மெதுவாக, இருநூறு சொச்ச பக்கங்களை ஒரு மாதமாக படிப்பதாகவும் அறிகிறேன். என் இலக்கிய அறிவில், இந்த புத்தக ஆசிரியர் மிகவும் "வித்தியாசமான" ஒரு கதை சொல்லும் உத்தியைக் கையாண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;Spoiler&lt;/strong&gt;&lt;/span&gt;: ஆஸ்பர்ஜர்ஸ் சிண்ட்ரோம் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Aspergers"&gt;Asperger's Syndrome&lt;/a&gt;) என்ற வகையான ஆட்டிஸத்தினால் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Autism"&gt;autism&lt;/a&gt;) பாதிக்கப் பட்ட சிறுவன், கிறிஸ்டோஃபர். மிகவும் புத்திசாலி. அவனுடைய எதிர்வீட்டில் இருந்த நாய் ஒன்று கொலை செய்யப்பட்டுள்ளது. அதை துப்பறியும் வேலையில் இறங்குகிறான் அவன். பல கசப்பான உண்மைகளை அறிந்து கொள்ள நேர்கிறது. சில உண்மைகள் மனதை உருக்கியும் உலுக்கியும் விடுகிறது. We are blessed என்றும் உணரவைக்கிறது, கிறிஸ்டோஃபரைப் பார்த்து பொறாமை கொள்ளவும் வைக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&amp;amp;itemid=95"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;புலிநகக் கொன்றை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt; - பிஏ.கிருஷ்ணன் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூலைப் பற்றி சொல்லும் முன்னர், இந்த நூல் பற்றிய சில சுட்டிகளை முதலில் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;அ.முத்துலிங்கம் எழுதிய &lt;a href="http://www.thinnai.com/arts/ar0205048.html"&gt;வாசிப்பு அனுபவம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;இரா.முருகன் எழுதிய &lt;a href="http://www.thinnai.com/pl0619031.html"&gt;ஒரு அறிமுகம்&lt;/a&gt; மற்றும் நாவலசிரியருடன் ஒரு &lt;a href="http://www.thinnai.com/pl1002036.html"&gt;உரையாடல்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=635"&gt;கே.வி.ராஜா&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1091"&gt;ஹரன் பிரசன்னா&lt;/a&gt; எழுதிய வாசிப்பு அனுபவங்கள்&lt;/li&gt;&lt;li&gt;ஜெயமோகனுக்கும் நாவலாசிரியருக்கும் நடந்த நீண்ண்ண்ண்ட (ஆனால் ஆரோக்கியமான) &lt;a href="http://www.thinnai.com/arts/ar0317031.html"&gt;அஞ்சல் விவாதம்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இந்த நாவலின் கதையினையும் நான் சொல்லப்போவதில்லை, மேலே உள்ள சில சுட்டிகளில் கதையினை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவல் படித்து முடித்த பின்பு, தோன்றிய எண்ணம். அம்மாடி, தமிழ்நாட்டின் வரலாறே சில பக்கங்களில், பல்வேறு பார்வைகளில், மிக எளிமையாக, அழகியல்தன்மை மாறாமல் படித்த திருப்தி. மிக அதிக அளவில் விவரணைகள் இல்லாமல், சம்பாஷணைகளாலும், நிகழ்வுகளாலும் மட்டுமே இந்த நாவல் நகர்ந்தது தான் என்னை மிகவும் கவர்ந்தது. பல்வேறு கதாபாத்திரங்கள் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களை ஞாபகப்படுத்துவதால் புத்தகத்தில் எனக்கு ஏற்பட்ட லயிப்பு சொல்லிமாளாது. வரலாற்றில் கொஞ்சம் ஆர்வமும், ஒரு குடும்பத்தில் உள்ள ஆட்களை ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்கு பொறுமையும் இருந்தால் போதும் இந்த புத்தகம் உங்களை திருப்தி படுத்தும் என்று கட்டாயமாகச் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(பிஏ.கிருஷ்ணன் சார், எல்லாம் சரி, ஏதோ விவகாரமான விஷயம்ங்கற அளவுக்குத்தெரியும். ஆனால் அந்த இடுப்புக்கு அண்டக் கொடுக்கும் சமாச்சாரம் என்ன என்பது மட்டும் எனக்கு விளங்கவே இல்லை :( )&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி, நான் ஒதுங்கிக் கொள்கிறேன், இந்த இரு புத்தகங்களையும் இன்னும் இருமுறையாவது நான் வாசிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-110319258849200245?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/110319258849200245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=110319258849200245' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/110319258849200245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/110319258849200245'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/12/blog-post_16.html' title='இரு புத்தகங்கள் - ஒரு பார்வை'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-110301729188189540</id><published>2004-12-14T15:05:00.000+05:30</published><updated>2004-12-14T15:57:00.866+05:30</updated><title type='text'>திரை உலகில் - ஒரு வாசிப்பு அனுபவம் </title><content type='html'>&lt;em&gt;&lt;blockquote&gt;&lt;em&gt;"சட்ட புஸ்தகமெல்லாம் உன்னோட அப்பா மாதிரி முட்டாளுக்குத்தான்.... எவ்வளவு சட்டம் படிக்கிறியோ அவ்வளவு குழம்பிப் போயிடுவே"&lt;br /&gt;&lt;br /&gt;"புஸ்தகமும் அப்படித்தானோ"&lt;br /&gt;&lt;br /&gt;கோபால பிள்ளை அவனைக் கூர்ந்து பார்த்தார்&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு மூளை இருக்கு. புஸ்தகம் உன்னைக் குழப்பும்னு நான் நினைக்கல்லை"&lt;br /&gt;&lt;br /&gt;- பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய &lt;/em&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&amp;itemid=95"&gt;&lt;em&gt;புலிநகக் கொன்றை&lt;/em&gt;&lt;/a&gt;&lt;em&gt; என்ற நாவலில், கோபால பிள்ளை என்பவருக்கும் கண்ணனுக்கும் நடக்கிற உரையாடல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிநகக் கொன்றையில் வரும் கண்ணனைப் போல், கொள்கைப் பிடிப்பு இல்லாத கொள்கையில் பிடிப்பு இருப்பவன் நான். எனக்கு மூளையும் இருக்கிறது, இந்த புத்தகம் சில விஷயங்களில் என்னை குழப்பியும் விட்டிருக்கிறது.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;வெங்கட் சாமிநாதன் கடந்த நாற்பது வருடங்களாக திரைப்படம் மற்றும் அதை சார்ந்த விஷயங்களினைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த "&lt;strong&gt;திரை உலகில்&lt;/strong&gt;" புத்தகம். 1960ல் பார்த்த சிறந்த திரைப்படங்களினைப் பற்றிய அவரது கருத்துக்கள் முதற்கொண்டு கமல் கூறும் "எனக்கு முக்கியம் perfection அல்ல excellence" என்பதன் விமர்சனம் வரை உள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் சாமிநாதன் என்ற கலை விமர்சகரின் எழுத்துக்களை முதல் முறையாகப் படிக்கும் தமிழ் இலக்கிய அறிவிலி நான். இப்புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது நான் வெ.சா பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் அவரைப் பற்றி இணையத்தில் மேய்ந்த பிறகு தான் அவருக்கு என்று இருக்கிற ஒரு high critic படிமம் எனக்கு தெரிந்தது. இந்த புத்தகமும் அந்த வகையினைச் சார்ந்ததே. இக்கட்டுரைத் தொகுப்பு, என்னை திரைப்படம் என்ற கலையினைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினை செய்யவும் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தில் உள்ள பொதுவான கருத்துக்கள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அமெரிக்க திரையுலகமும், தமிழ் திரையுலகினைப் போல் வணிக நோக்கம் கொண்டதே. புதிய பாதகளை, புதிய சொல்முறைகளை, புதிய உலகங்களை அறிமுகப்படுத்தும் செயல்பாடுகளைக் காண நாம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயின் என்றுதான் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா என்பது, இன்னமும் நாடகத் தன்மையிலிருந்து முழு விடுதலை பெறாமல், அளவுக்கதிகமான நார்சிஸத்தோடும், கலையினை பாராட்டாமல், கலைஞர்களையும் தொழில் நுணுக்கத்தினையும் மட்டுமே அதிகமாக புகழ்ந்து, ஒரு சகதியில் உழன்று கொண்டிருக்கிறது. &lt;/blockquote&gt;(மேற்சொன்ன இரு கருத்துக்களிலும் விதிவிலக்குகள் நிறையவே உண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகம் என்னை குழப்பியது என்பதற்கான காரணங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே. அதில் நாம் கருத்து சொல்கிறேன், புரட்சி செய்கிறேன் என்றால் வேலைக்காவாது. ஏனென்றால், உழைத்து களைத்து வரும் மக்கள், சந்தோஷப்படுவதையே விரும்புகிறார்கள் என்று எனக்கு புகட்டப் பட்டதையே நம்பியிருந்தேன். ஆனால் எளிய விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், நாம் பாமரர் என்றும் அவர்களுடைய மகிழ்ச்சிக்காகத்தான் படம் எடுக்கிறேன் என்று நினைக்கும் பொதுமக்களுக்கு எத்தகைய உயர்ந்த ரசனைத்திறன் உள்ளது என்பதை கர்நாடகாவில் உள்ள கே.வி.சுப்பண்ணா, தன்னுடைய கிராம மக்களுக்கு உலகின் தலைசிறந்த திரைப்படங்களை வெளியிட்டு, மக்கள் அதனை மிகவும் விரும்பி ரசிக்கும் திறனுடையவர்கள் என்று காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நம் தமிழ் சினிமா நாடகத்தன்மையிலிருந்து விலகாமல்&lt;br /&gt;இருக்கிறது என்பதற்கும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். யதார்த்தம் என்பதன் சுவடே இல்லாமல், மலை உச்சியிலிருந்து தள்ளிவிடும் முன்னர் ஐந்து நிமிட சம்பாஷணைகள். கோபம் வந்ததும் நரம்புபுடைக்க, கண்கள் சிவக்க, வசனங்களுக்கு நடுவில் அவ்வப்போது மூச்சுவிட்டுக்கொண்டு பேசும் நம் கதாபாத்திரங்கள். அந்த காலத்தில் திருவிழா போது&lt;br /&gt;கரகாட்டம், காவடியாட்டம் ஆடுவார்கள். நம் திரைப்படத்தில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இப்படி சேஷ்டைகள் வந்து போகின்றன. இதைப்போன்று ஒப்பீடு செய்து கொண்டே போகலாம். ( விளம்பரத்தில் கூட, டி.வியில் வரும் "குங்குமம்" இதழ் விளம்பரம் என்பது தலையில் கூடை சுமந்து கொண்டு, "கீரைம்மா, கீரை" என்று விற்கும் யுத்தி உடையது. ஆனால் Hutch விளம்பரமோ கவித்துவமும் அழகுடனும் சேர்ந்து அமைதியாக "Wherever you go, our network follows" என்று சொல்லும் யுத்தி உடையது )&lt;br /&gt;&lt;/blockquote&gt;சரி இவ்வாறு ஒப்பீடு செய்துகொண்டே, நம்மிடை நல்ல சினிமாக்கள் குறைவு என்று தெரிந்துவிட்ட பிறகு, எவ்வாறு ஒரு நல்ல திரைப்படத்தினை நாம் கண்டுகொள்வது. ஆசிரியர் சொல்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"திரைப்படத்திற்கு ஒரு கதை வேண்டும் என்று ஒரு சாஸ்திர நியதியும் கிடையாது. ஒரு கருத்து, உணர்ச்சியின் ஒரு இழை அல்லது இழைகளின் தொகுப்பு, அர்த்தம் மிகுந்த, ஆனால் தன்னுள் ஒரு கதையினைக் கொண்டிராத வாழ்க்கையின் ஒரு பகுதி எல்லாமே திரைப்படத்திற்கு உகந்த பொருட்கள் தான்" &lt;/blockquote&gt;இப்புத்தகத்தில் இருந்த கட்டுரைகள் பற்றிய என் கருத்துக்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வேகப் பார்வையில்" மற்றும் "ஆரம்ப குறிப்புகள்" கட்டுரையில் நான் மேலே கூறியுள்ள கருத்துக்கள் மிக அழுத்தமாக த்வனிக்கின்றன. &lt;a href="http://imdb.com/name/nm0001178/"&gt;ஸர்ஜி ஐஸன்ஸ்டைன்&lt;/a&gt;, &lt;a href="http://imdb.com/name/nm0000080/"&gt;ஆர்ஸன் வெல்ஸ்&lt;/a&gt;, &lt;a href="http://imdb.com/name/nm0006249/"&gt;சத்யஜித்ரே&lt;/a&gt; போன்றவர்கள் மீது அபார மதிப்பினை கொண்டிருக்கிறார் ஆசிரியர். சிவாஜியின் theatrical melodramaவினையும், ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தரின் திரைப்பாணியினையும், "கமல் ஸார்" போன்றவர்களையும் கிழி கிழி என்று கிழிக்கிறார். இக்கட்டுரைகளில் உள்ள கருத்துக்கள் உண்மைதான் என்றாலும், அவை அனைத்தும் தமிழ் சினிமாவின் மீது ஒரு அளவுக்கு அதிகமான பெஸ்ஸிமிஸ்டிக் பிம்பத்தினை கொடுக்கிறது. ஆனால் ஒருவகையில் அந்த பெஸ்ஸிமிஸ்டிக் படிமமும் உண்மைதானா என்று சந்தேகப்படவும் வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு படம் ஒரு பார்வை" என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் இயக்கிய "உன்னைப் போல் ஒருவன்" பற்றி மிக நீளமான ஒரு ஆய்வினைக் கொடுத்துள்ளார். திரைப்படம் என்பதின் உயிரை அறிந்து தமிழில் வந்த முதல் உருப்படியான படம் என்று உச்சி முகர்ந்துள்ளார். (தமிழில் ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, ஜெயபாரதி, பூமணி தவிர அனைத்து இயக்குநர்களையும் சாடியுள்ளார். அதிலும் ஸ்ரீதர், பாலசந்தர் மற்றும் மணிரத்னத்தினை பற்றி அவரளவில் காழ்ப்புணர்ச்சியில்லாமல் கடுமையாக சாடியுள்ளார்.)&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;a href="http://imdb.com/title/tt0064129/"&gt;கார்டியாக்&lt;/a&gt;" என்ற ஜெர்மன் திரைப்படத்தினைப் பற்றி சொல்லும் போது Novelle Vague (புதிய அலை) என்ற திரைப்பட சித்தாந்தத்தின் பின்ணணியினைப் பற்றியும், அந்த திரைக்கதையினைப் பற்றியும் மிக ஆழமான, மிகவும் விரிவான ஆய்வினைக் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் சினிமாவும் அரசியலும்" என்ற கட்டுரையில் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் எம்.ஜி.ஆர் என்ற ஒரு phenomenon எப்படி தமிழ்நாட்டில் சாத்தியப் பட்டது என்றும், மற்ற மாநிலங்களில் பிறர் அவரைப் போல் முயன்று ஏன் தோற்றார்கள் என்று ஒரு விரிவான, வியக்க வைக்கின்ற ஆய்வினை கொடுத்துள்ளார். இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை இது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நீண்ட பரிச்சயம்" என்ற கட்டுரை &lt;a href="http://imdb.com/name/nm0000005/"&gt;இங்கமார் பெர்க்மேன்&lt;/a&gt; (&lt;a href="http://imdb.com/name/nm0000006/"&gt;இங்க்ரிட் பெர்க்மேன்&lt;/a&gt; அல்ல ;-) ) பற்றிய ஒரு அறிமுக கட்டுரை எனக்கூறலாம். பெர்க்மேனின் &lt;a href="http://imdb.com/title/tt0050976/"&gt;The Seventh Seal&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://imdb.com/title/tt0053976/"&gt;Virgin Spring&lt;/a&gt; போன்ற படங்கள் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தினை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐஸன்ஸ்டைன், பாவ்லாவ், ஜப்பானிய சித்திர எழுத்துக்கள்" என்று கட்டுரை மிகவும் அருமை. பேட்டில்ஷிப் பொட்டெம்கின் படத்தின் இயக்குநர் ஸர்ஜி ஐஸன்ஸ்டைன், தான் திரைப்பட கலையின் ஆன்மாவினை அறிந்துகொள்ள உதவியாக இருந்த ஜப்பானிய சித்திர எழுத்துக்கள் பற்றியும், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Ivan_Pavlov"&gt;இவான் பாவ்லாவின்&lt;/a&gt; சித்தாந்தத்தின் பாதிப்பினைப் பற்றி அருமையாக விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;a href="http://www.ulagathamizh.com/archives/artnculture/NunKalai/Nunkalaivesa15.htm"&gt;கலை நோக்கு, தொழில் நுட்பம், தேடல்&lt;/a&gt;" , "&lt;a href="http://www.ulagathamizh.com/archives/artnculture/NunKalai/Nunkalaivesa14.htm"&gt;கலை இயக்குநரின் வேலை என்ன ?&lt;/a&gt;" , "&lt;a href="http://www.ulagathamizh.com/archives/artnculture/NunKalai/Nunkalaivesa.htm"&gt;பெருமைகளும் சிறுமைகளும்&lt;/a&gt;" போன்ற கட்டுரைகள் உலகத்தமிழ் இதழுக்காக வெளியானவை. இந்த மூன்று கட்டுரைகள் சமீபத்தில் எழுதியவை, முந்தைய கட்டுரைகளில் இருந்த acerbity இதிலும் குறையவில்லை என்றாலும் கருத்துக்கள் கொஞ்சம் dilute செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;"மணிரத்னத்தின் சினிமா", "அகிரா குரஸாவாவின் இகுரு" , "பீர் முகமதுவின் - திரைப்படம் ஒரு வாழும் கலை" போன்ற நூல்கள் குறித்து தன் விமர்சனங்களினை தந்துள்ளார். இவற்றில் பீர் முகமதுவின் புத்தகத்தினைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்பட விழாவினைப் பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் எனக்கு Greek and Latin போல தோன்றியது. காரணம் ஆசிரியர் குறிப்பிடுகின்ற இயக்குநர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை (எம் கலை/இலக்கிய அறிவு அப்படி). ஆனால் ஒரு திரைப்படத்தினை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இவ்வுரையாடல்களில் உங்களுக்கு விடை கிடைக்கலாம். திரைப்படமோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்போ ரசிகனை சுண்டியிழுத்து கட்டிப்போட வேண்டும், அப்படி இல்லை என்றால் ரசிகனிடத்திலோ அல்லது படைப்பிலோ எதோ பிரச்சினை (அந்த பிரச்சினை சரியா தவறா என்பது முக்கியமல்ல) என்ற "கொள்கையினை" கொண்டவன் நான். ஆகையால் இந்த உரையாடல்கள் ஒரு vicariousயாக உணர்ச்சிகளை அனுபவிப்பது போன்ற தோற்றத்தினை எனக்கு தந்ததால், என்னை இவ்வுரையாடல்கள் அவ்வளவாக கவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தில் இருந்து takeaways மற்றும் to-do list என்று பார்த்தால் :&lt;br /&gt;&lt;br /&gt;1. ஸர்ஜி ஐஸன்ஸ்டைனின் பேட்டில்ஷிப் பொட்டெம்கின், இங்மார் பெர்க்மெனின் செவந்த் சீல், குராஸாவாவின் &lt;a href="http://www.imdb.com/title/tt0042876/"&gt;ரஷோமான்&lt;/a&gt;, சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, &lt;a href="http://www.imdb.com/name/nm0000019/"&gt;ஃப்ட்ரிக்கோ ஃபெலினியின்&lt;/a&gt; &lt;a href="http://www.imdb.com/title/tt0053779/"&gt;லா டோல்ஸ் விடா&lt;/a&gt;, ஜெயகாந்தனின் &lt;a href="http://kvraja.blogspot.com/2004/11/blog-post.html"&gt;உன்னைப் போல் ஒருவன்&lt;/a&gt;, ஆர்ஸன் வெல்ஸின் &lt;a href="http://maraththadi.com/article.asp?id=1071"&gt;சிட்டிஸன் கேன்&lt;/a&gt;, &lt;a href="http://imdb.com/title/tt0077131/"&gt;அக்ரகாரத்தில் கழுதை&lt;/a&gt; படங்களைப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பீர் முகமதுவின் - திரைப்படம் ஒரு வாழும் கலை புத்தகத்தினைப் படிக்க வேண்டும் (சென்னையில் எங்கு தேடியும் இது கிடைக்கவில்லை :( )&lt;br /&gt;&lt;br /&gt;3. வெ.சா விதிவிலக்கு என்று கருதுகிற தமிழ் படங்களான திக்கற்ற பார்வதி, தாகம், அவள் ஒரு தொடர்கதை மற்றும் நந்தனார், வள்ளித்திருமணம், பவளக்கொடி போன்ற "இசைப்படங்களையும்" பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தில் குறை என்று பார்த்தால் :&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும் நிரம்பியுள்ளது (கொஞ்சம் அதிகமாகவே). நினைத்திருந்தால் காவ்யா பதிப்பகத்தார் எளிதில் சரி செய்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பல கட்டுரைகளில் உள்ள சொற்றொடர்களின் கட்டமைப்பு, தலையினைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது. சில சமயம் மூன்று அல்லது நான்கு முறைபடித்தால் மட்டுமே (சில சமயம்) விளங்குகிறது. (&lt;em&gt;எடுத்துக்காட்டு&lt;/em&gt;: கார்டியாக்குக்கு நகைக்கலையில் அல்லாது வேறு எதிலும் ஈடுபாடு கிடையாது. தன் மாளிகையை விட்டு, அநேகமாக அவன் வெளியே போவதே அவன் வழியில் கார்ட்டியாக்குக்கு தன் மகளிடம் அன்பும் பாசமும் உண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்பட விமர்சனம், திரைப்பட விழா விமர்சனம், திரைப்பட புத்தகங்களின் விமர்சனம் என்று இப்புத்தகத்தினை பிரித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் சினிமாவின் 80 ஆண்டு கால வரலாற்றில் ஒரு நல்ல நடிகனை நாம் தமிழில் கண்டதில்லை. ஒரு நல்ல திரைப்படத்தினை நாம் பெற்றதில்லை. நம் வாழ்வோடு உறவு கொண்ட அர்த்தமுள்ள திரைப்படத்தை தந்ததில்லை. பத்தாயிரக் கணக்கிலான அந்த அம்பாரக் குவியலில் சினிமா என்ற சாதனத்தின் பொருள் தெரிந்து இனம் காணக்கூடிய ஒன்றுகூட நமக்கு கிடைக்கவில்லை" என்றும் வெதும்புகிறார் வெ.சா. தமிழ் சினிமா வெ.சா வெறுக்கும் அளவுக்கு "அவ்வளவு" மோசமா என்ன ?. எனக்கு விடை தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;strong&gt;திரை உலகில்&lt;/strong&gt; -&lt;strong&gt; வெங்கட் சாமிநாதன்&lt;/strong&gt;. காவ்யா வெளியீடு. விலை : 85 ரூபாய்)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-110301729188189540?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/110301729188189540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=110301729188189540' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/110301729188189540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/110301729188189540'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/12/blog-post.html' title='திரை உலகில் - ஒரு வாசிப்பு அனுபவம் '/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-110140839450690292</id><published>2004-11-26T01:06:00.000+05:30</published><updated>2006-11-01T18:55:15.196+05:30</updated><title type='text'>Performance Appraisal</title><content type='html'>(&lt;a href="http://www.cognizant.com/"&gt;நான்&lt;/a&gt;) வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் எனது &lt;a href="http://www.sastra.edu/"&gt;பொறியியல் கல்லூரி&lt;/a&gt;க்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எங்கள் கல்லூரியில், அஸெஸ்மெண்ட் கமிட்டி ஏதாவது வந்தால் போதும். கல்லூரி ஜொலிக்க ஆரம்பித்துவிடும். புது சுண்ணாம்புப் பூச்சு, மெஸ்ஸில் அறுசுவை நடராஜன் சாப்பாடு என்று அலங்காரமாகிவிடும். அதைப் போலவே, எங்கள் அலுவலகத்தில் வெளிநாட்டு க்ளையண்ட் யாராவது வந்தால் போதும், பூத் பங்களா போல் இருக்கும் எங்களது ஒயிட்ஸ் ரோடு அலுவலகம் அசத்தலாகிவிடும். சிவப்பு கம்பளமென்ன, பூந்தொட்டிகளில் ஒரு வார வாடகைக்கு எடுத்துவந்த அலங்கார செடிகள் என்ன, ஷூ பாலிஷ் போடும் மெஷின் என்ன, எங்களுடைய மேஜைகளுக்கு திடீரென வந்த சுத்தம் தான் என்ன . அப்பப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போல இன்னொன்று தேர்வு. செமஸ்டர் தேர்வு நெருங்கி வந்தால் போதும். அப்போது தான் சிலபஸ் புரட்ட ஆரம்பித்து, எதை படிக்காமல் விடலாம் என்று முதலில் யோசித்து, எதைப் படிக்க வேண்டுமோ அதை படிக்காமல், முன்பே படித்தவனிடம் கொஞ்சம் கதை கேட்டு, தேர்வில் போய் hints develop செய்து மார்க் வாங்கிவிடலாம். இந்த ( &lt;a href="http://recursivesindhanai.blogspot.com/"&gt;1&lt;/a&gt; , &lt;a href="http://vacantexpressions.blogspot.com/"&gt;2&lt;/a&gt; ) இரண்டு பேர்தான் நான் எழுதும் தேர்வுகளின் கதையாசிரியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்வினைப் போலவே, அலுவலகங்களுக்கு என்ன என்று தேடினால், பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடக்கும் performance appraisal. டிசம்பர் நெருங்கும் நேரம் வந்தாலே போதும். பிரமோஷன் கிடைக்க/எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எல்லா team leadersக்கும், project leadersக்கும் projectன் மேல், அதில் உள்ள மக்களின் மேல் ஒரு அளவுகடந்த அன்பு வழிய ஆரம்பித்துவிடும். அடிக்கடி மீட்டிங் போட்டு team building என்ற பேரில் கடியை போடுவார்கள். ஊக்கமளக்கிற வகையில் பேசுகிறேன் என்று கூறி தூக்கம் வரவைப்பார்கள் (ஆகா, கவித கொட்ட ஆரம்பிச்சுடுச்சே...த்ஸு..த்ஸு). Projectன் best practices எல்லாம் exhibit செய்ய வேண்டும் என்று சொல்லி மணிக்கணக்கில் மைக்ரோஸாஃப்ட் ஆஃபிஸில் வேலையைக் கொடுப்பார்கள். மற்ற leadersகளிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட பல கிலோபைட் கணக்கில் ப்ரெஸெண்டேஷன்களையும், டாக்குமெண்ட்களையும் அடித்து தள்ளுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நான் என் மேட்டருக்கு வரேன். இந்த performance appraisal , in spirit ஒரு மிக நல்ல concept. அதை ஒழுங்காக செயல்படுத்தினால், நம்மைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினையும் செய்ய முடியும், திறமைகளை வளர்த்து சீக்கிரம் முன்னேறவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த வருட ஆரம்பத்தில், ஒரு டாக்குமெண்ட்டில் நான் பார்த்த திரைப்படங்கள், நாடகங்கள், படித்த புத்தகங்கள் பற்றி குறிப்பு எடுப்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தேன். ஆக நான் பார்த்த அந்த திரைப்படங்களினைப் பற்றிய ஒரு பார்வைதான் இது. (&lt;span style="font-style: italic;"&gt;இதுக்குத் தான் இவ்ளோ பில்டப்பு&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம், இன்று வரை சரியாக அறுபது திரைப்படங்களினைப் பார்த்திருக்கிறேன். ஒரு திரைப்படத்திற்கு சராசரியாக நாற்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கிட்டத்திட்ட 2500 ரூபாயினை, என் ஒரு மாத சம்பளத்தின் ஏழில் ஒரு பகுதியினை இதற்காகவே செலவு செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் நான் பார்த்ததிலே எனக்கு மிகவும் பிடித்த படங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;Casablanca - இதற்கான &lt;a href="http://santhoshguru.blogspot.com/2004/07/blog-post_21.html"&gt;காரணம்&lt;/a&gt;&lt;/li&gt;   &lt;li&gt;Raging Bull - ராபர்ட் டி நிரோவின் பிரமாதமான நடிப்பு, Martin Scorcese வின் இயக்கம்&lt;/li&gt;   &lt;li&gt;The Insider - உண்மைக் கதை, ரஸ்ஸல் க்ரொவ் மற்றும் அல் பசினொவின் நடிப்பு&lt;/li&gt;   &lt;li&gt;The Messenger - ழான் எனப்படும் Joan of Arc பற்றிய கதை&lt;/li&gt;   &lt;li&gt;Midnight Cowboy - ராபர்ட் டி நிரோ மற்றும் ஜான் வாய்ட்டின் நடிப்பு&lt;/li&gt;   &lt;li&gt;The Last Samurai - சமுராய்கள் பற்றிய கதை மற்றும் டாம் க்ரூஸ் மற்றும் கென் வாட்டனபேவின் நடிப்பு &lt;/li&gt;   &lt;li&gt;Passion of the Christ - தெரிந்த கதைதான் என்றாலும் படமாக்கிய விதம் எனக்கு பிடித்திருந்தது&lt;/li&gt;   &lt;li&gt;Lock Stock and Two Smoking Barrels - டாரண்டினோ பாணியில் சொல்லப்பட்ட சில தாதாக்களின் கதை&lt;/li&gt;   &lt;li&gt;Wonderboys - மைக்கல் டக்ளஸ் மற்றும் டாபி மெகையர் இருவரின் அலட்டலில்லாத நடிப்பு, தெளிவான மற்றும் எளிமையான திரைக்கதை&lt;/li&gt;   &lt;li&gt;Scarface - தலைவர் அல் பசினோ தான் காரணம்&lt;/li&gt;   &lt;li&gt;Paycheck - நல்ல த்ரில்லர் மற்றும் ஒரு Sci-fi  &lt;/li&gt;   &lt;li&gt;Finding Nemo &amp; Shrek 2 - காரணமே வேண்டாம்,  இரண்டு முறை பார்த்தாலும் அலுக்காது&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;Morning Raga - நல்ல கதை, ஷபனாவின் நடிப்பு, மணி ஷர்மா மற்றும் அமித் ஹேரியின் அற்புதமான இசை&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;விருமாண்டி - வித்தியாசமான கதை சொல்லும் பாணி (மோசமான கிளைமேக்ஸ் என்றாலும் கூட), இளையராஜாவின் இசை, கமலின் இயக்கம்.&lt;/li&gt;   &lt;li&gt;ஆய்த எழுத்து - மாதவன், பாரதிராஜா மற்றும் மீரா ஜாஸ்மீனின் நடிப்பு, எனக்கு மிகவும் பிடித்த கதை, கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை&lt;/li&gt;   &lt;li&gt;7/G ரெயின்போ காலனி - (ரொம்ப சூப்பரான கதை இல்லையென்றாலும்) நல்ல திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தலான இசை&lt;/li&gt;   &lt;li&gt;கனவு மெய்ப்பட வேண்டும் - பாராட்டப் படவேண்டிய படம், நல்ல கதை, மகேஷின் இசை,  ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோகனசுந்தரம் கதாபாத்திரம்&lt;/li&gt;   &lt;li&gt;கில்லி - பாப்கார்ன் கோக்கோடு சென்று மூளையினை உபயோகிக்காமல் அனுபவிக்க வேண்டிய மசாலா படம்&lt;/li&gt;   &lt;li&gt;வசூல்ராஜா - முன்னாபாய் பார்க்கவில்லை அதனால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;த்வீபா (Dweepa - Kannada) - கிரீஷ் காசர்வள்ளியின் படம் இது. சௌந்தர்யாவின் அருமையான நடிப்பும், கிரீஷின் திரைக்கதை மற்றும் இயக்கம்&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;தேவ் - ஓம் பூரி, அமிதாப்பின் நடிப்பு, கோவிந்த் நிஹ்லானியின் "அனல் பறக்கும்" வசனம் மற்றும் இயக்கம்&lt;/li&gt;   &lt;li&gt;லக்ஷயா &amp;amp; நாச் - சிம்பிளான கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் பிடித்திருந்தது&lt;/li&gt;   &lt;li&gt;காக்கி - சூப்பர் மசாலா&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;ஒரு ஃப்ரேமாக வெறுத்து வெறுத்து பார்த்த படங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;   &lt;li&gt;Gothika - தலைவலி&lt;/li&gt;   &lt;li&gt;ஜெய் - கண்றாவி&lt;/li&gt;   &lt;li&gt;மன்மதன் - நினைப்புதான்,குப்பையிலும் கடைந்து எடுத்த குப்பை. வித்தியாசமாம், மண்ணாங்கட்டி.&lt;br /&gt;&lt;/li&gt;   &lt;li&gt;எங்கள் அண்ணா - பாதியிலே நானும் &lt;a href="http://throughmylookingglasses.blogspot.com/"&gt;இவனும்&lt;/a&gt; ஓடிவந்துட்டோம்&lt;/li&gt;   &lt;li&gt;ருத்ராக்ஷ் - கொடுமைடா சாமி&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;சில படங்கள் மற்றவர்கள் சூப்பர் என்றார்கள், ஆனால் என் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. அவை (Sanjuro , The Guns of Navarone, Monster, Troy, Mary Poppins, ஆட்டோகிராஃப்)&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி காசையும் வீணாக்கியோ அல்லது தூக்கத்தை கெடுத்தோ பார்த்தவை (Veer Zaara, Chameli, அருள், M.குமரன், எதிரி, செல்லமே, பேரழகன் Once upon a time in Mexico, Spiderman 2, ......)&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல் கண்டமேனிக்கு படம் பார்த்து வைத்திருக்கிறேன் நான். பொதுவாக தீபாவளி வந்தால் இப்படித்தான் கண்டபடி பலகாரம் தின்றுவிட்டு மலங்க மலங்க முழிக்கும் போது, பாட்டி கருப்பு நிறத்தில் குமட்டிக் கொண்டு வரவைக்கும் ஒரு லேகியத்தினை வாயில் திணித்து வயிற்றை சரி செய்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கன்னாபின்னாவென படம் பார்த்து வைத்திருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக வெங்கட் சாமிநாதனின் "திரை உலகில்" என்ற லேகியத்தினையும் தின்று விட்டேன். அடுத்த பதிவில் என் வாசிப்பு அனுபவத்தினையும், இந்த performance appraisal மூலம் வந்த முடிவினையும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-110140839450690292?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/110140839450690292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=110140839450690292' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/110140839450690292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/110140839450690292'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/11/performance-appraisal.html' title='Performance Appraisal'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-109958101994708760</id><published>2004-11-04T20:32:00.000+05:30</published><updated>2004-11-04T20:54:08.040+05:30</updated><title type='text'>தந்தை எவ்வவழி......</title><content type='html'>சமீபத்தில் வெளிவந்து ஹிட் என்று சொல்லப்பட்ட படம் "M. குமரன்". அதில் வரும் பாடல் தான் &lt;a onmouseover="ddrivetip('இது ஒரு oxymoron போல இல்லை !!!', 'white', 300)" style="BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; BORDER-LEFT: 0px; COLOR: rgb(0,0,0); BORDER-BOTTOM: 1px dotted; TEXT-DECORATION: none" onmouseout="hideddrivetip()" href="http://tamilsongs.allindiansite.com/m_kumaran_so_mahalakshmi.html" target="_new"&gt;"சென்னை செந்தமிழ் ... மறந்தேன் உன்னாலே"&lt;/a&gt;. கேட்டவுடனேயே இது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் இப்போது பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் எங்கேயோ கேட்டது போலவே தோன்றியது. பிறகுதான் தெரிந்தது தேவாவின் மகன், ஸ்ரீகாந்த் தேவா இசையமத்துள்ளார் என்று. எந்த பாட்டிலிருந்து சுட்டிருக்கிறார் தெரியுமா : &lt;a href="http://www.morningraga.com" target="_new"&gt;"மஹா கணபதிம்&lt;/a&gt;&lt;a href="http://www.raaga.com/channels/tamil/movie/T0000159.html" target="_new"&gt;... மனஸஸ்மராமி..." &lt;/a&gt;. எப்படி பத்திரிக்கைகள் இதை போட்டு கிழிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-109958101994708760?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/109958101994708760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=109958101994708760' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109958101994708760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109958101994708760'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/11/blog-post.html' title='தந்தை எவ்வவழி......'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-109587652781472092</id><published>2004-09-22T23:08:00.000+05:30</published><updated>2004-09-22T23:43:27.610+05:30</updated><title type='text'>ஆத்மா</title><content type='html'>&lt;img src="http://images.amazon.com/images/P/B00004UEJG.01._PE_SCMZZZZZZZ_.jpg"&gt; நேற்று &lt;a href="http://www.landmarkonthenet.com/"&gt;லேண்ட்மார்க்கில்&lt;/a&gt; ஒரு இசைத்தொகுப்பு, ஆத்மா (&lt;span style="font-size:130%;"&gt;atma : soul&lt;/span&gt;), வாங்கினேன். 2000ல் வந்த பழைய தொகுப்பு அது. பாம்பே ஜெயஸ்ரீ பாடி வெளிவந்த பாரதியாரின் பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி பற்றி அதில் இருந்த முன்னுரை. இதன் முதல்வரி எந்த அளவுக்கு சரி என்று எனக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;An enigma called Subramanya Bharathi. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;He never saw his 41st birthday. But he penned over 3000 poems and stories, works that have inspired millions of the people for years. His intensity, boldness, sensitivity and sheer depth of feelings made him one of the principal thinking-poets of India.&lt;br /&gt;&lt;br /&gt;Nature;sensual appreciation of a woman's beauty; patriotisms;devotional ecstasy... just a few of the things that drove him to create verse of beautiful poetry.&lt;br /&gt;&lt;br /&gt;What was he like ? It would be just as good as wanting to define 'wind' or 'breeze' to someone who has never heard of either. A few things have to be felt, to be understood. Like the capricious nature of the wind that at once caresses the sense and challenge them. That is at once calm and powerful. Like the many facets of Subramanya Bharathi.&lt;br /&gt;&lt;br /&gt;To really touch your soul, we believe that we don't need words. Not when we have with us the most basic and powerful language of all. The language of music.&lt;br /&gt;&lt;br /&gt;"To look through his eyes, close your own. Open your heart. And allow him to touch Your soul ... your atma"&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;சுரேஷ் கோபாலன் மற்றும் சபேஷ் ஆகியோர் இந்த தொகுப்பிற்கு இசை அமைத்துள்ளனர். பாரதியாரின் பாடல்களான "அக்னி குஞ்சு" , "மனதில் உறுதி வேண்டும்" போன்ற பாடல்களை வெகு வேகமான இசையில் தான் நான் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் மிகவும் மென்மையாக, வித்தியாசமானதாக (முக்கியமாக ரசிக்கக் கூடிய) அளித்திருக்கிறார்கள். அதே போல், "சுட்டும் சுடர்விழிதான்..", "நல்லதோர் வீணை" போன்ற பாடல்களை ரொம்பவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நடையில் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பிலோ, இவ்விரண்டு பாடல்களும் மிகவும் மென்மையாக, ஒரு தாலாட்டினைப் போல் இருக்கிறது. மிகவும் அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது "மழை" என்ற பாடல்தான். ஒன்றரை நிமிடம் தான் வந்தாலும் கேட்டவுடன் தாளம் போட வைக்கும் பாடல் அது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது. மிகவும் வித்தியாசமான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;( &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/B00004UEJG/ref=m_art_li_2/102-9650824-7819357?v=glance&amp;s=music#product-details"&gt;&lt;span style="font-size:130%;"&gt;atma : soul&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;; A glimpse into the poetry of Subramanya Bharathi&lt;/span&gt;. பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ, இசை: சுரேஷ், சபேஷ்; ஒலிநாடா : நாற்பது ரூபாய்; குறுந்தகடு : (லேண்ட்மார்க்கில்) ரூ.190 )&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-109587652781472092?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/109587652781472092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=109587652781472092' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109587652781472092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109587652781472092'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/09/blog-post_22.html' title='ஆத்மா'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-109535974346299676</id><published>2004-09-16T23:51:00.000+05:30</published><updated>2004-09-17T00:14:13.986+05:30</updated><title type='text'>அமிர்தசரஸில் சில "ஆத்மி"க்கள்</title><content type='html'>என்னுடைய ப்ராத்மிக் ஹிந்தி அறிவினையும், என் தம்பியின் ராஷ்ட்ரபாஷா அறிவினையும் நம்பி &lt;a onmouseover="ddrivetip('(எங்க நைனாவும், அம்மாவும் தான்)', 'white', 200)" style="BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; BORDER-LEFT: 0px; COLOR: rgb(0,0,0); BORDER-BOTTOM: 1px dotted; TEXT-DECORATION: none" onmouseout="hideddrivetip()"&gt;இரு ஆத்மாக்கள்&lt;/a&gt; அமிர்தசரஸ் வரை சென்று வரலாம் என்று ரிஸ்க் எடுத்தார்கள். என் தம்பியும் நானும் ஒரளவு &lt;a onmouseover="ddrivetip('(ஹிந்தி எண்டு சொல்ல ஏலாது)', 'white', 250)" style="BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; BORDER-LEFT: 0px; COLOR: rgb(0,0,0); BORDER-BOTTOM: 1px dotted; TEXT-DECORATION: none" onmouseout="hideddrivetip()"&gt;ஹிந்தி&lt;/a&gt; பேத்தி அமிர்தசரஸ் வரை சமாளிச்சிட்டோம். அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ளே தங்குமறைக்கான அலுவலகத்தின் அருகே அனைவரும் தூக்கக் கலக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவோ, என் தம்பி மற்றும் என்னுடைய ஹிந்தி உதவி இல்லாமலேயே சமாளிக்கலாம் என்று அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு கவுண்ட்டருக்குச் சென்று தன் &lt;a href="http://www.uiic.co.in/"&gt;"யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ்"&lt;/a&gt; விசிட்டிங் கார்டினைக் காட்டி , "We want room" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கே இருந்த சர்தார்ஜி, அதைப் பார்க்காமல், ஹிந்தியில் (பஞ்சாபியாக கூட இருந்திருக்கலாம்) எதோ சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அப்பாவோ, "No. Hindi, only English"&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார்ஜி, என்ன நினைத்தாரோ என்னவோ, உரத்த குரலில் "கித்னி ஆத்மி ?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை ரொம்பவும் அறிவாளித்தனமாக, "No. I'm not from Army. I'm insurance".&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த இன்னொரு சர்தார்ஜியுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். பிறகு, ""கித்னி ஆத்மி ?" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை விடாக்கண்டன் , "No. Army, insurance, insurance"&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு சர்தார்ஜிக்களும் ரொம்ப சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டு, ஆகா அப்பா மானம் கப்பலேறுதே என்று அரக்க பரக்க சென்று. "ச்சார் ஆத்மி. கம்ரா ஹேனா ?", என்று தத்துபித்தி சமாளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரி கொஞ்சம் படங்காட்டுவோம். இதோ எங்களுடைய ஒளி ஓவியங்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது 1984, பிந்தரன்வாலேவினைப் பிடிக்க இந்திய ராணுவம் முயற்சி செய்த போது கோவிலுக்கு ஏற்பட்ட சேதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Old_Amritsar.jpg" /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.outlookindia.com/full.asp?fodname=20040823&amp;fname=TCol+Mark&amp;amp;sid=1"&gt;(நன்றி: அவுட்லுக், வரலாறு சிறப்பிதழ்)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள படம் சென்ற வாரம் நாங்கள் &lt;a onmouseover="ddrivetip('(ஹி..ஹி..எந்த படம் நாங்கள் எடுத்ததுன்னு..நீங்களே கண்டுபிடிச்சிடலாம்)', 'white', 300)" style="BORDER-RIGHT: 0px; BORDER-TOP: 0px; BORDER-LEFT: 0px; COLOR: rgb(0,0,0); BORDER-BOTTOM: 1px dotted; TEXT-DECORATION: none" onmouseout="hideddrivetip()"&gt;எடுத்தது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/New_Amritsar.jpg"&gt;&lt;img style="WIDTH: 429px; HEIGHT: 410px" height="442" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/New_Amritsar.jpg" width="483" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/ShimmeringAmritsar.jpg"&gt;&lt;img style="WIDTH: 605px; HEIGHT: 398px" height="607" src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/ShimmeringAmritsar.jpg" width="772" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-109535974346299676?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/109535974346299676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=109535974346299676' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109535974346299676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109535974346299676'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/09/blog-post_16.html' title='அமிர்தசரஸில் சில &quot;ஆத்மி&quot;க்கள்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-109536212716598183</id><published>2004-09-16T22:40:00.000+05:30</published><updated>2004-09-17T00:49:03.096+05:30</updated><title type='text'>காந்தி, அண்ணாதுரை, துக்ளக்</title><content type='html'>சென்ற வாரம் வந்த துக்ளக்கில் ஒரு செய்தி இது. வைகோவுக்கும் , தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா என்பவருக்கும் கடித விவாதம் நடக்கின்றது. சாவர்க்கர், காந்திஜி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்; ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொண்டவர் என்ற வைகோவின் கடிதத்திற்கு பதிலாக ராஜா எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சக பா.ஜ.கவினரைப் போல சாவர்க்கரை defend செய்து பல வாதங்கள் வைத்துள்ளார். ஆனால் என்னைக் கவர்ந்தது காந்தியினைப் பற்றியும், விடுதலைப் போராட்டம் பற்றியும் அண்ணாதுரை சொன்னது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"..... சாவர்க்கர் காந்திஜியினைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்பது உங்களது குற்றச்சாட்டு. ஒருவருடைய உயிரைக்கொல்வதை, அவரது புகழைக் கொல்வது மிகவும் கொடுமையானது என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். காந்திஜியின் புகழைக் கொன்று அண்ணாதுரை அவர்கள் பேசியதை தங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். 1946ஆம் ஆண்டு காந்திஜி சென்னையில் தங்கியிருந்த பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை தரிசிக்க வந்தனர். அதைப் பார்த்து தாங்கிக் கொள்ளாத அண்ணாதுரை, "காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி" - என்று காந்திஜியினை காமாந்தகராக கூறியவர் அண்ணாதுரை. ஆமாம் அந்த காமந்தகாரர் மீது அண்ணாவின் தம்பியான உங்களுக்கு கரிசனம் எத்தனை நாட்களாக ?&lt;br /&gt;&lt;br /&gt;1942ல் காந்திஜி "வெள்ளையனே வெளியேறு" என்று அறை கூவல் விட்டார். "செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள்" என்று மக்களுக்கு கட்டளையிட்டார். அப்போது அண்ணா, என்ன சொன்னார் என்பது தங்களுக்கு நினைவு இருக்கும் : "தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரொப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது" என்றார்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;இதைப் படித்தவுடன் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. "&lt;a href="http://pavithra.blogspot.com/2004_05_09_pavithra_archive.html"&gt;இருவர்&lt;/a&gt;" படத்தில் வருவது போன்றது, தமிழக அரசியல் வரலாறு என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது, history is &lt;strong&gt;his&lt;/strong&gt; story. பல முறை &lt;a href="http://www.tamil.net/people/pksivakumar/"&gt;ஜெயகாந்தன்&lt;/a&gt; ஏன் திராவிட கட்சிகளை &lt;a href="http://www.thinnai.com/pl100101.html"&gt;வெறுக்கிறார்&lt;/a&gt; என வியந்திருக்கிறேன். இப்ப விளங்குது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-109536212716598183?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/109536212716598183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=109536212716598183' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109536212716598183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109536212716598183'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/09/blog-post_109536212716598183.html' title='காந்தி, அண்ணாதுரை, துக்ளக்'/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-109491557593940651</id><published>2004-09-11T20:33:00.000+05:30</published><updated>2004-09-12T01:22:54.703+05:30</updated><title type='text'>சோளக்கருது, வாகா மற்றும் "நாற்காலிகாரர்" </title><content type='html'>சென்ற வாரம், ஒரு சுற்றுலாவிற்காக தில்லி மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கு சென்றிருந்தேன். அமிர்தசரஸிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அட்டாரி-வாகா எல்லை. அந்தப் எல்லைப்பகுதியிலிருந்து லாஹூர் வெறும் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே தினமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுக் கொடிகள், ஒரே சமயத்தில் காலையில் ஏற்றப்பட்டு, ஒரே சமயத்தில் மாலையில் இறக்கப் படுகிறது. அந்த எல்லையில் நடந்த சில கூத்துக்களும், என் அனுபவமும் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Flag_DeHoisting.jpg" target="_new" border="0"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Flag_DeHoisting.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Hands.jpg" target="_new" border="0"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/Hands.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன் ஒரு பீடிகை மற்றும் சுயதம்பட்டம். நாட்டுப்பற்று என்றால் தேசியகீதத்தினை நன்றாக தெரிந்துவைத்துக் கொள்வது, எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டுக்கொடுக்காமல் இருப்பது (தன் நாடு தவறு செய்திருந்தால் கூட) என்று என் நண்பர்கள் பலர் கூறுவார்கள். அதற்கு எதிர்வினையாக நானோ, தேசியகீதமும், பழம்பெருமைகளும் ஒருவன் அறியவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை, செயலில் உருப்படியாக செய்து காட்டுவதே சிறந்தது என்று நான் வாதிடுவேன். இது அடிக்கடி நிகழும் எங்கள் விவாதங்களில் ஒன்று. சில சமயம் விவாதங்களில் என்னை ஒரு anti-nationalist என்றும், விசால பார்வை என்ற பெயரில் நாட்டுப்பற்று அற்றவன் என்றும் நண்பர்கள் என்னை குறை கூறுவார்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பெற்றோர்களோடு அமிர்தசரஸ் பொற்கோயிலை கண்டுவிட்டு, வாகா எல்லைக்கு மாலை சுமார் நான்கு மணியளவில் சென்றோம். கிரிக்கெட் மாட்ச் காணவந்த ரசிகர்கள் போல இந்திய கொடியுடன் அங்கே செம கும்பல். மாலை ஆறு மணியளவில் அங்கே நடக்கவிருக்கும் ஒரு parade க்காகத் தான் இவ்வளவு கூட்டம். ஐந்து மணியளவில் கதவை திறந்து அங்கிருந்த ஒரு பெரிய கேலரியில் அமர வைத்தனர். சுமார் ஆயிரத்தி ஐநூறு பேர் உட்காரும் அளவிற்கு, பெரிதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/IndiaGallery.jpg" target="_new" border="0"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/IndiaGallery.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய இரும்புக் கதவு, அதனருகே ஒரு நுழைவாயில் போன்ற சின்னம். இதுதான் அந்த வாகா எல்லை. எல்லையின் மற்ற பக்கத்தில் மின்சாரம் பாய்கின்ற இரும்பு முள்வேலி நீண்டு இருக்கிறது. இந்திய கேலரியில் இருந்து பார்த்தால் பாகிஸ்தான் நுழைவாயிலும், அங்கே அருகே உள்ள ஒரு சிறிய தோட்டமும் தெரிகிறது. பாகிஸ்தான் பக்கமும் அதைப் போலவே ஒரு கேலரி, ஐநூறு பேர் அமரும் வசதியோடு இருந்தது. ஆனால் ஆண்களும் பெண்களும் தனித்தனி பகுதியில் அமர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/TheBorderGate.jpg" target="_new" border="0"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/TheBorderGate.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/PakGallery.jpg" target="_new" border="0"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/PakGallery.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கேலரியில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் வைத்து , பல தேசபக்தி பாடல்கள் hi-volumeல் ஒலித்துக் கொண்டிருந்தது. பலர் கைகளைத்தட்டிக் கொண்டு குழுவாக அதே பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர். இதுவரை எல்லாமே நன்றாக இருந்தது. அதுக்கப்பறம் தான் ஆரம்பித்தது கூத்து. பாகிஸ்தான் கேலரியில் இதை போன்ற ஒரு ஸ்பீக்கரோ எதுவும் இல்லை. அங்கே அமைதியாக அனைவரும் உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். இந்திய கேலரியில் ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்த அறையில் இருந்து ஒரு ஆள், கையில் மைக்கோடு வந்தார். உச்சஸ்தாயியில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத், சாரே ஜஹான்ஸே அச்சா, வந்தே மாதரம் என்று அவர் சொல்ல, இந்திய மக்களும் சொன்னார்கள். பிறகு பாடல் திரும்ப ஒலிக்கும். இது போல ஐந்து முறை நடந்தது. ஆறவது முறை அனைவரும் கத்தி முடிக்க, பாகிஸ்தான் பக்கதிலிருந்தும் மக்கள் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கத்தினர் (அங்கே மைக் மற்றும் ஸ்பீக்கர் இல்லை). ஆனால் இங்கிருந்தோ மக்கள், உடனே அவர்களை கேரோ செய்வது போல் "ஊஊஊ...ஹிஹிஹி" என்று கூவினர். இதைப் போலும் ஒரு மூன்று முறை நடந்தது. என் அருகில் இருந்த சில இளைஞர்கள், "முர்தாபாத்..முர்தாபாத்" என்றும் கூவினார்கள். நம் மக்கள் செய்தது கண்றாவியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் அடங்கி ஒய்ந்த பின்னர் அந்த கொடியிறக்க நிகழ்ச்சி ஆரம்பித்தது. நம் இந்திய மேஜர் ஒரு, மைக்கில் சென்று எதோ ஒரு கமேன்டை உரக்க கத்தினார். (ந.முத்துசாமியின் "நாற்காலிக்காரர்" என்ற நாடகத்தில் ஒருவர் ராணுவத்தில் கட்டளையிடும் முறையினை கிண்டல் செய்யும் வகையில் "பரே.......ட் தத்தக்....கா புஸ்கா" என்று கத்திவிட்டு, மார்ச் ஃபாஸ்ட் செய்வார். இந்த சமயம் பார்த்து அந்த நாடகம் நியாபகத்தில் வந்து தொலைத்தது). பிறகு இரு நாட்டு வீரர்களும் காலை தலைவரைக்கும் நிமிர்த்தி, மார்ச் ஃபாஸ்ட் செய்து, எல்லைக் கதவுகளை திறப்பார்கள், இரு நாட்டு மேஜர்களும் (மேஜர் என்று தான் நினைக்கிறேன்) ஒரு சமிக்ஞைக்குப் பிறகு கைகுலுக்கி விட்டு, மேலும் சில ஃபார்மாலிட்டீஸ் முடிந்த பிறகு. ஒரே சமயத்தில் கொடியினை இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு எல்லைக் கதவுகளும் மூடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/TheSalute.jpg" target="_new" border="0"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v360/santhoshguru/TheSalute.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக இந்த சடங்கு என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. இந்த கொடியிறக்கத்தினை பார்க்க வரும் மக்களினால் அங்கே சோளக்கருது, பொறிஉருண்டை, கோலா விற்கும் வியாபாரிகளுக்கும், டேக்ஸி ஓட்டுநர்களுக்கும் தான் லாபம். மற்றபடி அதன் மகத்துவம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது எல்லாம் முடிந்த பிறகு என்னை உருத்தியது, என் அருகில் இருந்த அந்த "முர்தாபாத்" இளைஞர்களும், கேரோ ஆசாமிகளும் தான். எதற்காக இன்னமும் நம் மக்கள், பாகிஸ்தான் மக்களை வெறுக்க வேண்டும். அரசியல்வாதிகளை வெறுப்பதில் வேண்டும் என்றால் அவரவர்களுக்கும் ஒரு நியாயம் இருக்கலாம். மக்களை வெறுப்பதற்கான காரணம் எனக்கு இன்னும் விளங்கவில்லை. நம் தலைமுறையினர் 1947 பிரிவினையினால் ஏற்பட்ட காயங்களை இன்னமும் சொறிந்துக் கொண்டு இருக்கிறார்களா, இல்லை ஒட்டு மொத்த பாகிஸ்தான் மக்களும் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் என்று எண்ணுகிறார்களா?. எனக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-109491557593940651?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhoshguru.blogspot.com/feeds/109491557593940651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6886596&amp;postID=109491557593940651' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109491557593940651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6886596/posts/default/109491557593940651'/><link rel='alternate' type='text/html' href='http://santhoshguru.blogspot.com/2004/09/blog-post_11.html' title='சோளக்கருது, வாகா மற்றும் &quot;நாற்காலிகாரர்&quot; '/><author><name>Santhosh Guru</name><uri>http://www.blogger.com/profile/10642313515300514426</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://static.flickr.com/31/67404498_d705a1d1c1.jpg?v=0'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6886596.post-109461872438014069</id><published>2004-09-08T10:15:00.000+05:30</published><updated>2004-09-09T09:53:54.260+05:30</updated><title type='text'>Happy B'day Google !!!</title><content type='html'>&lt;img src="http://www.google.com/logos/6th_birthday_results.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- Google Fan&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6886596-109461872438014069?l=santhoshguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' 
